தொழில் செய்யும் இடத்தில் இந்த 1 வார்த்தையை எழுதி வைத்து, அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள். நஷ்டத்தில் போகும் தொழில் கூட நிறைய லாபம் தரும்.

swasthic
- Advertisement -

செய்யக்கூடிய தொழில் சிறு தொழிலாக இருந்தாலும், அதில் கை நிறைய லாபம் கிடைக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் நினைப்போம். நீங்கள் எந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அந்த தொழிலில் இருந்து நிறைய லாபத்தை ஈட்டி எடுக்க ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சின்ன கடை முதல், பெரிய தொழில் ஸ்தாபனம் வைத்திருப்பவர்கள் வரை இந்த பரிகாரத்தை செய்யலாம். தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்கள் ஆக இருந்தால் கூட, இந்த பரிகாரம் உங்களுக்கு நிறைய வருமானத்தை ஈட்டித் தரும்.

தொழிலில் பல மடங்கு லாபம் பெற செய்ய வேண்டிய பரிகாரம்:
ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையாக இதை செய்ய வேண்டும். தொழில் செய்யும் இடத்தில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள் நீங்கள் செய்யும் தொழில் ஓஹோ என முன்னேற்றம் அடைய வேண்டும் என்று. பூஜையறைக்கு கீழ்ப்பக்கத்தில் உள்ள சுவற்றில் இந்த வார்த்தையை எழுத வேண்டும். (அப்படி எழுத உங்களுக்கு வசதி இல்லை என்றால், ஒரு வெள்ளை துணியில் இதை எழுதி அப்படியே சுவற்றில் ஒட்டி வைக்கலாம்.)

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சள் பொடி போட்டு, பன்னீர் ஊற்றி, கலந்து கொள்ளுங்கள். இதைத் தொட்டு தொழில் செய்யும் இடத்தில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து அதற்கு பக்கத்தில் லாபம் என்று எழுதி வையுங்கள். இதை எழுதிய அப்படியே விட்டுவிட்டால் போதாது. இந்த வார்த்தையை நீங்கள் அடிக்கடி உங்களுடைய கண்களால் பார்க்க வேண்டும். பார்க்கும்போது மனதில் இந்த வார்த்தையை உச்சரிப்பீர்கள் அல்லவா. லாபம் என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும்போது சொந்தத் தொழிலிலும் அதிக லாபம் கிடைக்கும் என்பதுதான் இந்த பரிகாரத்தில் இருக்கக்கூடிய நம்பிக்கை.

தினமும் காலை கடையை திறந்து கூட்டிவிட்டு விளக்கு ஏற்றிவிட்டு ஒரு ஊதுவத்தியை இந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கும் காட்டி வழிபட வேண்டும். இதை மட்டும் செய்துவிட்டு முயற்சிகள் எடுக்காமல் சும்மாவே அமர்ந்து இருந்தால் காசு பணம் வருமா. நிச்சயம் வராது. தொழிலை முன்னேற்ற தேவையான வேலைகளை நீங்கள் தான் செய்ய வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய முயற்சிகளில் வரக்கூடிய தடைகளை தகர்க்கக் கூடிய வேலையை இந்த பரிகாரம் பார்த்துக் கொள்ளும்.

- Advertisement -

இதே போல உங்கள் வீட்டு பீரோவிலும் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து லாபம் என்று எழுதி வையுங்கள். வீட்டிலும் பணக்கஷ்டம் தீரும். பீரோவில் நிறைய பணம் சேரும். ஒரு வெள்ளை காகிதத்தில், சிவப்பு நிற பேனாவில் லாபம் என்று எழுதி அதிலும் சின்ன சுவஸ்திக் சின்னத்தை வரைந்து உங்கள் மணி பர்ஸில் வைத்துக் கொண்டால், பண பற்றாக்குறை இருக்காது.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

மாதக் கடைசியில் கூட செலவுக்கான பணம் உங்களுடைய பர்ஸை வந்து அடையும். எளிமையான செலவில்லாத இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். உங்களுடைய வருமானமும் பெருகி நீங்களும் பணக்காரர் ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -