நாளை கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த மந்திரத்தை சொன்னால், குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

krishna
- Advertisement -

ஆசிர்வாதம் செய்யும்போது பெரியவர்கள், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்லுவது வழக்கம். இந்த 16 செல்வங்களில் மிக மிக முக்கியமான செல்வமாக சொல்லப்படுவது குழந்தை செல்வம். மற்ற செல்வங்களைக் காட்டிலும் இந்த குழந்தை பாக்கியம் பெறுவதில் தான் இன்றைய சூழ்நிலையில் நிறைய கஷ்டம் இருக்கிறது. ஒரே ஒரு குழந்தையாவது பிறக்காதா என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த கஷ்டம் நன்றாகவே புரியும். நீங்களும் ஒரு குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருக்கிறீர்களா. உங்களுக்கான ஆன்மீகம் சார்ந்த பதிவு தான் இது. நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தி. அந்த குறும்பு கண்ணனை நினைத்து, நீங்கள் இந்த எளிமையான மந்திரத்தை உச்சரியுங்கள். அடுத்த கிருஷ்ண ஜெயந்திக்குள் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் ஒரு குட்டி கண்ணனோ, குட்டி ராதையோ தவழுவாங்க.

கிருஷ்ண ஜெயந்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்:
காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கிருஷ்ணனை நினைத்து இந்த விரதத்தை தொடங்குங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றபடி விரதம் இருந்து கொள்ளுங்கள். கிருஷ்ண ஜெயந்தி என்றால் மாலை நேரம் தானே சிறப்பு. மாலை பூஜைக்கு கிருஷ்ணனுக்கு உங்களால் முடிந்த பட்சணங்களை நிவேதியமாக செய்து வைத்து விடுங்கள். பிறகு முக்கியமாக நீங்கள் வைக்க வேண்டிய நிவேதியம் வெண்ணெய்.

- Advertisement -

கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை செய்யக்கூடிய பூஜையில் யாருக்கு குழந்தை வரம் வேண்டுமோ, அவர்கள் இந்த வெண்ணெயை கொஞ்சம் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை உச்சரியங்கள். மனம் உருகி உங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் என்ற வேண்டுதலை கண்ணனிடம் வைத்து, மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மந்திரத்தை உச்சரித்து விட்டு கையில் வைத்திருக்கும் வெண்ணெயை நீங்கள் சாப்பிட்டு விடுங்கள். நாளைய தினம் நீங்கள் உச்சரிக்க வேண்டிய கிருஷ்ண மந்திரம் இதுதான்.

தேவ தேவ ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரயோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ் பந்தம் யசஸ்விமம்.

- Advertisement -

நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் போது, அந்த மந்திரத்தின் சக்தியானது உங்கள் கையில் வைத்திருக்கும் அந்த வெண்ணையில் இறங்கிவிடும். அந்த வெண்ணெயை நீங்கள் உட்கொண்ட உடன், அந்த மாயகிருஷ்ணனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. இந்த வழிபாட்டை ஆண்கள் செய்ய வேண்டுமா? பெண்கள் செய்ய வேண்டுமா? கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்வது சிறப்பு. முடியாதவர்கள் கணவன் மட்டும் தனியாக செய்தாலும் தவறு இல்லை. மனைவி மட்டும் தனியாக செய்தாலும் தவறு கிடையாது. அது அவரவருடைய சூழ்நிலையை பொறுத்தது. மன நிறைவோடு நாளைய தினம் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் இந்த அற்புதமான நாளை தவிர விடாமல் இன்றே முருகர் ஆலயத்திற்கு இந்த பொருட்களை வாங்கிக் கொடுத்து இப்படி வழிபாடு செய்தால் தீர்க்கவே முடியாத கடனும், தீராத வியாதியும் தீர்ந்து விடும்.

அதுமட்டுமில்லைங்க. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணி பெண்கள் நாளைய தினம் இந்த மந்திரத்தை சொன்னால் உங்களுடைய பிள்ளை அழகாக சுறுசுறுப்பாக அறிவாளியாக பிறக்கும் என்பதும் நம்பிக்கை. நீங்க குழந்தை பேருக்காக மருத்துவரிடம் சென்று ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டு இருந்தாலும் கூட, அதை நிறுத்தாமல், இந்த வழிபாட்டை மேற்கொண்டு, தினம் தினம் இந்த மந்திரத்தை உச்சரித்து வர குழந்தை பாக்கியத்தை சீக்கிரம் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செல்வங்களில் எல்லாம் மிகச்சிறந்த செல்வமான குழந்தை செல்வத்தை பெறுவதற்கு மேல் சொன்ன இந்த ஆன்மீகம் பரிகாரத்தை நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -