குழந்தை வரம் பெற பரிகாரம்

amman8
- Advertisement -

திருமணமாகி பல வருடங்கள் கடந்தும், குழந்தை இல்லை என்ற கஷ்டம் நிறைய பெண்களுக்கு இருக்கு. குழந்தையே இல்லை ஒரே ஒரு பெண் குழந்தையாவது அந்த அம்பாள் எங்களுக்கு வரமாக கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பெண் குழந்தை வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இருந்தால், அம்பாளிடம் வேண்டுதலை வைத்து பின் சொல்ல கூடிய பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்யணும். குழந்தை வரத்தை எளிதில் கொடுக்கக்கூடிய, எளிமையான அந்த பரிகாரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

குழந்தை வரம் பெற பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

வெள்ளிக்கிழமை அன்று கலர் கலராக குட்டி குட்டி வளையல் வாங்கிக்கோங்க. சின்ன பிள்ளைகள் போடுற மாதிரி, பார்க்கவே ரொம்பவும் அழகா இருக்கணும். கருப்பு நிற வளையல் வாங்க கூடாது. இந்த வளையலை வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டு அக்கம் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளுக்கு நீங்களே உங்கள் கையால் போட்டு விடுங்கள்.

- Advertisement -

குழந்தை இல்லாத பெண்களின் கையால், இந்த வளையலை குட்டி பெண் பிள்ளைகளுக்கு போட்டு விட வேண்டும். பிறகு வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு சென்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வசதி வாய்ப்பு உள்ளவர்கள் இந்த வளையலோடு சேர்த்து அந்தப் பெண் பிள்ளைகளுக்கு ஒரு வாரம் வஸ்திரதானமும் செய்யலாம்.

இதே போல தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்த வளையலை நீங்கள் வாங்கி கொடுத்தாலும் போதும். நிறைய பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் மாற்றி மாற்றி வாரம் ஒரு பெண் குழந்தைக்கு இந்த வலையல்களை கொடுங்க.

- Advertisement -

மனதார அம்பாளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு குறைந்தது மூன்று வாரத்தில் இருந்து ஏழு வாரத்திற்குள் குழந்தை பற்றிய நல்ல செய்தி வந்து சேரும். மூன்று வாரத்தில் நல்ல செய்தி கிடைத்தாலும், நான்கு வாரத்தில் நல்ல செய்தி கிடைத்தாலும் 7 வாரம் இந்த பரிகாரம் செய்வதை நிறுத்தக்கூடாது.

பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உன்னைப் போலவே எனக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலை மடிப்புச்சை கேட்டு பிரார்த்தனை செய்யும் போது நிச்சயமாக உங்களுக்கு அந்த குழந்தை வரும் கிடைக்கும்.

- Advertisement -

இதோடு சேர்த்து உங்களுடைய நிதி நிலைமையை பொருத்து உங்களுடைய பொருளாதாரத்தை பொறுத்து வசதி இல்லாத குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து கொண்டே வாருங்கள். இந்த பரிகாரம் உங்களுடைய கர்மாவை குறைப்பதற்கு. ஏதோ ஒரு கர்மவினையின் காரணமாகத்தான், இந்த ஜென்மத்தில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: காரிய சித்தி உண்டாக மந்திரம்

அந்த கர்ம வினை குறைக்க, இல்லாத குழந்தைகளுக்கு நீங்கள் உங்களால் முடிந்த உதவியை மனதார செய்து கொண்டே வரவேண்டும். நிச்சயம் கடவுள் உங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -