ஏவல், பில்லி, சூனியம், எதிரி தொல்லை, எதுவாக இருந்தாலும் நம் பக்கம் நெருங்கவே நடுநடுங்கும். தினமும் முருகப் பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால்.

murugan-om
- Advertisement -

பொதுவாகவே கெட்ட சக்திகள் நம்மிடம் நெருங்காமல் இருக்க வேண்டும் என்றால், முருகப்பெருமானின் வழிபாடு நமக்கு துணையாக நிற்கும். முருகப்பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேல் நம் வீட்டில் இருந்தால் எந்த துஷ்ட சக்திகளும் நம் வாசல் படிக்கு உள்ளே நுழையவே முடியாது. அம்பாளின் கையால் முருகப்பெருமானுக்கு  கொடுக்கப்பட்ட இந்த வேலுக்கு அப்படி ஒரு அபரிமிதமான சக்தி. எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய சக்தி கொண்ட வேல்முருகனை எவர் வீட்டில் தினந்தோறும் வழிபட்டு வருகிறார்களோ அவர்கள் வீட்டில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

இது தவிர நமக்கு வாழ்க்கையில் எதிரிகளால் நிறைய பிரச்சனை, எதிரிகளால் ஏவி விடப்படும் எதிர்மறை ஆற்றலின் மூலம் நிறைய பிரச்சனை வந்து கொண்டே உள்ளது. செய்வினை வைத்து விட்டார்கள். துர்சக்திகள் மூலம் வீட்டில் தீராத கஷ்டம் வருகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் அடித்து விரட்ட நாம் செய்ய வேண்டிய ஒரு சுலபமான வழிபாட்டு முறையைப் பற்றித் தான் இன்று நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் பாடல் வரிகளை நம்முடைய வீட்டில் தினம்தோறும் படித்து வந்தால், நம் வீட்டை எந்த கெட்ட சக்தியாலும் எதுவும் செய்துவிடமுடியாது. எதிரிகள் நம் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள். எதிரிகளால் ஏவி விடப்படும் எதிர்மறை ஆற்றலினால் நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அடித்து துவம்சம் செய்யக்கூடிய குமாரஸ்தவம் பாடல் வரிகள் உங்களுக்காக இதோ.

Lord Murugan Vel

1. ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ:
2. ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ:
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ:
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ:
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ:

- Advertisement -

6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ:
7. ஓம் நவநிதி பதயே நமோ நமஹ:
8. ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ:
9. ஓம் நரபதி பதயே நமோ நமஹ:
10. ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ:

lord-muruga1

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ:
12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ:
13. ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ:
14. ஓம் தபராஜ பதயே நமோ நமஹ:
15. ஓம் இகபர பதயே நமோ நமஹ:

- Advertisement -

murugan-1

16. ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ:
17. ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ:
18. ஓம் நயநய பதயே நமோ நமஹ:
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ:
20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ:

21. ஓம் வல்லீ பதயே நமோ நமஹ:
22. ஓம் மல்ல பதயே நமோ நமஹ:
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ:
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ:
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ:

kantha sasti kavasam lyrics

26. ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ:
27. ஓம் அபேத பதயே நமோ நமஹ:
28. ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ:
29. ஓம் வியூஹ பதயே நமோ நமஹ:
30. ஓம் மயூர பதயே நமோ நமஹ:

kantha sasti kavasam lyrics

31. ஓம் பூத பதயே நமோ நமஹ:
32. ஓம் வேத பதயே நமோ நமஹ:
33. ஓம் புராண பதயே நமோ நமஹ:
34. ஓம் ப்ராண பதயே நமோ நமஹ:
35. ஓம் பக்த பதயே நமோ நமஹ:

kantha sasti kavasam lyrics

36. ஓம் முக்த பதயே நமோ நமஹ:
37. ஓம் அகார பதயே நமோ நமஹ:
38. ஓம் உகார பதயே நமோ நமஹ:
39. ஓம் மகார பதயே நமோ நமஹ:
40. ஓம் விகாச பதயே நமோ நமஹ:

murugan

41. ஓம் ஆதி பதயே நமோ நமஹ:
42. ஓம் பூதி பதயே நமோ நமஹ:
43. ஓம் அமார பதயே நமோ நமஹ:
44. ஓம் குமார பதயே நமோ நமஹ:

மொத்தமாக இதில் நாற்பத்தி நான்கு வரிகள் உள்ளது. தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு மனதார இந்த வரிகளை பார்த்து, வாயார ஒரே ஒரு முறை உச்சரித்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத பல நன்மைகள் நடக்க தொடங்கும்.

murugan

தினம்தோறும் இந்த வரிகளை வாசித்து வாருங்கள். இந்த பாடல்வரி உங்களுக்குள் மன தைரியத்தை உண்டுபண்ணி, வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொள்ள கூடிய துணிச்சலைக் கொடுக்கும். தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இந்த பாடல் வரிகளை உச்சாடனம் செய்துவர நம்பமுடியாத மாற்றம் வாழ்வில் நிகழும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்பிக்கையோடு முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டவர்கள் யாரும் கைவிடப்பட்டது கிடையாது. நம்பிக்கையுள்ளவர்கள் இந்த வழிபாட்டு முறையை நம்பிக்கையோடு முயற்சி செய்து நல்ல பலன் பெறவேண்டும் என்ற அந்தப் எம்பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -