வேண்டிய வேண்டுதல், ஆசைகள் நிறைவேற 48 நாட்களுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை இப்படி செய்யுங்கள்!

kula-dheivam-coin
- Advertisement -

எல்லோருக்குமே ஒவ்வொரு விதமான பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளை தேடிய தேடல்களும் இருந்து கொண்டே இருக்கும். முயற்சி செய்வது மட்டுமே நம் கையில் இருக்கும், மீதி எல்லாம் அது ஆண்டவனுடைய செயலாக இருக்கிறது. எனவே வேண்டிய வேண்டுதல்கள், உங்களுடைய தீராத ஆசைகள் நிறைவேறுவதற்கு ரொம்பவே சக்தி வாய்ந்த மற்றும் எளிமையான குலதெய்வ பரிகாரத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

அதிசக்தி வாய்ந்த குல தெய்வத்திற்கு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நாற்பத்தி எட்டு நாட்களில் நீங்கள் வேண்டிய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். எல்லோருடைய வீட்டிலும் அவரவர்க்கு என்று ஒரு குலதெய்வம் இருக்கும். அந்த தெய்வத்திற்கு அதீத சக்திகள் உண்டு. மற்ற தெய்வங்களைப் போல் அல்லாமல், குலதெய்வம் நம் குலத்தை காக்கும் தெய்வமாக இருக்கிறது. குலதெய்வம் என்பது நம்முடைய முன்னோர்களை குறிக்கிறது.

- Advertisement -

ஆதிகாலத்தில் மனித ரூபத்தில் அல்லது தெய்வ ரூபத்தில் இருந்தாலும், நம் குலத்தை காக்க வந்த கடவுள் நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த தெய்வத்தை குலதெய்வம் என்கிறோம். சிலருக்கு பெண் குலதெய்வங்கள் இருக்கும். குலத்திற்காக தன்னை அர்ப்பணித்த பெண்களுக்கு இத்தகைய வழிபாடுகளை வழிவழியாக மேற் கொண்டு வருவது வழக்கம். தெய்வ ரூபமாக மட்டுமல்லாமல், மனிதர்களான நம் முன்னோர்கள் கூட இன்று குலதெய்வமாக நம் வழிபாட்டில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தெய்வங்கள் எப்பொழுதும் நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகவே நம் வீட்டில் குடி இருப்பவர்கள் ஆவர்.

குலதெய்வத்திற்கு நாம் பெரிதாக எதையுமே செய்ய வேண்டிய அவசியமில்லை! மனதார அவரை கூப்பிட்டாலும் ஓடோடி வந்து உதவி செய்யக் கூடியவர். எனவே குல தெய்வத்திற்கு ஒரு ரூபாயை முறையாக முடிந்து வைத்து வழிபட்டால் நம் வேண்டுதல்கள் நாற்பத்தி எட்டு நாட்களில் நிறைவேறும் என்பது சாஸ்திர குறிப்புகள். வெள்ளிக்கிழமையில் அல்லது பவுர்ணமி நாளில் இந்த பரிகாரத்தை துவங்குவது நல்லது. ஒரு சுத்தமான மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள். அல்லது வெள்ளை துணியை மஞ்சள் கலந்த நீரில் தோய்த்து உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். பின்னர் சிறிதளவு மஞ்சள் மற்றும் குங்குமம் தூவி கொள்ளுங்கள். இதை மஞ்சள் நூல் கொண்டு இறுக்கமாக மூடி கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் வெளியில் மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு பூ ஒன்றை சுற்றிக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு தாம்பூல தட்டில் வைத்து உங்களுடைய பூஜையறையில் குலதெய்வ படத்திற்கு முன்பு வையுங்கள். குலதெய்வம் இல்லாதவர்கள் விநாயகர் படத்திற்கு முன்பு வையுங்கள்.

பின்பு மனதார உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து உங்களுடைய வேண்டுதல்களை மனமுருகி வையுங்கள். எந்த கடவுளை வணங்கினாலும் பேதமின்றி, மனமுருகி நீங்கள் உண்மையிலேயே அவர் நமக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில் வேண்டிக் கொள்ளும் பொழுது தான் அந்த வேண்டுதல் பலிக்கிறது என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். பின்னர் அதற்கு வழக்கம் போல நீங்கள் தூப, தீப, ஆரத்தி காண்பித்து வாருங்கள். நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்து இதை அப்படியே கொண்டு போய் உங்களுடைய குலதெய்வ கோவிலில் இருக்கும் உண்டியலில் சமர்ப்பித்து விடுங்கள். குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று உண்டியலில் போட்டு விட்டு வரலாம். இவ்வகையில் குலதெய்வத்திற்கு முறையாக நாணயத்தை முடிந்து வைத்து வேண்டுதலை வைத்தால் 48 நாளில் வேண்டிய வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -