குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வருவதற்கு தினமும் இந்த எளிய வழி பாட்டை மட்டும் செய்திடுங்கள். குல தெய்வம் யாரென்று தெரியாதவர்களும் இதைச் செய்துவர உங்கள் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்

theertham
- Advertisement -

மனிதனாக பிறந்த நாம் இதுவரை செய்து கொண்டிருக்கும், செய்யப்போகும் வேலைகள் அனைத்தும் நமக்கு முன்னால் இருந்தவர்கள் பின்பற்றி வந்த விஷயங்களை தான். அவ்வாறு நமது முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் சில வரைமுறைகள் வைத்திருக்கின்றனர். இதை இப்படித்தான் செய்ய வேண்டும், இதனை இவ்வாறு செய்யக்கூடாது என்று. அதன்படி இன்று வரையிலும் அவர்கள் செய்து வந்ததையே நாமும் கடைபிடித்து வருகிறோம். இவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலைமுறையாக தங்கள் குடும்பத்தைக் காக்கும் தெய்வம் என்று ஒன்று இருக்கிறது. அதனை வருடத்திற்கு ஒரு முறையோ, ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் இதனை கடைபிடிப்பதில்லை. ஒரு சிலருக்கு தனது குலதெய்வம் என்னவென்று கூட தெரியாமல் இருக்கின்றன. இதற்காகவே குலதெய்வத்தை நம் வீட்டிற்கு கொண்டு வருவதற்காக செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kuladheivam

ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு விஷயங்களை மட்டும் தவறாமல் செய்திட வேண்டும். இவற்றில் ஏதாவது குறை வைத்தோம் என்றால் நமது குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்காது. குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவுகள், குழப்பங்கள், வறுமை, பண பற்றாக்குறை இவ்வாறு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

அவ்வாறு நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன வென்றால் பித்ரு பூஜை மற்றும் குலதெய்வ பூஜை. இவை இரண்டையும் வருடத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் செய்து விட வேண்டும். அவ்வாறு பித்ருக்களுக்கு மாதம் ஒரு முறை அமாவாசை அன்று நெய்வேத்தியம் செய்து பூஜை செய்யவேண்டும். குலதெய்வத்தையும் ஏதாவது ஒரு நாள் தமது வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

poojai1

நமக்கு விருப்பமான கடவுள்கள் என்று அம்மன், முருகன், விநாயகர் இவர்களை வழிபட்டாலும் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் எந்த தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கப் பெறாது. நிச்சயம் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் மற்ற தெய்வங்கள் நமக்கு ஆசி வழங்குவார்கள். எனவே முதலில் குலதெய்வத்தை நமது வீட்டிற்குள் வரவழைக்க வேண்டும். அப்போதுதான் இஷ்ட தெய்வங்கள் நமக்கு வேண்டியதை செய்ய முடியும்.

- Advertisement -

இதற்காக பூஜை அறையில் பஞ்சபாத்திரம் தண்ணீரை தினமும் மாற்றிவிட வேண்டும். முதல் நாள் வைத்த தண்ணீரை மறுநாள் செடியில் கொட்டிவிட்டு, புதிய தண்ணீர் பிடித்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், சிறிதளவு ஜவ்வாது, ஏதாவது ஒரு வாசனை மலர் இவற்றை ஒன்றாக கலந்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்ணுக்குத் தெரியாத சுப தேவதைகள் மூலம் நமது குலதெய்வம் நமது வீடு தேடி வந்துவிடும்.

thulasi-theertham

அல்லது உங்கள் உறவினரோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் யார் மூலமாவது உங்கள் குலதெய்வம் என்னவென்று உங்களுக்கு தெரிந்து விடும். அல்லது உங்கள் கனவிலும் உங்கள் குலதெய்வம் நேரடியாக வர ஆரம்பிக்கும். அல்லது சிறு குழந்தைகளின் வடிவேலோ, மரங்களின் உருவிலோ உங்களுக்கு காட்சி அளிக்கும். இவ்வாறான அறிகுறிகள் வந்தது என்றால் உங்கள் வீட்டிற்குள் உங்கள் குல தெய்வம் வந்து விட்டதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -