தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறவும், அசுர வளர்ச்சி காணவும் இதை தினமும் பின்பற்றலாமே! அதிர்ஷ்டம் பெருக செய்யும் அற்புத பரிகாரம்.

key-cash
- Advertisement -

தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சியை காண மற்றும் எதிரிகளின் தொல்லை ஒழிய செய்ய வேண்டிய பரிகாரம் தான் இது! எந்த ஒரு விஷயத்தையும் பிள்ளையார் சுழி போடும் பொழுதே சரியான துவக்கமாக அமைந்துவிடும். துவக்கம் சரியாக அமைந்தால் எளிதாக வெற்றியும் கிடைக்கும். இந்த எளிய சூட்சமத்தை பின்பற்றி தான் தினசரி வியாபாரம் அல்லது தொழிலில் அதிக லாபம் தரக்கூடிய உத்தியை கையாள போகிறோம். அதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

key-saavi-kothu

தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதற்குரிய கடை சாவிகளை எப்பொழுதும் பூஜை அறையில் இருந்து எடுத்து செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் பூஜை அறையில் வைக்கும் பொழுது இப்படி வைத்து பாருங்கள்! அன்றைய நாள் முழுவதும் லாபம் பெருகுவதை உணரலாம்.

- Advertisement -

பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு கண்ணாடிக் கிண்ணம் அல்லது செம்பு கிண்ணம், வெள்ளிக் கிண்ணம் போன்ற ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உலோகங்கள் நமக்கு தெய்வீக சக்தியைக் கொடுக்கக் கூடியவையாக இருக்கின்றன. கண்ணாடி சுக்கிரனுடைய அருளை கிடைக்க செய்யும். செம்பு மற்றும் வெள்ளி பொருட்கள் நவ கிரகங்களின் அருள் பெற உதவும். அதில் பணத்தை ஈர்க்கக்கூடிய மற்றும் சுபிட்சத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய பச்சை கற்பூரத்தை எப்பொழுதும் கொஞ்சம் போட்டு வையுங்கள். அதனுடன் ஒரே ஒரு கிராம்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து கொள்ளுங்கள். உங்களிடம் துளசி செடி இருந்தால் தினமும் துளசி இலைகளை ஒன்றிரண்டு அதில் போடுங்கள். அதில் கடை சாவி, வண்டி சாவி போன்றவற்றை வைத்து கொள்வது மிகவும் நல்லது.

pachai-karpooram1

தினந்தோறும் அந்த கிண்ணத்திலிருந்து நீங்கள் சாவியை எடுத்துக் கொள்ளும் பொழுது அதிலிருந்து வரும் தெய்வீக ஆற்றல்கள் உங்கள் முன்னேற்றத்தை தடை செய்யக் கூடிய கெட்ட அதிர்வுகளை நீக்கும். மென்மேலும் முன்னேற்றம் பெருக செய்யும். அதே போல நீங்கள் முதன் முதலில் புது வண்டி வாங்கும் போது மற்றும் புதிய தொழில் துவங்கும் பொழுதும் இது மாதிரி செய்து விட்டு தூங்குவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க செய்யும். எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளைத் தாண்டிய இலாபத்தைப் பெருக்கித் தரும்.

- Advertisement -

உங்கள் குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்கள் அல்லது ராசியான பெண்களின் கைகளால் சாவியை பெற்று கொண்டு செல்வது இன்னும் அதிர்ஷ்டத்தை பெருக்கும். இது போல் தினமும் செய்வது தொழில் மற்றும் வியாபாரத்தில் அசுர வளர்ச்சியை அடைய செய்யும். இதே போல நீங்கள் கடைகளிலும் அல்லது தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும் இருக்கும் கடவுளின் படத்திற்கு பக்கத்தில் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

kirambu-elam-pachaikarporam

தினமும் கடையை பூட்ட கிளம்பும் பொழுது அந்த கிண்ணத்திலிருந்து சாவியை எடுத்து கடைக்கு திருஷ்டி சுத்தி போட்டு விட்டு பின்னர் பூட்டி விட்டு செல்வது உத்தமம். பணம் வைக்கும் பீரோ, மணிபர்ஸ், கல்லாப்பெட்டி போன்ற இடங்களிலும் இது போல் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு எல்லாம் சேர்த்து வைத்தால் இன்னும் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். பண ஈர்ப்பு சூட்சம விதிகளில் இந்த பொருட்களும் முக்கிய பங்காற்றுகிறது எனவே நீங்களும் இதனை முயற்சி செய்து பலன்களை அனுபவ பூர்வமாக உணரலாமே!

- Advertisement -