அஷ்டலட்சுமிகளையும் வீட்டிற்குள் வரவழைத்து கோடீஸ்வர யோகத்தை பெற இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால் போதும். ஆண்டியையும் அரசனாகும் அற்புதம் மந்திரம்.

lakhmi manthiram
- Advertisement -

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்ற பழமொழியை யாரும் மறுக்க இயலாது. பணம் காசு அதிகம் சேர்க்க வேண்டும் பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணம் இல்லாத மனிதர் இன்று மிகவும் குறைவு. இந்த பணத்தை சேர்க்க என்னென்னவோ பாடு பட வேண்டியதாக இருக்கிறது. பணமானது நம்மிடம் சேர்ந்து பெருக்கெடுக்க நமக்கு அஷ்டலட்சுமிகளின் அனுகிரகம் தேவை. அந்த அனுகிரகத்தை பெறுவதற்கான ஒரு மந்திர வழிபாட்டு முறையை தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

mahalakshmi1

ஒரு மனிதன் பணம் காசு சம்பாதித்து கடன் இல்லாமல் பெரும் வாழ்வை வாழ வேண்டும் என்றால் அவனுக்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் தேவை. அதுவும் அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதம் கிடைத்தால் பிணி பீடை தரித்திரம் என எந்த வித தொல்லையும் வாழ்க்கையில் இல்லாமல் குபேர சம்பத்துடன் வாழ்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் உங்களிடம் வந்து சேரும். அந்த மந்திர வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை அன்று சொல்ல தொடங்க வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்து முடித்த உடனே உணவு உண்பதற்கு முன்பாக வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, வெற்றிலை பாக்கு பூ பழம் இவற்றையெல்லாம் நெய் வைத்தியமாக வைத்த பிறகு மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்கலாம்.

காடு வெட்டி போட்டு கடிய நிலம் திருத்தி
வீடு கட்டிக்கொண்டிருக்கும் வேல் வணிகர்
வீடுகட்கு இன்றைக்கு வந்த அம்மா
இலட்சுமியே என்றைக்கும் நீங்காதிரு

இந்த மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும் வெள்ளிக்கிழமை தொடங்கி இந்த மந்திரத்தை தொடர்ந்து 24 நாட்கள் வரை தினமும் காலையில் குளித்து முடித்து விளக்கு ஏற்றி வைத்த பிறகு சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை 11 முறைக்கு மேலும் சொல்லலாம். வாய்ப்பிருப்பவர்கள் 48 நாட்கள் கூட இது சொல்லலாம் இதனால் பலன்கள் இன்னும் அதிகரிக்கும்.

- Advertisement -

இந்த மந்திர முறை நமது சித்தர்கள் வழிபட்ட பழைய முறைகளில் ஒன்று. இந்த முறையை பின்பற்றி பலரும் நல்ல செழிப்பான வாழ்க்கை பல வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு லக்ஷ்மி தேவி மட்டும் நம் இல்லத்தில் குடி கொண்டாலே அத்தனை சுபிட்சம் எனும் போது அஷ்டலட்சுமிகளின் குடி கொண்டால் நம்முடைய எல்லா வித பிரச்சனைகளும் தீர்வு நல்ல சுபிக்ஷமான வாய்ப்பு முடியும் என்பது எந்த இது அச்சமும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்கவும், பொன் பொருள் சேர்ந்து மகாலட்சுமியின் அருள்கடாச்சம் வீட்டில் நிலைத்திருக்கவும் இந்த ஒரு தீபத்தை முறையாக ஏற்றினாலே போதும். வாழ்வில் இருக்கும் பல சங்கடங்கள் வந்த வழியே போகும்.

இந்த மந்திர வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இதில் குறிப்பிட்டுள்ள நாட்களில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் ஜெபித்து அஷ்டலட்சுமிகளையும் அனுகிரகத்தின் பெற்று கனவிலும் நினைத்து விடாத ராஜபோக வாழ்க்கையை வாழ நாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -