உங்கள் முன்னேற்றம் அனைத்தையும் முறியடிக்கும் இந்த பித்ரு தோஷத்தை போக்க பௌர்ணமி இந்த ஒரு பொருளை தானமாக வழங்கினால் போதும். பித்ரு தோஷத்தை போக்கி நிம்மதியாக வாழ எளிய பரிகாரம்

thanam-pournami
- Advertisement -

நாம் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப தோஷங்கள் நம்மை வந்து சேரும் என்பது அனைவரும் அறிந்ததே. நம் முன்னோர்களுக்கு நாம் முறையான கடமைகளை செய்யாமல் இருப்பதே பித்ரு தோஷம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த பித்ரு தோஷத்தை சரிசெய்யா விட்டால் நம் வாழ்வில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் அடைய முடியாது. அப்படிப்பட்ட பித்ரு தோஷத்தை நீக்குவதற்கு எந்த பொருளை தானமாக வழங்க வேண்டும் என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்ப்போம்.

இறந்த நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை முறையாக செய்யாமல் இருந்தாலும், முறையாக தர்ப்பணம் செய்யாமல் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும். மேலும் முன்னோர்கள் செய்த பாவத்தினாலும் பித்ரு தோஷம் ஏற்படும். இந்த தோஷம் ஏற்பட்டால் நம் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் அனைத்து விதமான நல்ல விஷயங்களும் தடைப்படும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. முறையாக இந்த பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்தால் மட்டுமே தடைப்பட்டிருக்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.

- Advertisement -

பித்ரு தோஷம் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்:
பானலிங்கம், விக்ரலிங்கம், ஸ்படிக லிங்கம் போன்ற லிங்கங்களில் ஏதாவது ஒரு லிங்கத்தையும் அதற்குரிய நந்தி சிலையையும் வாங்கி வர வேண்டும். அதை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து அதற்கு சுத்தமான தண்ணீர், பசும்பால், பசு நெய், பசுந்தயிர், விபூதி, சந்தனம், தேன் இவற்றில் உங்களால் இயன்ற பொருட்களை வைத்து தினமும் அபிஷேகம் மேற்கொள்ள வேண்டும். மேலும் அதற்கு நம்மால் இயன்ற அளவு ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்து தீப தூப ஆராதனை செய்ய வேண்டும். இந்த பூஜையை பௌர்ணமி நாளில் தொடங்கி அடுத்த பௌர்ணமி நாள் வரை தினமும் செய்ய வேண்டும்.

பிறகு நாம் பூஜை செய்த அந்த சிவலிங்கத்தையும் நந்தியையும் சிவபூஜை செய்பவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். அவ்வாறு தானம் செய்யும் பொழுது அவர்களுக்கு வஸ்திரம், பூ, பழம் போன்றவற்றையும் சேர்த்து தானம் செய்ய வேண்டும். பிறகு அவர்களிடம் இருந்து ஆசிர்வாதத்தை நாம் பெற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் பித்ரு தோஷம் மட்டும் இன்றி நம் ஜாதகத்தில் இருக்கும் மற்ற பிற தோஷங்களும் நீங்கும். அவ்வாறு நீங்குவதால் நமக்கு நடக்கக்கூடிய நல்ல காரியங்கள் அனைத்தும் எந்தவித தடங்கல்களும் இன்றி நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் வீட்டில் துளசி மாடம் உள்ளாதா? அப்படியானால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உங்களுக்காக காத்திருக்கிறது. துளசி செடியுடன் இதையும் சேர்த்து வைத்தால் எங்கிருக்கும் அதிர்ஷ்டமும் உங்கள் வீடு தேடி வந்து விடும்.

மிகவும் எளிமையான முறையில் இந்த சிவ பூஜையை நம் வீட்டில் மேற்கொண்டு சிவலிங்க தானம் செய்து, பித்ரு தோஷம் நீங்கி தடைப்பட்டிருக்கும் நம்முடைய அனைத்து நல்ல காரியங்களும் நிறைவேற சிவனின் அருளை பரிபூரணமாக பெற்று நாமும் நம் சந்ததியும் நல்ல முறையில் வாழ்வோம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -