ஒரு எழுத்து உங்கள் தலையெழுத்தை மாற்றுமா? நிச்சயமாக, இந்த இலையில் எழுதும் அந்த ஒரு எழுத்து உங்கள் தலையெழுத்தை மாற்றி, எப்பேற்பட்ட ஏழ்மையையும் போக்கி செல்வந்தராகும் யோகத்தை உங்களுக்கு தேடி தரும்.

- Advertisement -

பணம் பத்தும் செய்யும், பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இவை எல்லாமே பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நம் முன்னோர்கள் சொன்ன பழமொழிகள். இதிலிருந்து பணம் எந்த அளவிற்கு நம் வாழ்க்கையில் முக்கியம் என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பணம் இல்லாத ஒரு நாள் வாழ்க்கை கூட அத்தனை கொடியது. பணமே வாழ்க்கை இல்லை என்றாலும், பணம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த பண வரவு உங்களிடம் தாராளமாக இருக்க இந்த எளிய பரிகாரம் செய்தால் போதும் உங்களிடம் பணம் வரவு இருந்து கொண்டே இருக்கும். அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்ய 108 செம்பருத்தி இலைகள், செம்பருத்தி இலையின் காம்பு ஒன்று, சந்தன பொடி, நல்லெண்ணெய், வெள்ளை எருக்கம் பிள்ளையார், இந்த விநாயகர் இல்லாத பட்சத்தில் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு தேவையான இலைகளை முதல் நாளே பறித்து நன்றாக சுத்தம் செய்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முதலில் வெள்ளை எருக்கன் விநாயகரை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லாதவர்கள் மஞ்சளிலே விநாயகரை பிடித்து செம்பருத்தி இலை மீது வைத்துக் கொள்ளுங்கள் (இந்த இலையை அந்த 108 இலையிலிருந்து எடுக்கக் கூடாது தனியாக எடுத்து கொள்ள வேண்டும்). ஒரு கிண்ணத்தில் சந்தன பொடியை கொட்டி அதில் நல்லெண்ணெயை ஊற்றி செம்பருத்தி தண்டை வைத்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்டை வைத்து தான் எழுத வேண்டும் அதற்கு தகுந்தார் போல் சந்தனத்தை குழைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து 108 செம்பருத்தி இலையிலும் ஓம் என்று எழுத்து எழுதிக் வைத்து கொள்ளுங்கள், அதன் பிறகு விநாயகருக்கு மஞ்சள், குங்குமம், பூ இவைகளை வைத்து, வெல்லத்தை நெய்வேத்தியமாக படைத்து இந்த 108 இலையையும் விநாயகருக்கு ஓம் என்ற மந்திரத்தை சொல்லியும் போடலாம், அல்லது விநாயகர் மந்திரங்கள் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறியும் போடலாம், அல்லது நாம அர்ச்சனை எனப்படும் ஓம் கணபதியே நமஹ என்ற மந்திரத்தை சொல்லியும் போடலாம். ஒவ்வொரு இலையை போடும் போதும் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்த பிறகு விநாயகருக்கு தீப தூப ஆராதனையை காட்டி பூஜை முடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பூஜை செய்த சில நாட்களிலே பண வரவிற்கான தடைகள் நீங்கி, உங்களுக்கு பண வரவு அதிகரித்து உங்கள் தொழிலோ, வியாபாரமோ எதுவாக இருந்தாலும் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பணம் கைகளில் தாராளமாக புழங்கும். இந்த பரிகாரத்தை பெண்கள் ஆண்கள் என அனைவரும் செய்யலாம். பணம் எல்லோருக்கும் தேவையான ஒன்று தானே.

பெண்கள் செய்யும் போது ஒன்பது வாரத்திற்கு இடையில் மாதவிலக்கு வந்தால் அந்த வாரத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம். அடுத்த வாரங்களில் தொடர்ந்து இந்த பூஜையை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: இஷ்டப்பட்ட லட்சியத்தை கஷ்டப்படாமல் அடையலாம். வீட்டில் இந்த 1 தீபத்தை மட்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

இது நிச்சயமாக உங்களுக்கு பலன் அளிக்கக்கூடிய அற்புதமான பரிகாரம், நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -