குழந்தைகளுக்கு ஏற்படும் கண் திருஷ்டி அகல இந்த பூண்டு பரிகாரத்தை செய்திடுங்கள். குழந்தைகள் ஆரோக்கியமாக நல்ல சுகத்துடன் இருப்பார்கள்

dhirushti
- Advertisement -

சிறிய குழந்தைகள் கண் விழித்து இரவில் அழுவதும், நன்றாக இருக்கின்ற குழந்தைக்கு திடீரென காய்ச்சல் வருவது, வயிற்றுப்போக்கு வருவது, உடம்பில் கட்டிகள் தோன்றுவது, இல்லையென்றால் எப்பொழுதும் குழந்தைகள் சோர்வாக இருப்பது இவை அனைத்தும் கண்திருஷ்டியினால் உண்டாகும் பாதிப்புகளிகும். இவ்வாறு கண்திருஷ்டியினால் வரும் பிரச்சனைகளினால் குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு குழந்தைகளுக்கு உண்டாகும் கண் திருஷ்டி அகல இந்த பூண்டு பரிகாரத்தை உடனே செய்திடுங்கள்.

baby-cry

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் திருஷ்டியின் பாதிப்பு ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக வருகின்ற நோய்களை விட கண்திருஷ்டியினால் உண்டாகும் பாதிப்புகளின் தாக்கமே அதிகமாக இருக்கும். ஒருவர் மற்றவரை பார்த்து இவர் இவ்வளவு அழகாக இருக்கிறாரே! இவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் இவ்வாறு அவர்கள் பொறாமைப் பார்வையோடு மற்றவர்களை பார்க்கும் பொழுது அதன் தாக்கம் அவர்களை கடுமையாக பாதிக்கிறது.

- Advertisement -

இவ்வாறு கண்திருஷ்டியின் தாக்கம் வீட்டில் உள்ளவர்களை பாதிக்காமல் இருக்கும் அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் பலவித சூட்சும விஷயங்களை செய்வதுண்டு. அவ்வாறு நிலை வாசல்படியில் எலுமிச்சை பச்சை மிளகாய் கட்டி தொங்க விடுவது, படிகாரத்தை கருப்பு நிற நூலில் கட்டி தொங்க விடுவது, அல்லது சோற்றுக்கற்றாழையை கட்டி தொங்க விடுவது போன்றவற்றை செய்து வைப்பார்கள். அதிலும் பலரது வீட்டில் தவறாமல் கண் திருஷ்டி விநாயகரை வாசலில் மாட்டி வைத்திருப்பார்கள்.

fear-pei-kanavu

இவற்றையும் மீறி ஒரு சில சமயங்களில் கண் திருஷ்டியின் பாதிப்பு ஏற்படுகிறது. அதுபோன்ற நேரத்தில் எலுமிச்சை பழத்தை திருஷ்டி பாதித்தவர்களை சுற்றி விட்டு அதனை காலால் நசுக்கி விடலாம். அல்லது கல் உப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு வீட்டின் வாசலில் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவரை நிற்க வைத்து வலது பக்கம் மூன்று முறை இடது பக்கம் மூன்று முறை என சுற்றி விட்டு உப்பினை ஏதேனும் தண்ணீரில் போட்டு விடலாம். இவ்வாறு செய்வதினால் கண் திருஷ்டியின் தாக்கம் குறைந்துவிடும்.

- Advertisement -

இவற்றிலெல்லாம் மிகவும் முக்கியமான ஒரு தலை பூண்டு அல்லது ஒரு பல் பூண்டு என்று சொல்லப்படும் பூண்டினை நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது ஏதேனும் சூப்பர் மார்க்கெட்டிலோ கேட்டு வாங்கிக் கொள்ளலாம். பின்னர் அந்தப் பூண்டின் மீது முழுவதுமாக குங்குமத்தை பூசிக் கொள்ள வேண்டும். பின்னர் பாதிக்கப்பட்ட குழந்தையை இந்த பூண்டை வைத்து கால் முதல் தலை வரை சுற்றிவிட்டு, தடவி எடுக்க வேண்டும். அதாவது பூண்டு அவர்களின் உடலில் படுமாறு தலை முதல் கால் வரை தடவி எடுக்க வேண்டும்.

poondu

அதன் பின்னர் இந்த பூண்டை வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று தரையில் வைத்து காலால் நசுக்கி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கண் திருஷ்டி அந்த பூண்டு நசுங்குவது போல நசுங்கி காணாமல் போய்விடும். இது குழந்தைகளுக்கு ஏற்பட்ட கண் திருஷ்டியில் இருந்து அவர்களை விடுவிக்க மிகவும் சிறந்த பரிகாரமாகும்.

- Advertisement -