செவ்வாய்க்கிழமை அன்று வாசலில் 1 ரூபாயை இப்படி கட்டினால் வாசலில் நிற்கும் குலதெய்வம் வீட்டிற்குள் வரும். தெய்வ குத்தம் நீங்கும்.

- Advertisement -

நம்முடைய குடும்பத்திற்கு தீர்க்கமுடியாத துயரங்கள் துன்பங்கள் வரும்போது அதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் ‘உங்களுடைய வீட்டில் குலதெய்வம் இல்லை என்று சொல்வார்கள். ஏதோ ஒரு தெய்வ குத்தம் உள்ளது. அதனால் தான் வீட்டில் இப்படி அடுத்தடுத்த கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கிறது’. இதை சரி செய்வதற்காக குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.

சரிதான். குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்யும்போது நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்கும். குலதெய்வத்தை என்றுமே மறக்கக்கூடாது. குலம் காக்கும் குல தெய்வத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் தினம்தோறும் மனதில் நினைத்து, வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது குடும்பத்திற்கு அத்தனை நல்லது.

- Advertisement -

வாசலில் நின்று கொண்டிருக்கும் உங்கள் வீட்டு குலதெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்க செவ்வாய்க்கிழமை அன்று தொடர்ந்து இந்த பூஜையை செய்ய வேண்டும். முதல் வாரம் செவ்வாய் கிழமை இந்த பரிகாரத்தை செய்யப்போகிறீர்கள். அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.

நிலை வாசலை மஞ்சள் தண்ணீரால் நன்றாக துடைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். ஒரு வெள்ளை துணியை எடுத்து அதை மஞ்சள் தண்ணீரில் நனைத்து, மஞ்சள் துணியில் 1 ரூபாயை நாணயத்தை வைத்து, முடிச்சு போட்டுக் கட்டி இதை அப்படியே நிலை வாசலுக்கு மேலே ஒரு ஆணியில் மாட்டி விட வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய தீபத்தை நிலை வாசலுக்கு வெளியே ஏற்றிவைத்துவிட்டு, நிலைவாசல் அருகிலேயே நின்று வீட்டிற்கு வெளியே நிற்கும் குலதெய்வம் வீட்டிற்குள் வர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

நிலை வாசலில் ஏற்றி வைத்த அகல்விளக்கு இருக்குது அல்லவா. அதை அப்படியே கொண்டு வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதேபோலத் தான் அடுத்த வாரம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் இதே போல பூஜையை செய்ய வேண்டும். நிலைவாசலில் வைத்த அந்த 1 ரூபாய் முடிச்சை மட்டும் எடுக்க வேண்டாம். அப்படியே நிலை வாசலில் வைத்து விடுங்கள்.

மற்றபடி தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து கொண்டு தீபத்தை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து வழிபாட்டை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று நிறைவு செய்ய வேண்டும். தொடர்ந்து 48 செவ்வாய்க்கிழமைகள் இந்த பூஜையை செய்து விட்டு, நாற்பத்தி எட்டாவது வாரம் பூஜை நிறைவடைந்த உடன், ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கு சென்று நிலை வாசலில் கட்டி வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயம் முடிச்சை குலதெய்வ உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

இப்படி செய்தால் குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வரும். குல தெய்வ குத்தம் நீங்கும். பெண்களுக்கு மாதவிலக்கு வரும் சமயத்தில் அந்த வாரம் மட்டும் பூஜை செய்வதை தவிர்த்து விடுங்கள். அடுத்த வாரம் செய்யும்போது கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -