இந்த 1 பொருளை பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால் போதும். எந்த தடையும் இல்லாமல் தெய்வம் வீட்டிற்குள் மனநிறைவோடு வரும்.

vasal-kathavu-kuladheivam
- Advertisement -

என்னதான் பரிகாரம் செய்தும் எங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கவே இல்லை. எங்கள் வீட்டு குல தெய்வம், எங்கள் வீட்டிற்குள் மனநிறைவோடு வாசம் செய்யவில்லை. எங்கள் வீட்டில் பண கஷ்டம், மன கஷ்டம், சண்டை சச்சரவுகள். நிம்மதியே இல்லாத வாழ்க்கை. வீட்டிற்குள் குலதெய்வத்தை வரவழைத்து வீட்டில் இருக்கும் எல்லா கஷ்டத்தையும் சரிசெய்ய ஆன்மீக ரீதியான மிகச்சிறப்பான ஒரு வழிபாடு உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து 3 வார வெள்ளிக்கிழமை செய்து பாருங்கள். அதன் பின்பு நீங்களே இந்த வழிபாட்டு முறையை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. அந்த அளவிற்கு மனநிறைவு உங்களுக்குள் ஏற்பட்டுவிடும்.

karumani

முதலில் ஒரு சிறிய மண் குடுவை நமக்கு தேவை. இந்த பரிகாரத்திற்க்கு மிக மிக முக்கியமாக நமக்கு தேவைப்படக்கூடிய பொருள் காதோலை கருகமணி. சில பேருக்கு இது தெரிந்திருக்கும். சில பேருக்கு இது தெரிந்திருக்காது. நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கொடுப்பார்கள். தயாராக வைத்திருக்கும் மண் பானைக்கு உள்ளே காதோலை கருகமணி 1, நவதானியம் 1 கைப்பிடி, பச்சரிசி 1 கைப்பிடி, விரலிமஞ்சள் 2, டைமண்ட் கற்கண்டு 1 கைப்பிடி, கல் உப்பு 1 கைப்பிடி, இந்த பொருட்களை எல்லாம் போட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு இந்த குடுவையை தயார் செய்து வைத்து விடுங்கள். இது பூஜையறையில் அப்படியே இருக்கட்டும். திறந்தபடி இருக்கட்டும். வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் காலை 4.30 இலிருந்து 6.00 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்திருக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பூஜையை செய்வது மிக மிக அருமையான பலனை கொடுக்கும்.

காலை எழுந்து சுத்தபத்தமாக குளிக்கிறீங்க. பூஜை அறையில் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, அதற்கு முன்பாக ஒரு மண் அகல் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வ படத்திற்கு முன்பாக தயாராக இருக்கும் இந்த குடுவையை வைத்து நீங்களும் குலதெய்வத்தின் முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை 11 முறை உச்சரியுங்கள்.

- Advertisement -

ஓம் ஸ்ரீம் குலதெய்வமே நமஹ!
தன தான்ய லட்சுமியை வசி வசி நமஹ!

kuladheivam 1

இந்த மந்திரத்தில் குலதெய்வம் என்ற வார்த்தைக்கு பதிலாக உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். குலதெய்வத்தின் பெயர் தெரியாதவர்கள் குலதெய்வம் என்று உச்சரித்தாலே போதும். மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் மனநிறைவோடு வரவேண்டுமென்று குலதெய்வத்தை அழைத்து, தீப ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

kuladeivam

இந்த பூஜையை மூன்று வாரங்கள் செய்த உடனேயே உங்களுடைய கோரிக்கைகளுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைத்திருக்கும். ஆனால் மூன்று வாரத்தோடு இந்த பூஜையை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து 11 வாரங்கள், இப்படி வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை செய்யவேண்டும். 11 வாரங்கள் பூஜை முடிந்த பின்பு, குடுவையில் இருக்கும் காதோலை கருகமணியை மட்டும் ஏதாவது ஒரு கோவில் மரத்தடியில் போட்டுவிடுங்கள். குடுவையில் இருக்கும் மற்ற எல்லா பொருட்களையும் தண்ணீரில் போட்டு கரைத்து ஊறவைத்து பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம். அப்படி இல்லை என்றால் காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டு விடுங்கள். நம்பிக்கையோடு இந்த பூஜை செய்பவர்கள் வீட்டில் நிச்சயம் கெட்டது விலகும். நல்லதே நடக்கும்.

- Advertisement -