பஞ்சத்தைப் போக்கும் ஏலக்காய் பரிகாரம்

mahalashmi1
- Advertisement -

சுக்கிரனுக்கு உரிய மகத்தான பொருட்களின் பட்டியலில் இந்த ஏலக்காய்க்கு முதலிடம் உண்டு. ஏலக்காயை நாம் எப்போதும் கையில் வைத்துக் கொண்டால் போதும் சுக்கிர பகவானின் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம்முடைய செல்வ செழிப்பு எப்போதுமே மேலே உயர்ந்து கொண்டே செல்லும். அந்த வகையில் இன்று ஏலக்காயை வைத்து பணத்தை அதிகப்படியாக ஈர்ப்பதற்காக செய்யக்கூடிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பணம் தரும் ஏலக்காய் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு 6 ஏலக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய ஏலக்காய்களாக வாங்கிக் கொள்ளவும். ரொம்பவும் காய்ந்த ஏலக்காயை பரிகாரத்திற்கு பயன்படுத்தாதீங்க. ஒரு வெள்ளிக்கிழமை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமிக்கு பூஜை செய்துவிட்டு, பசும்பால் பாயாசம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய உள்ளங்கைகளில் 6 ஏலக்காய்களை எடுத்துக் கொள்ளவும். மகாலட்சுமியை நினைச்சுக்கோங்க. ஒரு பென்சில் அல்லது பேனா அல்லது மார்க்கர் ஸ்கெட்ச் எது வேண்டும் என்றாலும் இதற்கு நீங்கள் பயன்படுத்தலாம். ஏலக்காய்க்கு மேலே இந்த நம்பரை எழுத வேண்டும். சின்னதாக ஏலக்காயுடைய வடிவத்திற்கு தகுந்தது போல ரொம்ப ரொம்ப குட்டியாக இதை நீங்கள் அந்த ஏலக்காயின் மேல் எழுத வேண்டும்.

ஆறு ஏலக்காயில், ஒவ்வொரு ஏலக்காயின் மேலும் இந்த மூன்று எண்களை எழுதி விடுங்கள். சுக்கிரனை வைத்து பண ஈர்ப்புக்காக கொடுக்கப்பட்டுள்ள ஏஞ்சல் நம்பர் இது ‘571’. ஏலக்காயில் இந்த எண்ணெய் எழுதிவிட்டு அந்த ஏலக்காயை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். எப்போதுமே என்னுடைய மணி பர்ஸில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு கையில் வருமானம் வர வேண்டும். என்னுடைய தேவைகள் பூர்த்தியாகும். நல்லது நடக்கும். பணம் வரும், பணம் வரும், பணம் வரும் என்று சொல்லிக் கொண்டே கையில் இருக்கும் ஏலக்காய்களை மணி பர்ஸில் வைத்து விடுங்கள். நெகட்டிவ் ஆக எந்த வார்த்தையும் சொல்லாதீங்க கடன் இருக்கு, பணக்கஷ்டம் இருக்கு அதை சரி செய்ய வருமானம் வரணும் அப்படின்னு சொல்லிட்டு, நெகட்டிவான வார்த்தைகளை மட்டும் நிச்சயம் பயன்படுத்த வேண்டாம்.

இப்படி, ஒரு வெள்ளிக்கிழமை அன்று இந்த ஏலக்காய்களை மணி பரிசில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான். அதன் பிறகு அந்த ஏலக்காய் ரொம்பவும் காய்ந்து போய் அதில் இருக்கும் வாசம் நீங்கி, பிறகு அதை எடுத்து கால் படாத இடத்திலோ செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு, மீண்டும் புதுசாக நீங்கள் ஏலக்காய்களில் இந்த நம்பரை எழுதி அதற்கு சக்தி கொடுத்து உங்களுடைய பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: நல்ல செய்தி வீடு தேடி வர வழிபாடு

ஒரு மாதத்திற்கு இந்த ஏலக்காய் உங்கள் பர்ஸில் இருக்கும் போது கொஞ்சம் கவனித்து பாருங்கள். இதற்கு முன்பு பர்ஸில் பணம் புழங்கியதற்கும் இந்த ஏலக்காயை வைத்ததற்கு பின்பு பர்ஸில் பணம் புழங்குவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று. நிச்சயம் அந்த மகாலட்சுமியும் சுக்கிரனும் உங்களுக்கு பொன் பொருள் சேர்க்கையை அதிகப்படுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -