லக்ஷ்மி கடாட்சம் ஒரு பெண்ணிடமிருந்து போவதற்கு இதுகூட ஒரு காரணம் தான்! இதை செய்யாமல் அன்னத்தை தொடாதீர்கள்.

lakshmi-rice
- Advertisement -

எல்லா பெண்ணுமே லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். எந்த பெண்ணிடம் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து காணப்படுகிறதோ! அந்தப் பெண் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருக்கிறாள். எனவே ஒரு பெண் மகிழ்ச்சியாக இருக்க அவளிடம் இலட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. எந்தப் பெண்ணிடமிருந்தும் லக்ஷ்மி கடாக்ஷம் நீங்க நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறும் காரணமாக அமைந்து விடுகிறது. அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

women1

பெண்கள் என்றாலே மகாலட்சுமியை போல அம்சமாக இருக்க தான் விரும்புகிறார்கள். அது மாடர்ன் மகாலட்சுமியாக இருந்தாலும் சரி. ஒரு பெண் எப்போதும் இன்முகத்துடன் இருந்தால் அவளிடம் இருக்கும் குறையும் தெரியாமல் போய்விடும். எனவே எப்போதும் சிடுசிடுப்புடன் இல்லாமல், கடுகடுவென முகத்தை வைத்திராமல், மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள், லட்சுமி கடாட்சம் தானாகவே உங்களிடம் வந்து குடி கொள்ளும்.

- Advertisement -

நம் முன்னோர்கள் கூறி விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும் நிறையவே அர்த்தங்கள் ஒளிந்து கொண்டிருக்கும். எந்த ஒரு வீட்டிலும் பெண்கள் அடுப்படியில் குளிக்காமல் சமைக்கக் கூடாது என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் இன்று பலரும் இதனை பின்பற்றுவது கிடையாது. குளிக்காமல் சமைப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குளித்துவிட்டு சமைத்தால் உடம்பில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். இதனால் நாள் முழுக்க உற்சாகத்துடன் நீங்கள் காணப்படுவீர்கள். மலர்ந்த முகத்துடன் இருக்கும் பெண்களிடத்தில் லக்ஷ்மி இயல்பாகவே தங்கி விடுவாள்.

cook1

அதுவே நீங்கள் குளிக்காமல் கொள்ளாமல் சமையல்கட்டில் போய் நின்றால் சோம்பேறித்தனம் தான் மேலோங்கும். அதே சோம்பேறித்தனம் நீங்கள் மதிய வேளையில் சமைக்கும் வரை அப்படியே இருக்கும். இவ்வளவு நேரம் ஆயிற்று மதிய உணவையும் சமைத்து விட்டு பிறகு குளிக்கலாம் என்று தான் தோன்றும். இதனால் உங்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் பல விஷயங்களை உங்களை இழக்க செய்யும். நீங்கள் காலையிலேயே குளித்து விட்டால் இது எதுவும் நடக்காது என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

- Advertisement -

சோம்பேறித்தனம் மேலிட மேலிட, குளிக்கும் நேரமும் தாமதம் ஆகிக் கொண்டே இருக்கும். குளிக்காமல் சாதத்தை தொட்டு நீங்கள் வைத்தால் அந்த இடத்தில் லட்சுமி கடாட்சம் உங்களை விட்டு நீங்கி விடுகிறது. இதனால் குடும்பத்தில் குழப்பங்களும், வருமான குறைவும் ஏற்படும். கடன் பிரச்சனைகள் மேலோங்கும். பெரும்பாலான பெண்கள் இடத்தில் லட்சுமி கடாட்சம் நீங்க இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று எச்சரிக்கிறது சாஸ்திரம்.

eating-food

குளித்து முடித்து விட்டு சமைக்க முடியாவிட்டாலும் நீங்கள் அன்னத்தைத் தொட்டு பரிமாறும் பொழுது கட்டாயம் குளித்து சுத்தமாக இருப்பது அவசியமாகும். எனவே குளித்து முடித்து விட்டு அன்னத்தை பரிமாறுங்கள்! நிறைய நல்ல பலன்களை பெறலாம். குளித்து முடித்து விட்டு வீட்டில் இருக்கும் பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றி விட்டு பின்னர் சமைக்க ஆரம்பித்தால் நீங்களும் உங்களுடைய குடும்பத்தினரும் வறுமை நீங்கி, செல்வ செழிப்புடன் வாழ்வாங்கு வாழலாம். எனவே சோம்பேறித்தனம் பார்க்காமல் குளித்து முடித்து விட்டு பின்னர் சமைக்க செல்லுங்கள் அல்லது குளித்து முடித்து விட்டு பிறகு பரிமாற ஆவது செய்யுங்கள்.

- Advertisement -