குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இன்று வைகாசி விசாக தினத்தில் மாலை இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் முருகப் பெருமான் அருளால் உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.

murugan
- Advertisement -

நம்முடைய இந்து தர்ம சாஸ்திரத்தில் எண்ணற்ற தெய்வ வழிபாடுகள் உள்ளது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சம் உள்ளது. ஒவ்வொரு வேண்டுதலுக்கும் அதற்கான தெய்வத்தை வணங்கி அதற்குரிய பலனை பெறுவதற்கான வழிபாடு முறைகளும் பல உள்ளது. என்ன தான் நாம் இப்படி அனைத்து தெய்வங்களையும் வணங்கினாலும் கூட அந்தந்த தெய்வத்திற்கான விசேஷமான நாளில் அவர்களை வணங்கும் போது அதற்கான பலனே தனி தான்.

அந்த வகையில் இன்று வைகாசி விசாகம் அதாவது முருகப் பெருமானின் பிறந்த தினமான இன்று அவரை எப்படி வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் செல்வ வளத்தை பெற்று உயரலாம் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். முருகப் பெருமானை நினைத்து மற்ற நாட்களில் நாம் வழிபடுவோம். அதை விட இந்த நாளில் அவருக்கு பிடித்த பொருளால் வழிபடும் பொழுது நம்முடைய வேண்டுதல் உடனே பலிக்கும். அதுமட்டுமின்றி குழந்தை வரம் வேண்டுவோர் இந்த வழிபாட்டை செய்து பயன் அடையலாம்.

- Advertisement -

வேண்டுதல்கள் உடனே பலிக்க, குழந்தை வரம் கிடைக்க முருகப்பெருமான் விசாக வழிபாடு:
இன்றைய தினம் வைகாசி விசாகம் காலை 6 மணி முதல் தொடங்கி விடுகிறது. இந்த நாள் முழுவதும் வைகாசி விசாகத்திற்கு விரதம் இருப்பவர்கள் காலை முதலே விரதத்தை தொடங்கி இருப்பார்கள். காலையிலே எழுந்து குளித்து பூஜையை துவங்கி பிறகு முருகப்பெருமான் உடைய சிலையோ அல்லது வேலோ இருந்தால் அதற்கு பால் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டு பூஜையை தொடங்க வேண்டும்.

இந்த நாள் முழுவதும் விரதம் இருப்பவர்கள் மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று அங்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்க வேண்டும். இது தான் இன்றைய தினத்தில் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் முருகப்பெருமான் ஆனவர் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்பிலிருந்து தோன்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாகவே முருகப்பெருமானுக்கு பால்குடம் எடுப்பது பாலபிஷேகம் செய்வதை நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம். இன்றைய தினத்தில் இந்த பால் அபிஷேகம் செய்வது மிக மிக சிறந்தது.

- Advertisement -

அடுத்து இன்றைய தினத்தில் நாம் வீட்டில் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இன்று மாலை வீட்டில் ஆறு மணிக்கு முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு முன்பாக வாசலில் அரிசி மாவில் நட்சத்திர கோலம் போட வேண்டும். முருகப்பெருமான் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர். கார்த்திகை என்றால் கார்த்திகை தீபம், நட்சத்திரம் இவற்றை குறிக்கும் எனவே நட்சத்திர கோலத்தை வாசலில் போட்ட பிறகு அதில் ஒரு தீபம் ஏற்றி வைத்து அதன் அருகில் ஒரு மலரை வைத்து விடுங்கள்.

இதன் பிறகு உங்கள் வீட்டில் பூஜை அறையில் முருகப்பெருமானின் படம் வேல் விக்ரகம் எதுவாக இருந்தாலும் அங்கு நெய்வேத்தியமாக பால் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் பருப்பு பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்ற ஏதாவது விசேஷமான நெய்வேத்தியத்தை செய்து படைப்பது மிகவும் சிறந்தது. அதன் பிறகு 6 அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு முருகப் பெருமானை நினைத்து இந்த ஆறு தீபத்தையும் ஏற்ற வேண்டும். இந்த ஆறு தீபத்தையும் ஏற்றி ஆறுமுகனை மனதார வேண்டி உங்களுடைய வேண்டுதல் எதுவாக இருப்பினும் மனம் உருக சொல்லி முறையிடுங்கள். நிச்சயம் இந்த முறையில் வழிபடும் போது உங்கள் வேண்டுதலுக்கான பலன் விரைவில் கிடைக்கும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செய்யும் போது உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் நிச்சயமாக அவர்களை இந்த பூஜையில் கலந்து கொள்ள செய்யுங்கள். ஏனெனில் முருகப்பெருமான் கார்த்திகை பெண்களிடம் குழந்தையாக வளர்ந்தவர் இப்படி நாம் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றி அவரை வணங்கும் போது குழந்தைகள் அருகில் இருந்தால் அது இன்னும் நல்ல பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் முன்னேற்றம் அனைத்தையும் முறியடிக்கும் இந்த பித்ரு தோஷத்தை போக்க பௌர்ணமி இந்த ஒரு பொருளை தானமாக வழங்கினால் போதும். பித்ரு தோஷத்தை போக்கி நிம்மதியாக வாழ எளிய பரிகாரம்

இந்த வழிபாட்டை குழந்தை இல்லாதவர்கள் செய்தால் நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அது மட்டும் இன்றி நம்முடைய எந்த வேண்டுதலாக இருந்தாலும் இந்த முறையில் வழிபடும் போது அவர் உடனே செவி சாய்ப்பார்.

- Advertisement -