இதுவரை வீட்டிற்கு வராமல் ஒதுங்கி நின்ற குலதெய்வம் கூட வீட்டிற்கு வந்து உங்களுக்கு பாதுகாப்பாய் நிற்க மூன்று நாட்கள் தொடர்ந்து இதை மட்டும் செய்தால் போதும். குலதெய்வம் கோபம் நீங்கி அருள் கிடைக்க எளிய வழி.

thilagam
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்ற ஒரு கடவுள் தனியாக இருக்கும். நம்முடைய குலத்தை காப்பதாலே இந்த தெய்வங்களுக்கு குலதெய்வம் என்று பெயர். அது மட்டும் இன்றி இந்த தெய்வத்தை நம்முடைய மூதார்கள் முதல் கொண்டு வழிவழியாக வணங்கி வருவார்கள். எனவே இந்த குலதெய்வ வழிபாடு நம்முடைய குலம் தழைத்து வாழ மிகவும் முக்கியம். நீங்கள் எத்தனை தெய்வங்களை வணங்கினாலும் எத்தனை பரிகாரங்களை செய்தாலும் கூட குலதெய்வத்தின் அருள் இல்லாமல் எந்த ஒரு பலனும் உங்களுக்கு கிடைக்காது.

இந்த குலதெய்வத்தின் அருளானது உங்களுக்கு முழுமையாக கிடைக்க குலதெய்வ வழிபாடு தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் தவறும் போது இது போன்ற பிரச்சனைகள் எழும். இப்படி ஏதோ ஒரு சூழ்நிலையில் குலதெய்வம் உங்களை தேடி வராமல் உங்கள் மீது கோபத்தில் ஒதுங்கி இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யும் போது நிச்சயமாக உங்களை தேடி வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்று இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குலதெய்வம் இல்லம் தேடி வர
இந்த வழிபாட்டை செய்வதற்கு ஒவ்வொரு குலதெய்வத்திற்கும் என்று சிறப்பான நாட்கள் என ஒரு நாள் இருக்கும். அந்த நாளை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். உங்கள் குலதெய்வத்திற்கான வழிபாடு நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் இந்த வழிபாட்டை தொடங்கும் நாளும் வெள்ளிக்கிழமையாக இருக்க வேண்டும்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு நீங்கள் நல்ல தரமான விபூதியை வாங்கிக் கொள்ளுங்கள். நல்ல ஜவ்வாது மணம் கலந்த வாசனை மிக்க விகுதியை வாங்கி அதில் நல்ல தரமான பன்னீரை ஊற்றி மூன்று உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளுக்கு இதே போல் வாசனை மிக்க சந்தனத்தை பன்னீர் ஊற்றி குழைத்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து இதை ஒரு சிறிய தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த உருண்டைக்கு முன்பாக அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இத்துடன் வெற்றிலை, பாக்கு, பழம், எல்லாம் வைக்க வேண்டும். இதில் வைக்கும் பாக்கு கொட்டை பாக்காக இருக்க வேண்டும். எப்போதுமே குலதெய்வ வழிபாட்டிற்கு இது மிகவும் அவசியம். இவை எல்லாம் செய்த பிறகு உங்கள் குலதெய்வத்திற்கு நெய்வேத்தியமாக என்ன செய்து படைப்பீர்களோ முடிந்தால் அதையும் செய்து வைத்து விடுங்கள்.

அதன் பிறகு உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று 21 முறை உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி நாம அர்ச்சனை செய்ய வேண்டும் அதாவது உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி இறுதியாக போற்றி என்று வார்த்தையை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் அதன் பிறகு இந்த விபூதி உருண்டைகளை ஒரு பாக்ஸில் போட்டு வைத்து தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: அஷ்டலட்சுமிகளையும் வீட்டிற்குள் வரவழைத்து கோடீஸ்வர யோகத்தை பெற இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால் போதும். ஆண்டியையும் அரசனாகும் அற்புதம் மந்திரம்.

இந்த வழிபாட்டை செய்யும் போது குலதெய்வம் உங்கள் வீடு தேடி வந்து அமர்ந்து விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டும் இன்றி இந்த வழிபாட்டில் வைத்து இருக்கும் விபூதியை தினமும் நீங்கள் குல தெய்வத்தின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும். இந்த குலதெய்வ வழிபாடு முறையாக செய்து குல தெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற லாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -