இனி புத்திர பாக்கியமே கிடைக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் கூட, இந்த விளக்கை ஏற்றினால் நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி.

murugan
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் குழந்தை பாக்கியம் கிடைப்பது என்பது ஒரு வரமாக இருக்கிறது. அது ஒரு அபூர்வமான விஷயமாக ஆகிவிட்டது. நம்முடைய தாத்தா பாட்டிகள் எல்லாம் ஐந்தாறு குழந்தைகள் என்று வரிசையாக நிறைய குழந்தைகளை பெற்று வளர்த்து வந்தார்கள். ஆனால் தற்போது ஒரு குழந்தையை பெற்று வளர்க்கவே சிரமம் என்ற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். இதற்கு என்ன காரணம் என்ற ஆராய்ச்சிக்குள் நாம் செல்ல வேண்டாம்.

ஆனால் ஒரு குழந்தை கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு ஆன்மீக ரீதியான ஒரு தீர்வைதான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். சில பேர் மருத்துவர்களை அணுகியிருப்பார்கள். குழந்தை பேருக்காக சிகிச்சை கூட எடுத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தள்ளி போகும். சில பேருக்கு குழந்தை பாக்கியமே கிடையாது என்று மருத்துவர்களால் சொல்லப்பட்டிருக்கும். ஜாதகத்திலும் குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லி இருப்பார்கள்.

- Advertisement -

அப்படி இருப்பினும் நீங்கள் நம்பிக்கையோடு இந்த ஒரு வழிபாட்டையும் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. இந்த பரிகாரத்தை முருகப்பெருமானை நினைத்து தான் செய்யப் போகின்றோம். சிகிச்சையோடு சேர்த்து இந்த பரிகாரத்தையும் முயற்சி செய்யுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் மேற்கொள்ளும் சிகிச்சையை கைவிடக்கூடாது.

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு பழமையான முருகன் கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமையில் இந்த தீபத்தை ஏற்றலாம். இந்த இரண்டு கிழமையில் ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒன்பது வாரமும் தொடர்ந்து அதே கிழமையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். நேரம் என்பது காலை அல்லது மாலை உங்களுடைய விருப்பம் போல தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

33 மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி, மஞ்சள் திரை போட்டு, முருகப்பெருமானுக்கு முன்பு இந்த தீபத்தை ஏற்றி வைத்து முழு மனதோடு எனக்கு குழந்தை வரம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த விளக்கை ஏற்றி இருவரும் தம்பதியராக முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைக்கலாம்.

ஒன்பது வாரம் தவறாமல் தீபம் ஏற்ற வேண்டும். பெண்களால் தீபத்தை ஏற்ற முடியாத சூழ்நிலையில் அந்த கணவர் போய் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த விளக்கை ஏற்றும் போது நல்லதொரு பலன் கூடிய சீக்கிரத்தில் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நாளை சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு இந்த வால் வழிபாடு செய்தால் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் கைகூடும்.

இந்த பரிகாரத்தை முடிந்தால் விசாக நட்சத்திரத்தன்று அல்லது சஷ்டி திதி அன்றோ தொடங்கலாம். அதாவது செவ்வாய்க்கிழமை அன்று விசாக நட்சத்திரம் கூடி வரும் போது, வியாழக்கிழமை அன்று விசாக நட்சத்திரம் கூடி வரும் போது, அதே சமயம் இந்த இரண்டு கிழமைகளில் சஷ்டி திதி வந்தால், அந்த நாளில் இந்த பரிகாரத்தை தொடங்குவது மிக மிக சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது. வாய்ப்பு இருந்தால் இந்த தினத்தில் பரிகாரத்தை தொடங்க பாருங்கள். நம்பிக்கையோடு முருகப்பெருமானின் பாதங்களை பற்றி கொண்டால், அந்த முருகர் போலவே ஒரு வேலன் உங்களுக்கும் பிறப்பான் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -