இந்த ஐடியா தெரிஞ்சா ஆயிசுக்கும் உங்களுக்கு குதிகால் வெடிப்பு வரவே வராது.

padam
- Advertisement -

இந்த குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி தடவினாலும் அதை சரி செய்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த குதிகால் வெடிப்பால், பாதத்தில் அத்தனை வலியும் வேதனையும் இருக்கும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட எளிமையான இரண்டு அழகு குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குதிகால் வெடிப்பு நீங்க எளிய குறிப்பு

இந்தக் குறிப்புக்கு நமக்கு கொஞ்சமாக பச்சரிசி தேவை. 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசியை முந்தைய நாள் இரவே, தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் ஊற வைத்த பச்சரிசி, ஊற வைத்த அந்த தண்ணீரை ஊற்றி, இதோட இரண்டு கொத்து வேப்ப இலை, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

- Advertisement -

அந்த தண்ணீர் மட்டும்தான் நமக்கு தேவை. திப்பியை எடுத்து கை கால்களில் ஸ்க்ரப்பராக தேய்த்துக் குளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். வடிகட்டி வைத்திருக்கும் அந்த தண்ணீர் இருக்கிறதல்லவா. அதை தான் இப்போது நாம் பயன்படுத்த போகின்றோம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வடிகட்டி வைத்திருக்கும் இந்த தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் கைவிடாமல் கலந்து கொடுத்தால், இது சிவப்பு நிறத்தில் கொஞ்சம் திக்காக, பேஸ்ட் போல கட்டி பிடிக்கும்.

அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பேஸ்டை நன்றாக ஆற வைத்து ஒரு டப்பாவில் மாற்றி, ஃப்ரிட்ஜில் ஸ்டொர் செய்தால் தினமும் பயன்படுத்தலாம். இதை தினமும் இரவு உங்கள் பாதங்களில் தடவவும். தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு சுடுதண்ணீரில் கல் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு, போட்டு உங்கள் உள்ளங் கால்களை, பாதங்களை அதில் மூழ்கும்படி பத்து நிமிடம் வையுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு துண்டை வைத்து உங்கள் பாதங்களை சுத்தமாக துடைத்து எடுத்து விடுங்கள். பிறகு கால்களில் எந்த இடத்தில் எல்லாம் வெடிப்பு இருக்கிறதோ, தயார் செய்து வைத்திருக்கும் அந்த பேஸ்ட்டை எடுத்து நன்றாக தடவி மசாஜ் செய்து விடவும். காலில் தடவிய பேஸ்ட் காய்ந்ததும் தூங்கச் செல்லவும்.

தினமும் இந்த பேஸ்டை உள்ளங்கால்களில் தடவி வர ஏழு நாட்களில் நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள். (நாம் தயார் செய்த இந்த லிக்விடை இரண்டு பாகங்களாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றை பாதத்தில் தடவ, இன்னொரு டப்பாவில் இருப்பதை முகத்தில் இருக்கும் முகப்பருவின் மீது வைக்கலாம். அப்படி செய்தால் ஏழு நாட்களில் முகப்பரு வந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். அந்த இடத்தில் தழும்பு இருந்தால் கூட அதை மறைய செய்ய இந்த அழகு குறிப்பு பயன்படும்.)

- Advertisement -

இதற்கெல்லாம் எங்களுக்கு நேரமே இல்லை. வேலையை சரியா இருக்கும் என்பவர்களுக்கும் ஒரு குறிப்பு இருக்கிறது. இது பழமையான குறிப்பு தான். நல்ல சுத்தமான விளக்கெண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். இரவு தூங்க செல்வதற்கு முன்பு மேலே சொன்னபடி சுடுதண்ணியில் காலை 10 நிமிடம் வைத்து வையுங்க.

இதையும் படிக்கலாமே: முடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்கும் தேங்காய் எண்ணெய்.

காலில் இருக்கும் ஈரத்தை சுத்தமாக துடைத்து விட்டு இந்த விளக்கெண்ணெயை பாதங்களில் படும்படி, வெடிப்புகளில் நன்றாக படும்படி பூசி இரவு தூங்கச் சென்றால் வெடிப்பு சீக்கிரம் நீங்கிவிடும். மீண்டும் வெடிப்பு பாதங்களில் வராமலும் இருக்கும். எளிமையான இந்த அழகு குறிப்பு தேவை என்பவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -