குழந்தை வரம் அருளும் முருகன் ஆலயம்

vel elumichai
- Advertisement -

முருகா என்றாலே உருகாத மனம் என்ற வாக்கிற்கு ஏற்றபடி நாம் முருகா என்று கூப்பிட குரலுக்கு ஒடி வந்து அருளும் கருணை மிக்க தெய்வம் தான் இந்த கந்த கடவுள். இவருடைய புகழைச் சொல்ல பல ஆலயங்கள் இருந்தாலும் குழந்தை வரத்தை அருளுவதற்கு என்று சிறப்புமிக்க ஒரு ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் சிறப்புகளை பற்றியும் அந்த எப்படி வழிபட்டால் குழந்தை பாக்கியத்தை நாம் பெற முடியும் என்பதை பற்றியும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை வரும் அருளும் முருகன் ஆலயம்
இந்த ஆலயமானது விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணை நல்லூர் அருகில் உள்ள ஒட்டன் கிராமத்தில் இரட்டைக் குன்றில் உள்ளது. இந்த குன்று தொலைவிலிருந்து பார்த்தால் மயில் போலவே காட்சி அமைக்கும். இந்தக் குன்றுக்கு முருகன் குன்று என்ற பெயரும் உண்டு. அங்கு அமைந்திருப்பது தான் இந்த ரத்தினவேல் முருகன் ஆலயம்.

- Advertisement -

இந்த ஆலயத்தில் முருகனுடைய உருவப் பிரதிஷ்டைக்கு பதிலாக வெறும் வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள் வருட வருடம் பங்குனி உத்திரத்தின் போது பத்து நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக இங்கு கொண்டாடப்படுகிறது. அதில் ஒவ்வொரு நாளும் அங்கு இருக்கும் வேலில் ஒவ்வொரு எலுமிச்சை பழத்தை சொருகி வைத்து வழிபட்ட பின்பு எடுத்து பாதுகாப்பாக வைத்து விடுவார்கள்.

பத்தாவது நாள் காவடி பூஜை முடிந்த பிறகு 11 வது நாள் இந்த பழங்கள் ஏலம் விடப்படுகிறது. ஏலம் விடப்படும் அன்றைய தினம் இரவில் இடும்பன் பூஜை நடத்தப்படும். அந்த பூஜைக்கு பிறகு ஊரின் நாட்டாமை ஆணி செருப்பின் மீது நின்று கொண்டு ஏலத்தை தொடங்கி வைப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த ஏலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் எலுமிச்சை கனியை ஏலம் எடுத்து உண்டால் குழந்தை பாக்கியம் நிச்சயமாக உண்டு என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த எலுமிச்சை பழத்தை ஏலம் எடுப்பவர்களுக்கு இடும்பனுக்கு படைக்கப்பட்ட சாதத்தை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கு கருவாடு சாதத்தை பிரசாதமாக வழங்குகிறார்கள். அன்றைய தினம் இரவு ஏலம் எடுத்தவர்கள் இந்த சாதத்தை பிரசாதமாக உட்கொள்ள வேண்டும். அடுத்த நாள் காலையில் ஏலத்தில் எடுத்து எலுமிச்சை பழத்தை கொட்டையோடு தம்பதியர் சாப்பிட வேண்டும்.

இந்த முறையில் முருகனை வழிபட்டு இந்த எலுமிச்சை கனி உண்பதினால் மூலம் புத்திர பாக்கியம் நிச்சயமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படி உண்டு பலரும் புத்திர பாக்கியத்தை பெற்றதாகவும் தகவல்கள் உள்ளது. ஆனால் இந்த ஏலத்தை அந்த ஊர் மக்களை தவிர வெளியில் உள்ளவர்களுக்கு வழங்குவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆகையால் ஏலத்தை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஊர் மக்களின் உதவியோடு எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த எலுமிச்சை கனியை திருமண தடை, தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என முயல்பவர்கள், வீடு கட்ட நினைப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் உள்ள குறைகள் தீர வேண்டும் என நினைப்பவர்களும் ஏலம் எடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. நம்பிக்கை தான் வாழ்க்கை அந்த நம்பிக்கை தான் நம்மை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே: பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்கும் முறை

அதே நம்பிக்கையுடன் தான் இந்த முருகன் ஆலயத்திலும் பலரும் வந்து முருகனை நம்பிக்கையுடன் வேண்டி குழந்தை வரத்தை பெற்று செல்கிறார்கள். குழந்தை வரம் அருளும் ரத்தினவேல் முருகன் ஆலயம் குறித்த தகவல் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -