இந்த நேரத்தில் உண்டியலில் 1 ரூபாய் போட்டால், புயல் வேகத்தில் பணம் லட்ச லட்சமாக சேரும்.

- Advertisement -

பணத்தை எப்பாடு பட்டாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்து விட வேண்டும் என்ற எண்ணம், ஆழ்மனதில் வந்து விட்டாலே போதும். அதற்கான வேலைகளை நீங்கள் செய்ய தொடங்கி விடுவீர்கள். உங்களுடைய கையில் பணம் தானாக சேர, தொடங்கிவிடும். இப்படி கட்டு கட்டாக பணம் சேர்க்க கடுமையாக நீங்கள் தான் உழைக்க வேண்டும். முழு மனதோடு நம்பிக்கையோடு நீங்கள் தான் அதற்கான வழிமுறைகளை தேட வேண்டும். நீங்கள் பணம் சம்பாதிக்க செல்லும் வழியில், பாதையில், எந்த தடையும் வராமல் இருப்பதற்கு, நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் துணையாக நிற்கும் அவ்வளவுதான். வெறும் பரிகாரத்தை செய்து விட்டு ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தால் பணமழை நிச்சயம் பொழியாது. சரி, இப்போது பணத்தை அதிகமாக சேர்ப்பதற்கு ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை தெரிந்து கொள்வோமா.

புயல் வேகத்தில் பணம் சேர எந்த நேரத்தில் உண்டியலில் காசு போட வேண்டும்?
நம்மில் எல்லோருக்கும் தெரியும். இந்த குளிகை நேரம் என்றால் என்ன என்பது. அதாவது குளிகை நேரத்தில் ஒரு விஷயம் நடந்தால், அது நம்முடைய வாழ்வில் மீண்டும் மீண்டும் நடக்கும். குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும்,  அதை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்போம். அந்தக் குளிகை நேரத்தில் தான் நாம் பணத்தை சேமித்து வைக்க போகின்றோம். அது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

- Advertisement -

ஒரு உண்டியல் வாங்கிக் கொள்ளுங்கள். அது மண் உண்டியலாக இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. மண் உண்டியல் கிடைக்காத பட்சத்தில் பணம் சேமிக்க ஏதாவது ஒரு டப்பா, பாட்டில் இப்படி ஒன்றை மூடி போட்டதாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எந்த நாளில் வேண்டுமென்றாலும் இந்த சேமிப்பை நீங்கள் தொடங்கலாம். ஆனால் சேமிப்பை தொடங்கக்கூடிய நேரம் என்பது குளிகை நேரமாக இருக்க வேண்டும்.

kuligai

நாள்காட்டியில் பார்த்தாலே உங்களுக்கு குளிகை நேரம் தினமும் எப்போது வருகிறது என்பது தெரிந்துவிடும். அப்படி இல்லை என்றால் இந்த பதிவிலேயே குளிகை நேரத்தில் பட்டியல் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் குளிகை நேரம் நமக்கு இருக்கும். அந்த நேரத்தை தான் நாம் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றோம். இந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் நீங்கள் ஒரு தொகையை அந்த உண்டியலில் போட வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தொடங்கக்கூடிய முதல் நாள் என்ன செய்யணும். முதல் நாள் புது உண்டியல் வாங்கிட்டீங்க. அதில் முதலில் பச்சை கற்பூரம் போடுங்க. அதன் பின்பு 1 ரூபாயை போட்டு, உங்களுடைய சேமிப்பை தொடங்குங்கள். கட்டாயம் உண்டியலில் பச்சை கற்பூரமும், பணமும் போடக்கூடிய நேரம் குளிகை நேரம் ஆக இருக்க வேண்டும். கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தடுத்து தினமும் அந்த உண்டியலில் நீங்கள் பணத்தை சேர்க்க தொடங்க வேண்டும். தினம் தினம் போடக்கூடிய பணம், உங்களுடைய விருப்பம் தான். ஒரு ரூபாயிலிருந்து அதிகபட்சம் எவ்வளவு ரூபாயை உண்டியலில் போட முடியுமோ அவ்வளவு ரூபாயை குளிகை நேரத்தில் உண்டியலில் போட்டு வைக்கலாம்.

உண்டியல் நிரம்பிவிட்டது. உள்ளே இருக்கும் பச்சை கற்பூரமும் கரைந்து விட்டது. உண்டியலில் இருக்கும் பணத்தை நீங்கள் எடுத்து உங்களுடைய தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிலிருந்து ஒரு சின்ன தொகையை தான தர்ம காரியத்திற்கு பயன்படுத்துங்கள். மீண்டும் அதே உண்டியலில் பணம் சேர்த்தாலும் சரி, அல்லது வேறு புதிய உண்டியலை வாங்கி வைத்து பணம் சேர்த்தாலும் சரி அது உங்கள் விருப்பம். மேல் சொன்ன முறையில் பணத்தை நீங்கள் சேர்த்து வர வர சேமிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால், தினம் தினம் பணம் பார்க்கலாம். அது மட்டும் இல்லைங்க, எதிரிகள் நம்மை பார்த்தால் எட்டடி தூரத்திற்கு எகிறி ஓடி விடுவார்கள்.

உண்டியலில் இப்படி பணம் சேரும். உங்களுடைய வங்கி கணக்கில் பல மடங்கு பணம் உயரத் தொடங்கிவிடும். இந்த எளிமையான பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நீங்களும் பல லட்ச ரூபாய்க்கு அதிபதி ஆகலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -