முருகன் வழிபாட்டிற்கு அற்புத நாளாக நாளை (05.09.2023) திகழப் போகிறது. இந்த நாளை தவிர விடாமல் முருகனை இப்படி வழிபட்டால் அந்த முருகனே குழந்தையாக உங்கள் வீட்டில் தவழ்வான்.

murugan vel valipadu
- Advertisement -

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு அகப்பையான கருப்பையில் குழந்தை பிறக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அதை இன்றும் பல பேர் முழுமையாக நம்பி விரதம் இருந்து குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். அப்படி அற்புதமான விரதமாக சஷ்டி விரதம் கருதப்படுகிறது. இருப்பினும் நாளை முருகனுக்கு உரிய செவ்வாய்க்கிழமை அன்று சஷ்டியும், கிருத்திகையும் ஒன்றாக சேர்ந்து வரும் இந்த நாளை தவறவிடாமல் வழிபடுபவர்களுக்கு அந்த முருகனே குழந்தையாக வந்து அவர்கள் இல்லங்களில் தவழ்வான். அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

குழந்தை பாக்கியம் வேண்டி தவமாய் தவமிருக்கும் பலர் இந்த உலகில் இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் குழந்தையே வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு குழந்தைகள் பிறந்து கொண்டே இருக்கிறது. இது காலத்தின் கோலம் என்றே தான் சொல்ல வேண்டும். இருப்பினும் குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் இருப்பவர்கள் முருகனை நினைத்து சஷ்டி தினத்தன்று விரதம் இருந்து முறையாக வழிபட்டால் முருகனின் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

முருகனுக்கு உரிய கிழமையான செவ்வாய்க்கிழமையும், முருகனுக்கு உரிய திதியான சஷ்டி திதியும், முருகனுக்கு உரிய நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புத நாளாக நாளை திகழப் போகிறது. இந்த நாளில் நாம் முறையாக முருகனை வழிபட்டால் அவனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

குழந்தை பாக்கியத்திற்கு விரதம் இருப்பவர்கள் நாளை அருகில் இருக்கும் நகை கடைக்கு சென்று வெள்ளியில் ஒரு சிறிய அளவாவது வேலை வாங்கிக் கொண்டு வர வேண்டும். மாலை நேரத்தில் இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அந்த வேலை பன்னீர் ஊற்றி சுத்தமாக கழுவி சந்தன குங்குமம் இட்டு முருகனின் புகைப்படத்திற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் பச்சரிசியை நிரப்பி அதற்கு நடுவில் வேலை வைத்து விட வேண்டும்.

- Advertisement -

வேலை படுக்க வைக்க கூடாது. வேல் நிற்பது போல் தான் வைக்க வேண்டும். இப்பொழுது வேலிற்கு மலர்களை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி தினமும் வேலிற்கு சந்தனம் குங்குமம், பூக்கள் வைத்து சண்முக கவசத்தை தொடர்ந்து 48 நாட்கள் பாராயணம் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்கினால் நிச்சயமாக முருகப்பெருமான் குழந்தை செல்வத்தை அருள்வார்.

இந்த வேண்டுதல் முடிந்த பிறகு 49 வது நாள் வீட்டில் இருக்கும் அந்த வேலை அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று உண்டியலில் சமர்ப்பித்து விட வேண்டும். தங்களால் இன்ற அளவு ஏதாவது ஒரு பிரசாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்கிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஸ்வஸ்திக் சின்னத்தை பார்த்து இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும். நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நினைத்த வண்ணம் நிச்சயமாக நடக்கும்.

குழந்தை செல்வம் மட்டும் இல்லாமல் உடலில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிணியாக இருந்தாலும் அதை போக்கக்கூடிய வல்லமை இந்த சண்முக கவசத்திற்கு இருப்பதால் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -