பண வரவை அதிகரிக்க லட்சுமி நாராயணர் வழிபாடு

lakshmi narayanar valipadu
- Advertisement -

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயாரை நாம் வழிபடும் பொழுது நம்முடைய பணரீதியான பிரச்சினைகள் தீர்வதற்குரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. என்னதான் நாம் மகாலட்சுமிக்காக வழிபாட்டு முறைகள் மற்றும் பரிகாரங்களை செய்தாலும் மகாலட்சுமி தாயாரை பொருத்தவரை அவர்களின் கணவனான நாராயணரை வழிபட்டால் தான் முழுமையான அருளை தருவார்கள். அதனால் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் லட்சுமி நாராயணரை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் லட்சுமி நாராயணரை எந்த முறையில் வழிபட பண வரவு அதிகரிக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

ராமர் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோதி என்று ராமாயணத்தில் ஒரு வரி இருக்கும். எப்படி சிவபெருமான் தன்னுடைய உடலில் சரிபாதியை பார்வதி தேவிக்கு தந்தார்களோ அதே போல் நாராயணர் மகாலட்சுமிக்கு தன்னுடைய இதயத்தில் இடம் கொடுத்தார் என்பதும் நாம் அறிந்ததே. இப்படி மகாலட்சுமியையும் நாராயணரையும் வைத்து பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் மகாலட்சுமியின் அருளை நாம் பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் நாராயணனின் அருள் கண்டிப்பான முறையில் வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

நாராயணரை தனியாகவும் மகாலட்சுமியை தனியாகவும் வழிபடாமல் லக்ஷ்மி நாராயணரை ஒன்றாக சேர்த்து வழிபடும் பொழுது அதன் பலன்கள் நமக்கு மிகவும் அதிகமாக கிடைக்கும். இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய புதன்கிழமை அன்று தொடங்குவது மிகவும் சிறப்பு. வீட்டில் லட்சுமி நாராயணரின் படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பெருமாள் மகாலட்சுமி இணைந்திருக்கும் படத்தை வைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

பிறகு ஒரு தாம்பாளத்தை எடுத்து அந்த தாம்பாளம் நிறைய நாணயங்களை போட்டு பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தாம்பாளத்தை பெருமாளின் பாதத்திற்கு கீழே வைத்து விட வேண்டும். லஷ்மி நாராயணரின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நாணயங்கள் நிரப்பப்பட்ட தாம்பாளத்தின் அருகில் ஒரு சிறிய கிளாஸ் அல்லது பஞ்ச பாத்திரத்தை வைத்து அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி ஒரே ஒரு துளசி இலையாவது போட்டு சிறிது பச்சை கற்பூரத்தையும் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவர்களுக்கு நெய்வேத்தியமாக டைமண்ட் கற்கண்டை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளலாம். பிறகு எப்பொழுதும் போல் பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு நாராயணனின் அஷ்டோத்திரம், மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரம் என்று இவர்கள் இருவரின் அஷ்டோத்திரத்தையும் கூறி குங்குமத்தால் லக்ஷ்மி நாராயணரின் பாதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு நாம் அர்ச்சனை செய்யும் பொழுது அந்த குங்குமமானது நாராயணரின் பாதத்தில் பட்டு கீழே இருக்கும் நாணயங்கள் நிறைந்த தாம்பாளத்தில் விழும்.

அஷ்டோத்திரம் தெரியாதவர்கள் “ஓம் லட்சுமி நாராயணரே போற்றி” என்னும் மந்திரத்தையும் கூறி அர்ச்சனை செய்யலாம். ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது தங்களால் இயலும் பட்சத்தில் தினமும் இந்த வழிபாட்டை செய்யலாம். எந்த அளவுக்கு முழு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை நாம் செய்கிறோமோ அந்த அளவுக்கு நாராயணர் மற்றும் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதனால் நம்முடைய தேவைக்கேற்ற பண வரவு நம்மை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாக வழிபாடு

துளிகூட சந்தேகம் இல்லாமல் முழு மனதோடு லஷ்மி நாராயணரை இந்த முறையில் அர்ச்சனை செய்து வழிபட நம் வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் பணத்தட்டுப்பாடு என்பது ஏற்படாது.

- Advertisement -