தீராத நோயினால் தினம் தினம் துன்பப்படுபவர்கள் இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லிப் பாருங்கள். மரண வாயில் வரை சென்றவரை கூட நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த திரு மந்திரம்.

sivalingam manthiram
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற இந்த வாக்கு ஒரு காலத்திலும் பொய்யாய் போனதே இல்லை ஒரு குடும்பத்தில் என்ன தான் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தாலும், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி இருந்தால் மட்டுமே அந்த செல்வ செழிப்பான வாழ்க்கையின் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். அப்படி ஒரு நோய் நொடியற்ற வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்றால் இந்த ஒரு மந்திரத்தை தினமும் ஜெபித்து வந்தால் போதும் என்று  சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி அதை சொல்ல வேண்டும் என்ற தகவல்களை எல்லாம் ஆன்மீகம் சார்ந்த இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடி ஓடி உடலை பற்றி கொஞ்சம் கூட கவனிக்காமல் இருந்து விடுகிறோம் இதன் பலனாக தேடிய பொருளை கண்ட பின்பு அதை அனுபவிப்பதற்கான யோகம் இருப்பதில்லை. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் எந்த ஒரு சூழ்நிலையில் வாழ்ந்தாலும் உங்களின் உடல் நலத்தை பற்றி சிறிதேனும் அக்கறையோடு இருங்கள்.

- Advertisement -

தீராத நோய் தீர மந்திரம்
நாம் வாழும் இந்த வாழ்க்கையில் யாருக்கும் தொல்லை தராமல் யாருடைய கண்ணீருக்கும் ஆளாகாமல் நல்லதொரு வாழ்க்கையை வாழும் போது மனம் அமைதி அடைந்து எந்த விதமான சிந்தனைகளோ, மன அழுத்தமோ வராமல் இருக்கும். இதுவே பாதி நோய்கள் நம்மை நெருங்க விடாமல் காக்கும் முதல் மருந்து. இப்போது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதும் அல்லது தீராத நோயினால் தினம் தினம் துன்பப்படுபவர்களும் இந்த ஒரு மந்திரத்தை ஜெபித்து வந்தால் அந்த நோயிலிருந்து விரைவில் மீண்டு வரலாம். அது என்ன மந்திரம் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஓம் க்ரீம் அச்சுதா அனந்தா கோவிந்தா
இந்த ராம மந்திரத்தை தான் நாம் தினந்தோறும் உச்சரிக்க வேண்டும். எந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கும் போதும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு சென்று வழிபட்டு அங்கிருந்து ஆரம்பிப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

அது போலவே இந்த மந்திரத்தையும் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வணங்கிய பிறகு இந்த வியாதியிலிருந்து என்னை சீக்கிரம் குணப்படுத்துங்கள், அதற்காக இன்றையிலிருந்து இந்த மந்திரத்தை நான் ஜெபிக்க போகிறேன் என்று கூறு அங்கேயே இந்த மந்திரத்தை கூறி தொடங்கி விடுங்கள். அதன் பிறகு நீங்கள் தினமும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

இந்த மந்திரத்தை நோய்வாய்ப்பட்ட வரும் ஜெபிக்கலாம் அல்லது அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் அவர்களுக்காக வேண்டிக் கொண்டு ஜெபிக்கலாம். இதை சொல்ல ஆரம்பித்த உடனே எந்த நிலையில் நோய் இருந்தாலும் அது முற்றாமல் அந்த நிலையிலே சரியாகி சீக்கிரம் குணம் அடைவார்கள்.

இதையும் படிக்கலாமே: துன்பம் காணாமல் போக செய்ய வேண்டியவை

நோய் குணமாக மந்திரம் மட்டும் சொன்னால் போதுமா? என்ற கேள்வி எழலாம். எத்தனை பேருக்கு வைத்தியம் பார்த்து வியாதி சரியாகி இருக்கிறது. சிலருக்கு எவ்வளவு தான் செலவு செய்து வைத்தியம் பார்த்தாலும் வியாதி குறையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஆனவர்கள் மருத்துவ சிகிச்சையோடு இந்த மந்திரத்தையும் தொடர்ந்து ஜெபித்து வரும் போது நோயிலிருந்து மீண்டு வரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் இந்த ராம நாமத்தை ஜெபித்து உங்களின் தீராத நோய்களில் இருந்து மீண்டும் வர இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

- Advertisement -