பண பிரச்சினை தீர்ந்து லட்சுமி கடாட்சம் ஏற்பட உதவும் தீபம்.

lakshmi deepam
- Advertisement -

பணரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தான் இன்றைய காலத்தில் பலரும் அனுபவிக்க கூடிய பிரச்சினையாக திகழ்கிறது. அந்த பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதற்கு நமக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் தேவைப்படும். மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் முதலில் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலக வேண்டும். இப்படி எதிர்மறை ஆற்றல்கள் விலகி மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு ஏற்ற வேண்டிய விளக்கை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் பொருட்களை தங்கள் வீட்டில் அதிகமாக வாங்கி வைக்க வேண்டும் என்பது பலரும் அறிந்த உண்மையே. அப்படி மகாலட்சுமி தாயார் விரும்பி வாசம் செய்த பொருட்களை ஒன்றாக சேர்த்து நாம் தீபம் ஏற்றி வழிபட்டால் அதன் சிறப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த ஒரு பொருளாக தான் விளங்குகிறது பஞ்சகவ்ய விளக்கு.

- Advertisement -

முப்பத்து முக்கோடி தேவர்களும் குடியிருக்க கூடிய தெய்வமாக திகழக் கூடியவர் தான் கோமாதா. அப்படிப்பட்ட கோமாதாவில் இருந்து பெறக்கூடிய ஐந்து விதமான பொருட்களை வைத்து தயாரிக்க கூடிய விளக்கு தான் பஞ்சகவ்ய விளக்கு. பொதுவாக கோமாதாவை மகாலட்சுமிக்கு சமமாக கருதுவது உண்டு. அதேபோல் கோமாதாவிலிருந்து பெறக் கூடிய பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவை அனைத்துமே மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாகவே திகழ்கிறது.

இவை அனைத்தும் பஞ்சபூதங்களின் தத்துவங்களின் அடிப்படையில் இருக்கிறது. இப்படி பஞ்சபூதங்களையும் சேர்த்து நாம் ஒரு விளக்காக செய்து வீட்டில் ஏற்றி வழிபட்டால் நம் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும். தரித்திரியம் என்று சொல்லக்கூடிய அனைத்து விஷயங்களும் நம்மை விட்டு நீங்கி லஷ்மி கடாட்சம் ஏற்படும். ஒரு வீட்டில் அடிக்கடி தொடர்ந்து கெட்ட நிகழ்வுகளை நடக்கிறது என்னும் பட்சத்தில் வீட்டில் ஒரு ஹோமம் செய்யுங்கள். அனைத்தும் சரியாகிவிடும் என்று சொல்வார்கள். அப்படி ஹோமம் செய்வதற்கு சமமான பலனை தரக்கூடியது தான் இந்த பஞ்சகவ்ய விளக்கு ஏற்றுவது.

- Advertisement -

இந்த விளக்கை மாதத்திற்கு ஒரு முறையாவது பௌர்ணமி தினங்களில் வீட்டில் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இந்த விளக்கை நாம் மாயிலை, வெற்றிலை, அரச இலை போன்ற இலைகளில் வைத்து அதற்கு மேல் இந்த விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். பூஜை அறையில் வைத்து ஏற்ற வேண்டும். இந்த விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அவ்வாறு தீபம் ஏற்றிய பிறகு அந்த தீபம் முழுமையாக எரிந்து முடிந்து விட்டு அந்த விளக்கும் சேர்ந்து எரிந்து சாம்பல் ஆகும். இப்படி விளக்கு சேர்ந்து எரியும்போது ஏற்படக்கூடிய அந்த புகையானது வீட்டு முழுவதும் பரவ வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் வெளியேறும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் அடி எடுத்து வைப்பார்கள். இந்த சாம்பலை நாம் தினமும் இறைவனின் அருட்பிரசாதமாக நினைத்து நெற்றியில் வைத்து வர பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி பணவரவு என்பது ஏற்படும்.

இதையும் படிக்கலாமே நிம்மதி தரும் நிலை வாசல் பரிகாரம்

இன்றைய காலகட்டத்தில் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் இந்த பஞ்சகவ்ய விளக்கு என்பது மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இந்த விளக்கை நாம் வாங்கி வைத்து நம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டு நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

- Advertisement -