வீட்டில் பண வரவு அதிகரிக்க பீரோவுக்கு அடியில் இந்த இரண்டு பொருள்களை யாருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள்.

bero cash
- Advertisement -

மனிதனின் பண தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்காக எத்தனை பாடுபட்டாலும், எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை ஈட்டு முடிவதில்லை. அப்படியே பணத்தை சம்பாதித்தாலும் பணம் கையில் தாங்காமல் செலவழிந்து கொண்டே இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் பணம் எப்போதும் கையில் இருக்க வேண்டும் என்றால் எப்படி?. இந்த கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது நியாயம் தான்.

பணம் கையில் எப்பொழுதும் புழங்கிக் கொண்டே இருக்கவும், பணம் நம் கையில் நிரந்தரமாக தங்கவும் நம் முன்னோர்கள் நிறைய தாந்த்ரீக பரிகார முறைகளை சொல்லி வைத்திருக்கிறார்கள். இந்த பரிகாரங்களை செய்யும் பொழுது நம்மிடம் பண ஈர்ப்பு ஏற்பட்டு பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பெருகும். அதை பயன்படுத்தி நாம் பணம் வரவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போதும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இது போன்றதொரு பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய பரிகாரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த பரிகாரமானது மிக மிக எளிமையான ஒன்று தான். ஆனால் இதை செய்யும் முறையும், செய்யும் நாளும் தான் மிகவும் முக்கியம். அதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

பணவரவு அதிகரிக்க பீரோ அடியில் வைக்க வேண்டியது

இந்த பரிகாரத்தை நாம் பீரோவுக்கு அடியில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய், வியாழன், வெள்ளி இந்த மூன்று நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் செய்யலாம். அன்றைய தினம் காலையில் எழுந்து குளித்து முடித்த பின்பு பிரம்ம முகூர்த்த வேளையில் இதை செய்ய வேண்டும்.

- Advertisement -

இதற்கு ஒரு கண்ணாடி பவுல் அல்லது மண்ணால் ஆன சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். இது இரண்டைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது. இந்த பவுல் நிறைய கல் உப்பை நிரப்பி விடுங்கள். அதன் மேல் ஒரே ஒரு சிறிய துண்டு படிகாரத்தை சொருகி வைத்து விடுங்கள். இப்போது இந்த கிண்ணத்தை பீரோவின் அடியில் யாருக்கும் தெரியாதவாறு வைத்து விடுங்கள். அவ்வளவு தான் பரிகாரம்.

இந்த பொருளானது பீரோவில் அடியில் இருக்கும் போது அங்கு பண ஈர்ப்பு அதிகரித்து பணத்தை தங்க வைத்துக் கொள்ளும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதே போல் இந்த பவுலை அடுத்த முறை மாற்றும் போது அமாவாசை அன்று மாற்றிவிட வேண்டும். நீங்கள் எந்த நாளில் செய்து வைத்தாலும் அதை தொடர்ந்து வரும் அமாவாசையில் இதை மாற்றி விடுங்கள்.

- Advertisement -

அமாவாசை அன்று இந்த கல் உப்பை எடுத்து தண்ணீரில் ஊற்றி நன்றாக கரைத்த பிறகு செடிகளில் ஊற்றி விடுங்கள். இல்லையெனில் சிங்கள் ஊற்றி விடுங்கள். அதன் பிறகு பவுலை கழுவி சுத்தம் செய்து காய வைத்த பிறகு மறுபடியும் இதே போல் கல் உப்பை நிரப்பி அதே படிகாரக் கல்லை வைத்து பீரோவின் அடியில் வைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: சம்பளப் பணம் வந்தவுடன் இப்படி செலவு செய்தால் பணம் கையில் தங்குவதோடு வருமானமும் அதிகரிக்கும்.

இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்வதோடு, பணவரவு அதிகரித்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுங்கள் நிச்சயம் பலன் பல மடங்காக கிடைக்கும்.

- Advertisement -