கோவில் கோவிலாக சென்று குழந்தை பாக்கியம் இல்லையே என்று கவலைப்படுபவர்கள், இந்த ஒரு தானத்தை மட்டும் செய்து பாருங்கள், உங்கள் வீட்டிலும் மழலை சத்தம் கேட்குமாம்!

honey-abishegam-baby
- Advertisement -

குழந்தை செல்வம் என்பது எல்லோருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு விஷயமாகத்தான் தொன்று தொட்டு இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக குழந்தை செல்வம் என்பது அரிதாக கிடைக்கும் ஒரு விஷயமாக மாறிப் போனது. நம்முடைய வாழ்க்கை முறையில் இருக்கும் இந்த மாற்றத்தினால் மட்டும் அல்ல, நாம் செய்யும் பாவங்களினாலும் இவ்வாறு எல்லாம் நடப்பதாக ஆன்மீகம் கூறுகிறது. மனிதன் செய்யும் ஒவ்வொரு பாவமும் அவனை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் குழந்தை செல்வம் இல்லாமல் அவதிப்படுபவர்கள், பெற்றோர்களை அவமதித்தவர்களாகவும், பெற்றோர்களை ஆதரவு இல்லாமல் தவிக்க விட்டவர்கள் ஆகவும் இருப்பார்களாம். எது எப்படியோ! குழந்தை செல்வம் கிடைக்க செய்ய வேண்டிய எளிய தானம் என்ன? இந்த தானத்தினால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்கிற அரிய ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

- Advertisement -

ஆன்மீகத்தை பொறுத்தவரை தானம் என்பது புண்ணிய பலன்களை இரட்டிப்பாக்கி தரும் ஒரு செயலாக இருக்கிறது. ஒவ்வொரு தானத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு பெரிய பலன்கள் ஒளிந்து கொண்டு இருக்கும். எந்த தானம் செய்யும் பொழுது? எந்த பலன் கிடைக்கும்? என்பது கண்டிப்பாக அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த வகையில் குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய தானம் என்ன? இந்த தானத்தை யாருக்கு? எப்போது எங்கு செய்ய வேண்டும்? என்பதை இனி காண்போம்.

குழந்தை இல்லையே என்று ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி, இறங்கியவர்கள் கடைசியாக ஒவ்வொரு கோவிலாக ஏற துவங்கி விடுகின்றனர். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், இறைவன் கைவிட மாட்டார் என்கிற நம்பிக்கையில் தான் இவர்கள் கோவிலை நோக்கி படையெடுக்கின்றனர். எவ்வளவோ பரிகாரங்களை செய்தும், எவ்வளவோ விஷயங்களை குழந்தைக்காக இவர்கள் வேண்டிக் கொண்டும் இருப்பார்கள் ஆனாலும் குழந்தை பாக்கியம் இருப்பதில் தொடர்ந்து தடை நீடித்தால் இந்த ஒரு தானத்தை நீங்கள் கோவிலுக்கு செய்து பார்க்கவும்.

- Advertisement -

ரொம்பவும் எளிய பரிகாரமாக இருந்தாலும், சக்தி வாய்ந்த பரிகாரமாகவும் இப்பரிகாரம் கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கிய தடை இருப்பவர்கள், உங்களுக்கு இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வ கோவில்களுக்கு இந்த ஒரு தானத்தை செய்ய வேண்டும். பொதுவாக கோவில்களுக்கு அபிஷேகம் செய்ய பொருட்களை பக்தர்கள் வாங்கிக் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நீங்கள் பால் தானம் செய்யும் பொழுது துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது பலனாக இருக்கிறது. அதுபோல குழந்தை பாக்கியம் உங்களுக்கு தடை இல்லாமல் கிடைக்க தயிரை தானம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உங்களை அழகுப்படுத்திக் கொள்ள எந்த பொருட்களை வாங்கினாலும் அது உங்களுக்கு செட்டாகாதா? நல்ல ட்ரஸ், நல்ல நகை, ஒரு செருப்பு கூட சரியாக செட் ஆகாதா? அப்ப இத படிங்க.

அபிஷேகத்தில் தயிர் தானம் செய்பவர்களுக்கு குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் அகழுவதாக நம்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் புத்திர சோகம், புத்திர தோஷம், புத்திர சம்பத்து கிட்ட சுத்தமான தேன் வாங்கி கொடுக்க வேண்டும். இந்த தேன் தானம் பன்மடங்கு பலன்களை பெருக்கி கொடுக்கக் கூடியது ஆகும். சுத்தமான தேன், கோவிலுக்கு தானம் செய்து அபிஷேகம் செய்யும் பொழுது உங்களுக்கு புத்திர பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்குவதாக நம்பிக்கை கூறப்பட்டுள்ளது. எனவே கோவில் கோவிலாக அலைபவர்கள், அந்த கோவில்களுக்கு இதை தானம் செய்து பாருங்கள், உங்கள் வீட்டிலும் மழலை செல்வத்தின் குரல் இனி கேட்க ஆரம்பித்து விடும்.

- Advertisement -