குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் மந்திரம்

hayagirivar childrens
- Advertisement -

ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகள் குறித்து யோசிக்கும் விஷயம் ஒன்றே ஒன்று தான். அவர்கள் நல்ல கல்வி அறிவையும் ஞானத்தையும் பெற்று சிறந்த நிலைக்கு வரவேண்டும். ஏனெனில் செல்வத்தை நாம் சேமித்து குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம். ஆனால் கல்வியையும் அறிவையும் நம்மால் அப்படி தர முடியாது.

இதை அவர்கள் பெற்று விட்டால் போதும் செல்வத்தை நாம் தராவிட்டாலும் அவர்கள் செல்வ செழிப்புடன் வாழக் கூடிய நிலையை எட்டி விடுவார்கள். அப்படியான கல்வியையும் ஞானத்தையும் அறிவையும் பிள்ளைகள் பெற வேண்டுமெனில் அவர்களுக்கு புதபகவானின் அனுக்கிரகமும் சரஸ்வதி தாயாரின் கடாட்சமும் நிச்சயமாக வேண்டும்.

- Advertisement -

இந்த இரண்டையுமே அருளக் கூடிய சக்தி வாய்ந்த ஒரு தெய்வம் உண்டெனில் அது ஹயக்ரீவர் தான் கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதியாக விளங்கக் கூடிய இவருடைய வழிபாட்டை நம் குழந்தைகள் தினமும் செய்தால் அவர்களின் அறிவுத் திறனையும் படிக்கும் திறனும் மிஞ்ச ஆளே இல்லை எனும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள். அது எப்படி என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்

குழந்தைகள் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்க பெருமாளின் அவதாரமான ஹயக்ரீவர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிபதியான தெய்வம் ஒன்று உண்டு. அந்த வகையில் புதன் கிரகத்தின் அதிபதியான தெய்வமே பெருமாள் தான். பெருமாளின் அவதாரமான ஹயக்ரீவரை வணங்கும் போது புதபகவானின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

- Advertisement -

இத்துடன் சரஸ்வதி தாயார் கல்விக்கு உகந்த தெய்வம். அத்தகைய சரஸ்வதி தாயாருக்கு ஞானத்தை போதித்தவர் இந்த ஹயக்ரீவர் என்று புராணங்கள் சொல்லுகிறது. அப்படி பார்க்கையில் சரஸ்வதி தாயாரின் அனுகூலத்தையும் இவரை வழிபடுவதன் மூலம் பெறலாம்.

ஹயக்ரீவரை வழிபடுவதற்கு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபம் கிழக்கு பார்த்து எரிய வேண்டும். நீங்கள் வடக்கு முகமாக அமர்ந்து மந்திரத்தை சொல்லுங்கள். நெய்வேத்தியம் படைக்க வேண்டும் என விரும்புபவர்கள் பாலில் சிறிதளவு கற்கண்டு சேர்த்து வைத்தால் போதும். இப்போது இந்த மந்திரம் என்னவென்று பார்க்கலாம்.

- Advertisement -

ஸ்ரீ ஹயக்ரீவர் துதி

ஞானானந்த மயம் தேவம்
நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மகே

இந்த மந்திரத்தை குழந்தைகள் தினமும் சொல்ல வேண்டும். இதை குறைந்தது 11 முறை சொல்ல வேண்டும். அதற்கு மேலும் சொல்லுவது உங்கள் விருப்பம். காலை மாலை இருவேளையும் குழந்தைகளை இந்த மந்திரத்தை பாராயணம் செய்ய சொல்லுங்கள். அவர்களுடைய புத்தி கூர்மை அதிகரிக்கும். படித்தவை அனைத்தும் ஞாபகத்தில் இருக்கும். படிப்பில் அவர்களுக்கு ஒரு போதும் சோர்வு தட்டாது.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நிறைவேற மந்திரம்

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தங்களுடைய மனநிலையை ஒழுங்குபடுத்த இந்த மந்திரத்தை சொல்லலாம். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹயக்ரீவர் குறித்த இந்த மந்திரம் முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலனை பெறலாம்.

- Advertisement -