குழந்தை பாக்கியம் பெற ஏங்குபவர்கள் கணவன் மனைவி தம்பதியராய் இதில் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் நிச்சயம் மழலைச் சத்தம் கேட்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

murugan dheepam
- Advertisement -

வாழ்க்கையில் நாம் இன்றளவும் எவ்வளவோ போராட்டங்களையும் துன்பங்களையும் சந்தித்தும் சகித்தும் கொண்டும் வாழ்கிறோம் என்றால் நிச்சயம் அது நம்முடைய குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக தான். நாம் வாழ்வதற்கான உயிரோட்டமே நம் பிள்ளைகளின் வளர்ச்சியை சார்ந்தே உள்ளது. அத்தகைய பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியும் தரக் கூடிய இந்த குழந்தை செல்வம் பலருக்கும் இன்று எட்டாக் கனியாக உள்ளது.

முன்பெல்லாம் எங்கேனும் ஒரிடத்தில் யாரேனும் ஒருவருக்கு குழந்தை இல்லை என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்றைய கால சூழ்நிலையே அப்படியே மாறி விட்டது. குழந்தை பாக்கியம் என்பது பெரும்பாலானவருக்கு பெரிய கனவாகவே இருக்கிறது. அப்படியானவர்கள் தக்க சிகிச்சையும் கணவன் மனைவி மனமொத்த நல்ல இல்லறத்துடன் இந்த ஒரு தீப பரிகாரத்தையும் செய்யும் போது நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தீப பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

குழந்தை பாக்கியம் பெற தீப பரிகாரம்
குழந்தை பாக்கியத்திற்கான இந்த பரிகாரத்தை மகா பெரியவா அவர்கள் அருளியதாக சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு பாலாடை மட்டும் தேவை. இந்த பரிகாரம் செய்ய எந்த மாலை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு இந்த பாலாடையில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொண்டு கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றி வரும் குழந்தை பாக்கிய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. இது போல செவ்வாய் கிழமையில் முருகர் வழிபாட்டையும் தொடர்ந்து செய்யும் போதும், குழந்தை பாக்கியத்தை பெற முடியும். அதே போல் சஷ்டி விரதத்தை தவறாமல் கடைபிடிப்பவர்களுக்கும் சீக்கிரத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமையில் இதற்கென பத்து ரூபாய் செலவு செய்தால் கூட போதும், உங்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல இந்த பத்து ரூபாய் பல ஆயிரமாக திரும்ப கிடைக்கும் யோகம் வரும்.

இந்த பாலாடை தீப பரிகாரத்தோடு முருகப்பெருமானின் வழிபாட்டையும் தொடர்ந்து செய்யும் போது உங்கள் வீட்டில் சீக்கிரம் மழலைச் சத்தம் கேட்கும் என்று சொல்லி இருக்கிறார். இந்த தீப பரிகார முறைகளில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து மழலை செல்வ பாக்கியத்தை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -