பர்சில் பணம் தாராளமாக புழங்க பரிகாரம்

purse
- Advertisement -

ஆண்களும் பெண்களும் தங்களுடைய அன்றாட செலவுகளை மேற்கொள்வதற்காக பர்சில் சிறிது பணத்தை வைத்திருப்பார்கள். என்னதான் டிஜிட்டல் முறையாக இந்த உலகம் மாறிவிட்டாலும் பர்சில் பணம் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் பத்து ரூபாயாவது பர்சில் இருக்கும் அப்படி பர்சில் இருக்கக்கூடிய பணத்தை நாம் செலவு செய்தாலும் செலவு செய்த பணத்தை விட 10 மடங்கு அதிகமாக பணம் பர்சில் சேர்வதற்கு செய்யக்கூடிய பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பணம் என்பது மகாலட்சுமியின் அம்சம் என்று அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மகாலட்சுமியை நாம் என்றென்றைக்கும் நம்முடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுகிறோம். அதனால் தான் ஓடோடி உழைத்து பாடுபடுகிறோம்.

- Advertisement -

அப்படி உழைத்து பாடுபட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்யும் பொழுது மனமகிழ்ச்சியுடன் செலவு செய்ய வேண்டும். மேலும் அவ்வாறு செலவு செய்யும் பொழுது இதைவிட பல மடங்கு பணம் எனக்கு வரும் என்ற நம்பிக்கையில் செலவு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக மகாலட்சுமி தாயார் நம்மிடம் விரைவிலேயே திரும்பி வந்துவிடுவார் என்ற ஒரு கூற்று நிலவை வருகிறது.

அதை தவிர்த்து புதிதாக நாம் பர்சை வாங்கும் பொழுது சில வழிமுறைகளை மேற்கொண்டால் பர்சில் பணம் என்பது பெருகிக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ஏதாவது ஒரு ரூபத்தில் பர்சில் பணம் இருந்து கொண்டே இருக்கும் என்ற அர்த்தம். முதலில் பர்சை வாங்கியவுடன் பர்ஸ் முழுவதும் துளசி இலைகளை வைக்க வேண்டும். துளசி இலை வைத்த இந்த பரிசை பூஜை அறையில் வைத்துவிட்டு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு புதன்கிழமை அன்று சென்று பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபட வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு வழிப்படும் பொழுது கண்டிப்பாக முறையில் அங்கு துளசியை பிரசாதமாக தருவார்கள். அப்படி கொடுத்த துளசியை எடுத்து வந்து வீட்டில் இருக்கும் பர்சின் மீது வைத்து விட்டு மறுபடியும் வணங்கிவிட்டு பரிசிற்குள் இருக்கும் துளசிகள் அனைத்தையும் வெளியில் எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு கோவிலில் இருந்து வாங்கி வந்த துளசியை மட்டும் பர்சிற்குள் வைத்து நாம் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய பர்சில் மகாலட்சுமி தாயாரின் அருளும் பெருமாளின் அருளும் பரிபூரணமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் பணம் என்பது குறையவே குறையாது. ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: குழந்தை பேரு மற்றும் திருமணம் விரைவில் நடைபெற வாழைப்பழ தீபம்.

இந்த முறையை நம்மால் இயன்ற அளவு வாரத்திற்கு ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ என்று நாமே ஒரு அளவை நிர்ணயித்துக் கொண்டு தொடர்ச்சியாக இந்த பரிகாரத்தை செய்து வர வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் என்றென்றைக்கும் பணம் என்பது நிலையாக நிலைத்து இருக்கும்.

- Advertisement -