குலதெய்வம் வீடு தேடி வர பரிகாரம்

kula theivam manthiram
- Advertisement -

குலதெய்வ வழிபாடு நம் காலம் காலமாக பின்பற்றி வரும் முறை. ஒவ்வொரு குடும்பத்திலும் இன்றளவும் அதை முறையாகவும், சிரத்தையாகவும் செய்து இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் என்பது குலதெய்வத்தின் வழிபாட்டை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படியான குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் தான் நம்முடைய ஒவ்வொரு முயற்சியும் வெற்றி அடையும்.

இந்த குலதெய்வத்தின் அருள் இன்று பல பேருக்கும் கிடைக்காமல் துன்பப்படுகிறார்கள். இன்னும் சிலருக்கு குலதெய்வம் எங்கு இருக்கிறது. எது தங்களுடைய குலதெய்வம் என்றே தெரியாமல் இருக்கிறார்கள். அப்படி ஆனவர்கள் எல்லாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது தெரியாத குலதெய்வமும் தேடி வந்து அருள் புரியும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி எந்த காரணத்தினாலோ இதுவரை வராத நம் குலதெய்வத்தையும் வீட்டிற்கு வர வைத்து அவர்களின் அருள் ஆசி பெறலாம். குலதெய்வத்தை வர வைக்கும் இந்த எளிமையான வழிபாட்டை நாம் எப்படி செய்ய வேண்டும் என்று செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

குலதெய்வம் வீடு தேடி வர

இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்து கொள்ளுங்கள். இதற்கு 9 மட்டை தேங்காய் வேண்டும். அதை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று முதலில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த ஒன்பது மட்டை தேங்காய்களையும் வரிசையாக அடுக்கி வைத்து விட்டு, இந்த தேங்காய்களுக்கு முன்பாக ஒரே ஒரு அகல் விளக்கை நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு இதற்கு தீப தூப ஆராதனை காட்டுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

மந்திரம்
ஓம் ஓம் என் குலதெய்வம்
வர வர
ஓம் வம் வம் உம் உம்
என் படி ஏறி வா வா
என் குல தெய்வமே

என்ற இந்த மந்திரத்தை தீபத்தின் முன் அமர்ந்து 108 முறை சொல்ல வேண்டும். அது வரையிலும் இந்த தீபமானது அணையாமல் எரிய வேண்டும். இப்படியாக ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒன்பது வாரங்கள் செய்து முடித்த பிறகு அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமை அல்லது ஞாயிறு என உங்களுக்கு வசதியான நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் இந்த மட்டை தேங்காய்களை உரித்து தேங்காயின் குடுமிகளை எடுத்து விடுங்கள். தேங்காயில் கண் இருக்கும் பகுதியில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். இதை அப்படியே அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு சூறை விட்டு விட்டு வந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பர்சில் பணம் தாராளமாக புழங்க பரிகாரம்

வீட்டிற்கு வந்ததும் மறுபடியும் உங்கள் வீட்டின் பூஜையறையில் குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தில் உங்கள் குலதெய்வம் வந்த அமர்ந்து ஆசீர்வதிப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து குல தெய்வத்தின் அருளை பெறலாம்.

- Advertisement -