வெள்ளிக்கிழமையில் இதற்கென பத்து ரூபாய் செலவு செய்தால் கூட போதும், உங்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல இந்த பத்து ரூபாய் பல ஆயிரமாக திரும்ப கிடைக்கும் யோகம் வரும்.

mahalakshmi cash
- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றாலே மிகவும் விசேஷமானது தான். அதுவும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவான் இருவருக்கும் மிக மிக விசேஷமானது. இந்த வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் செய்யும் பரிகாரம், தீபம் இவை எல்லாமே நம்முடைய பணவரவை பல மடங்கு பெருக்கிக் கொடுப்பவை. அப்படியான சுபிட்சத்தை தரக் கூடிய வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த பொருட்களை எல்லாம் வாங்கும் பொழுது பணவரவு தாராளமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அது குறித்தான தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பண வரவு தாராளமாக இருக்க வெள்ளிக்கிழமையில் வாங்க வேண்டியது
பணவரவு தாராளமாக இருக்க வேண்டுமெனில் முதலில் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் இருக்க வெள்ளிக்கிழமைகளில் தாயாரை முறையாக வழிபட வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டை முறைப்படி செய்து விடுங்கள்.

- Advertisement -

அதே போல் வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கும் மிகவும் விசேஷமான தினம். சுக்கிர பகவானுடைய அனுகிரகம் கிடைத்து விட்டால் பணவரவிற்கு தடை என்ற வார்த்தையே கிடையாது. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர திசை வந்து விட்டால் அவர்களுடைய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. அப்படியான சுக்கிர அனுகிரகத்தையும் ஒரு சேர பெற இந்த பொருட்களை எல்லாம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையானது காலை 6 மணி முதல் ஏழு மணி வரை, மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை, அதே போல் இரவு 8 லிருந்து 9 மணி வரை இருக்கும் இந்த காலை 6 மணிவையிலிருந்து ஏழு மணிக்கு வரை என்பது விசேஷமானதாக இருந்தாலும் அந்த நேரங்களில் கடைகள் இப்போது எல்லாம் திறப்பதில்லை. ஆகையால் அடுத்து வரும் இரண்டு சுக்கிர வேளையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் வாங்க வேண்டிய பொருள் என்றால் அது அனைவருக்கும் தெரிந்த கல் உப்பு தான். இது சுக்கிரனுடைய அனுக்கிரகம் உடைய பொருளாக பார்க்கப்படுவதை விட மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கும் பொருளாகவே பார்க்கப்படுகிறது. எனவே இதை கட்டாயமாக வாங்கி விடுங்கள். அடுத்ததாக மொச்சை வெள்ளை மொச்சை இதுவும் சுக்கிர பகவானுக்கு மிகவும் ஏற்ற பொருள் அதே போல் பால்கோவா.

பெரும்பாலும் வட இந்தியர்கள் வீட்டில் எப்போதும் இனிப்பு பொருட்களை வைத்திருப்பார்கள். வீட்டிற்கு வருபவர்களுக்கும் இனிப்பை பிரதானமாக கொடுப்பார்கள். இதற்கு காரணம் இனிப்பில் சுக்கிரனுடைய வாசம் இருப்பதாக நம்பப்படுகிறது. இனிப்பு வீட்டில் எவ்வளவு நாம் பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு வீட்டில் பணப்புழக்கம் இருக்கும். இனிப்பை அதிக அளவு பயன்படுத்த வேண்டும் என்றவுடன் அனைவரும் இனிப்பு அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற பொருள் கிடையாது. வீட்டில் இனிப்பை வைத்திருக்க வேண்டும். வீட்டிற்கு வருபவருக்கு இனிப்பை வழங்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து முக்கியமான பொருள் ஊறுகாய். இது குபேர அம்சம் பொருந்தியதாக சொல்லப்படுகிறது. மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவான் எப்படி பணவரவிற்கு முக்கியமானவர்களோ அந்த அளவிற்கு பணவரவையும் தந்து அதை நம்மிடம் தங்க வைத்து பாதுகாக்கும் பொறுப்பை கொண்டவர் குபேரர். இவருக்கு உகந்த பொருளான இந்த ஊறுகாயையும் சுக்கிர ஓரையில் வாங்கும் போது பண வரவு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த மந்திரம் சொல்லி எந்த ஒரு செயலை தொடங்கினாலும் வெற்றி நமக்கு தான்.. உலகத்தையே நம் வசப்படுத்தி, காரிய வெற்றி அடைய உதவும் சிறப்பான மந்திரம்.

இந்த பதிவில் நம்முடைய பணவரவு தாராளமாக்கி கொள்ள வெள்ளிக்கிழமை சுக்கி ஓரையும் சில பொருட்களை வாங்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பரிகாரம் முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை உங்கள் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றி நல்ல ஒரு வளமான வாழ்க்கை வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -