நிம்மதி தரும் நிலை வாசல் பரிகாரம்

vasal1
- Advertisement -

குடும்பம், வீடு என்று இருந்தால் அந்த இடத்தில் மன நிம்மதி இருக்க வேண்டும். வேலையில் இருந்து எப்போது தான் வீட்டுக்கு திரும்புவோமோ என்ற எண்ணம் வர வேண்டும். அதை விடுத்து வீட்டில் இருந்து எப்படா தப்பித்து ஓட போறோம் என்று யாரும் நினைக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு இந்த எண்ணம் வரவே கூடாது.

இந்த மன நிம்மதியை தருவது பணம் மட்டுமே என்று நம்மில் பல பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அது சரிதான். பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு முதல் காரணமாக இருப்பது பணம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இருப்பினும் பணத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு அதற்காக சண்டை போட்டு நிம்மதியை இழக்கக்கூடாது.

- Advertisement -

பணத்திற்காக ஒரு மணி நேரம் சண்டை வந்தாலும், அதை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு அடுத்து சந்தோஷமாக வாழ்வதற்கு என்ன வழி என்பதை நாம் தேடிக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் இருவருமே இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சதாகாலமும் சண்டை போட்டிருக்கும் கொண்டிருக்கும் குடும்பத்திற்குள் பணம் நிச்சயம் வராது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.

நிம்மதி தரும் பரிகாரம்

உங்கள் வீட்டில் சண்டை சச்சரவு வருகிறதா. காரணம் இருக்கு, காரணம் இல்லை. அதையெல்லாம் எடுத்து தூர வைத்து விடுங்கள். இன்றிலிருந்து வீட்டில் சண்டை சச்சரவு வரக்கூடாது என்று ஆண், பெண் இருவருமே உங்களுடைய மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரவு தூங்க செல்வதற்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்யலாம், அல்லது இரவு ஏழு மணி அல்லது எட்டு மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செஞ்சுக்கோங்க. இரண்டே இரண்டு கிராம்பு, அதை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிராம்புக்கு நாம் சொல்வதை எல்லாம் கேட்கக்கூடிய சக்தி அப்படியே இருக்கிறது. வசியத்தன்மை என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த வசியம் இதற்கு மிக மிக அதிகம்.

உள்ளங்கைகளில் இந்த கிராம்பை வைத்துக் கொண்டு பூஜை அறையில் முன்பாக அமர்ந்து குல தெய்வத்தை பிரார்த்தனை செய்யணும். வீட்டில் சண்டை வரக்கூடாது. வீட்டில் சண்டை வரக்கூடாது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்க. வீட்டில் நிம்மதி தேவை என்றும் சொல்லலாம். வேண்டுதல் வைப்பது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

இந்த வேண்டுதலை முடித்துவிட்டு நிலை வாசலுக்கு செல்லுங்கள். நிலைவாசல் படிக்கும் வெளிப்பக்கத்தில், ஒரு வெற்றிலையில் கொஞ்சமாக மஞ்சள் பொடி வைத்து, அதன் மேலே ஒரு கட்டி கற்பூரம் வைத்து, அதில் இந்த கிராம்பை வைத்து கொளுத்தி விடுங்கள். இந்த கற்பூரம் எரியும் வரை நீங்கள் நிலை வாசல் படியில் இருக்கலாம். தவறு கிடையாது. முடியாதவர்கள் வீட்டிற்குள் வந்து விடுங்கள். கற்பூரம் எரிந்து முடிந்தவுடன் இந்த பொருட்களை எல்லாம் எடுத்து அப்படியே வீட்டிற்கு வெளியே கால் படாத இடத்தில் போட்டு விட்டு வந்து விடுங்கள்.

எல்லோரும் விழித்திருக்கும் போது இந்த பரிகாரத்தை செய்தால் என்ன என்று கேட்பார்கள். ஆகவே வீட்டை சுற்றி இருப்பவர்கள், அக்கம் பக்கம் வீட்டினர் எல்லாம் தூங்கிய பிறகு கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு 12 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை முடித்துவிட்டு கை கால் அலம்பி விட்டு வழக்கம் போல தூங்க செல்லலாம். இதே போல தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து பாருங்களேன். உங்கள் வீட்டில் சண்டை சச்சரவு வராது. இதை யார் கையால் செய்யணும்.

குடும்பத் தலைவன், குடும்பத்தலைவி, அல்லது உங்க வீட்டில் பெரிய பிள்ளைகள் யாராவது இருந்தால் அவர்களை கூட செய்ய சொல்லலாம் தவறு கிடையாது. இந்த கிராம்பின் வாசம், புகை, நீங்கள் வேண்டிய நேர்மறை ஆற்றல், எல்லாம் உங்கள் நிலை வாசலின் முன்பு ஒரு படலம் போல பரவும். கண்ணுக்கு தெரியாது வாஸ்தவம் தான்.

இதையும் படிக்கலாமே: பஞ்சம் நீக்கும் பஞ்சமி திதி வழிபாடு

ஆனால் அந்த பாசிடிவ் எனர்ஜி உங்கள் குடும்பத்தை சண்டையிலிருந்து காப்பாற்றி விடும். எளிமையான பரிகாரம் தான் நீங்கள் வேண்டுமென்றால் ஒரு மூன்று நாட்களுக்கு முயற்சி செய்து பாருங்கள். போர்க்களமாக இருந்த உங்கள் வீடு, அப்படியே அமைதியாக மாறிவிடும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -