பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் இந்த அற்புதமான நாளை தவிர விடாமல் இன்றே முருகர் ஆலயத்திற்கு இந்த பொருட்களை வாங்கிக் கொடுத்து இப்படி வழிபாடு செய்தால் தீர்க்கவே முடியாத கடனும், தீராத வியாதியும் தீர்ந்து விடும்.

murugan cash
- Advertisement -

காக்கும் கடவுளான கந்தக் கடவுளை நினைத்து நாம் எந்த வேண்டுதலை வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றி தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வேண்டுதலையும் அவருக்கு உகந்த நாளில் அவருக்கு உகந்த பொருட்களை கொண்டு செய்யும் பொழுது அதற்கான பலன் நமக்கு விரைவிலே கிடைக்கும். இதன் காரணமாகவே இன்றைய இந்த அற்புதமான நாளில் முருகப்பெருமானை நினைத்து வேண்டி முருகப்பெருமான் ஆலயத்திற்கு இந்த இரண்டு பொருளை தானமாக தரும் பொழுது நம்முடைய தீராத வியாதி பண பிரச்சனை, கடன் தொல்லை அனைத்தும் தீருவதற்கான வழி பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மனிதனின் அடிப்படை பிரச்சனைகளிலேயே மிகக் கொடியது என்று சொல்லப் போனால் அது பணப் பிரச்சனை தான். பண பற்றாக்குறையினால் தான் கடன் வாங்கி துன்பத்திற்கு உள்ளாகி அந்த கடனை அடைக்க முடியாமல் மேலும் மேலும் கடன் வாங்கி வாழ்க்கையை நரகமாக வேண்டிய சூழ்நிலையில் இன்று பலரும் உள்ளார்கள். அடுத்து ஒரு துயரமான நிலை என்னவென்றால் கையில் பணம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் போவது எனில் அது நிச்சயமாக நம்முடைய உடல் நலக் கோளாறாகத் தான் இருக்கும்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் மருந்து மாத்திரை சாப்பிடாமல் வாழ்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வீட்டில் நான்கு பேர் இருந்தால் நிச்சயம் அதில் ஒருவர் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவராக தான் இருப்பார். அந்த அளவிற்கு வியாதியும் இன்றைய காலத்தில் மனிதர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இவை இரண்டையும் சரி செய்து கூடிய ஒரு பொன்னானாக நாளாக இன்றைய தினம் உள்ளது.

தீராத கடன் வியாதியும் தீர
பொதுவாக செவ்வாய்க்கிழமை என்பது முருகர் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் சஷ்டி திரியும் முருகப்பெருமாருக்கு உகந்த நாள் அதிலும் தேய்பிறை அஷ்டமியான இன்றைய நாளில் முருகப்பெருமானை வணங்குவது மிக மிக விசேஷமான ஒன்று. இவை அனைத்திலும் விட முக்கியமானது இன்றைய தினத்தில் கிருத்திகை நட்சத்திரம் இணைந்து வந்து உள்ளது. முருகருக்கு உகந்த இந்த மூன்றும் ஒரே நாளில் வந்திருப்பது அவருடைய வழிபாட்டை மேலும் பலன் தரக் கூடியதாக செய்யும்.

- Advertisement -

இன்றைய நாளில் ஏதேனும் ஒரு முருகன் ஆலயத்திற்கு விளக்கிற்கு நெய் வாங்கி கொடுக்க வேண்டும். இந்த நெய்யானது உங்களுக்கு இருக்கும் பணப்பிரச்சினை, கடன் பிரச்சனை போன்ற அனைத்தையும் சரி செய்து நல்ல ஒரு செல்வத்தெடுப்பான வாழ்க்கையை வாழ வழி செய்யும். அதே போல தேன் வாங்கி கொடுப்பது உங்கள் உடலில் உள்ள தீராத வியாதிகள் தீரவும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அந்த பாக்கியத்தை பெறவும் இந்த தேன் தானம் உகந்ததாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த பல நூறு பிறகு வந்து இருக்கும் அற்புதமான இந்த நாளை தவிர விடாமல், இன்றைய நாளில் உங்கள் வீட்டில் முருகர் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி அவருக்கு உகந்த செவ்வரளி பூவில் மாலை அணிவித்து ஏதேனும் எளிய நெய்வேத்தியம் படைத்து, வீட்டில் கந்த சஷ்டியை தொடர்ந்து ஒலிக்க விடுங்கள். அதே நேரத்தில் நீங்கள் முருகப் படத்திற்கு முன்பாக அமர்ந்து ஓம் சரவண பவ என்ற இந்த ஒரு மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் அட்சய பாத்திரத்தில் பூக்களை வைக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்? அப்படி என்றால் அதனுடன் இன்னும் சில பொருட்களை சேர்த்துப்பாருங்கள். வீட்டில் செல்வமழை பொழிய ஆரம்பித்து விடும்.

இவை அனைத்தையும் இன்றைய தினத்திலே செய்யும் போது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து முருகப்பெருமானின் அருளோடு நல்ல ஒரு செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழலாம். இந்த வழிபாட்டு முறையிலும் தானம் முறையிலும் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் அதை இன்றே செய்து பலனடையலாம் என்று இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -