புத்திர பாக்கியம் அருளும் அர்ச்சனையும் தானமும்

kuzhanthai bakkiyam
- Advertisement -

வம்சாவளி என்று சொல்வதற்கு ஒவ்வொருவர் இல்லத்திலும் அவர்களுக்கு குழந்தை என்பது இருக்க வேண்டும். வம்சா வழியாக வருகிறது என்றால் அந்த வம்சம் வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் அர்த்தம். அப்படிப்பட்ட வம்சத்தை விருத்தி செய்ய எந்த மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து எந்த தானத்தை வழங்க வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குழந்தை பாக்கியம் தள்ளி போவதற்கும் அல்லது குழந்தை தங்கி கரு களைவதற்கும் காரணமாக திகழக் கூடியது கிரகங்களே. அந்த கிரகங்களின் அடிப்படையில் நாம் அர்ச்சனையும், தானமும் செய்து வந்தால் அந்த கிரகங்களால் ஏற்பட்ட தடைகள் விலகி புத்திர பாக்கியம் என்பது கிடைக்கும்.

- Advertisement -

புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு சூரிய பகவானின் அருளும் குரு பகவானின் அருளும் தேவை. சூரிய பகவானின் அருள் கிடைப்பதற்கு அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் அரளி பூவால் அர்ச்சனை செய்து, ஆரஞ்சு பழத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.

அங்கு வரும் பக்தர்களுக்கு அந்த பழத்தை தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்து வர சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் அவரால் தடைப்பட்டு இருந்த புத்திர பாக்கியம் விரைவில் நடைபெறும்.

- Advertisement -

குரு பகவானின் அருளை பெறுவதற்கு வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு செவ்வந்திப் பூவால் அர்ச்சனை செய்து ஆப்பிள் பழத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். பிறகு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆப்பிள் பழங்களை தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்வதன் மூலம் குரு பகவானின் அருள் கிடைத்து அதனால் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

குழந்தை தங்கி இரண்டு மூன்று மாதங்களிலேயே அது கலைந்து விடுகிறது என்றால் அதற்கு சனிபகவானே காரணமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட சனிபகவானுக்கு சனிக்கிழமை தோறும் நீல நிற சங்குப் பூவால் அர்ச்சனை செய்து சப்போட்டா பழத்தை வைத்து வழிபட்டு, அங்கு வரும் பக்தர்களுக்கு சப்போட்டா பழத்தை தானமாக வழங்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வதன் மூலம் உருவான கரு நிலையாக நிலைத்து நின்று குழந்தையாக வீட்டில் தவழும்.

- Advertisement -

குழந்தை தாமதமாகும் நபர்களின் ஜாதகத்தில் எந்த கிரகத்தின் குறைபாடுகள் அல்லது பிரச்சனைகள் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றார் போல் மேற் சொன்ன வழிபாட்டு முறைகளை செய்தால் கண்டிப்பான முறையில் குழந்தை பாக்கியம் கிடைக்க கடவுள் அருள் புரிவார்.

இதையும் படிக்கலாமே: முன்னேற்றம் தரும் நட்சத்திர வழிபாடு

தங்களுக்கு இருக்கக்கூடிய குறைகளை நீக்குவதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் மேற் சொன்ன வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது நிச்சயமாக கிடைக்கும்.

- Advertisement -