குழந்தை வரம் தரும் குங்கும அர்ச்சனை

amman kunkuma archani
- Advertisement -

ஒருவருக்கு எவ்வளவு தான் பண வசதிகள் இருந்தாலும் அவர் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த பணத்தை அனுபவிக்க முடியும். அதே சமயம் உடல் ஆரோக்கியமாக இருந்து பணமும் தங்களிடம் இருந்தும் அவர்களின் பெயர் சொல்லும் ஒரு வாரிசு இல்லை என்றால் இவை அனைத்திற்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் போய்விடும். உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தை பாக்கியம் என்ற இந்த இரண்டு விஷயங்களும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அதி முக்கியமான குழந்தை பாக்கியமும் உடல் ஆரோக்கியமும் நம்மிடம் இருப்பதற்கு நாம் வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு எப்படி குங்கும அர்ச்சனை செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

உடல் ரீதியாக ஏதாவது குறைகள் இருக்கிறது என்னும் பட்சத்தில் மருத்துவரை அணுகி அந்த குறைகளை தீர்த்துக் கொண்டு குழந்தை பாக்கியத்தை பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் உடலில் எந்தவித குறையும் இருக்காது ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையால் தங்களின் குழந்தை பாக்கியம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும். இதே போல் தான் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டவர்களும் என்ன காரணத்தினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது என்றே தெரியவில்லை என்னும் பட்சத்தில் தெய்வ வழிபாட்டில் ஈடுபட அவர்களின் பிரச்சனைகள் தீரும்.

- Advertisement -

இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கக் கூடியவள் அம்மன். எந்த அம்மனாக இருந்தாலும் அந்த அம்மனை சரணாகதி அடைந்து நம்முடைய உடல் ரீதியான பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டால் கண்டிப்பான முறையில் அந்த அம்மன் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார். அந்த வகையில் நாளை தை வெள்ளிக்கிழமை அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வதற்கு குங்குமத்தை வாங்கி கொடுத்து மனதார வழிபட்டு வருபவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை அம்மன் தீர்த்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த வழிபாட்டை வீட்டிலும் செய்யலாம். வீட்டில் இருக்கக்கூடிய அம்மன் புகைப்படம் அல்லது அம்மன் விக்ரகம் எதுவாக இருந்தாலும் சரி அதை எடுத்துக் கொள்வோம். ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் அம்மனை வைக்க வேண்டும். அவ்வாறு வைப்பதற்கு முன்பாக மஞ்சள் கலந்த தண்ணீரில் அம்மனின் படத்தை துடைத்து அம்மனுக்கு சந்தனம் குங்குமம் வைத்து வைக்க வேண்டும். சிலையாக இருந்தால் மஞ்சள் தண்ணீரில் அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக பூக்களை அம்மனுக்கு சாற்ற வேண்டும். நல்ல தரமான குங்குமமாக பார்த்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உடையாத முழு அரிசியாக பச்சரிசியை எடுத்து அதில் மஞ்சள் கலந்து அட்சதையாக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது குங்குமத்தையும் அட்சதையையும் கலந்து கொள்ள வேண்டும். இதை வைத்து தான் நாம் அர்ச்சனை செய்ய போகிறோம். அர்ச்சனை செய்யும் பொழுது எந்த அம்மனின் பெயரை கூறி 108 முறை கூறி அர்ச்சனை செய்யலாம். அல்லது அம்மனின் 108 போற்றிகள் தெரிந்தாலும் அதை கூறி அர்ச்சனை செய்யலாம்.

இவ்வாறு அர்ச்சனை செய்த பிறகு அம்மனை பழைய இடத்திலேயே வைத்து விட வேண்டும். அம்மனுக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். அர்ச்சனை செய்த குங்குமத்தையும் அம்மனுக்கு முன்பாக வைத்து விட வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காண்பித்து உங்களின் வேண்டுதலை மனதார கூறிவிட்டு இந்த குங்குமத்தை எடுத்து உங்களின் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். குங்குமம் தீர்வதற்கு முன்பாகவே உங்களுடைய பிரச்சனைக்குரிய தீர்வை அந்த அம்மன் உங்களுக்கு வழங்கி விடுவாள் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: இழந்ததை திரும்பவும் பெற கருப்பசாமி வழிபாடு

இந்த எளிய குங்கும அர்ச்சனையை நாமும் நம் வீட்டில் செய்து வேண்டிய வரத்தை அம்மனிடம் இருந்து பெற்றுக் கொள்வோம்.

- Advertisement -