ராமாயண காவியத்தில் புகழப்படுகின்ற ராவணனால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ‘லால் கிதாப்’ என்று அறியப்பட்டுள்ளது. இந்நூலை சிகப்பு புத்தகம் என்றும் கூறப்படுகிறது. ஒருவருடைய ராசியின் அடிப்படையில் அவர்களுடைய வாழ்க்கையில் எப்படி இருந்தால், மேன்மை அடைவார்கள்? என்று இந்நூல் குறிப்பிட்டு கூறுகிறது. இதில் ஏராளமான பரிகாரங்கள் நிறைந்துள்ளன.
தங்களின் ராசி படி பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் 45 நாட்களுக்குள் அவர்களுடைய வாழ்க்கை மாறுவதாக வடமாநில மக்களால் நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில் விருச்சிக ராசிக்கான நல்வாழ்வு பரிகாரங்களை தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்:-
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வீட்டில் எப்போதும் மண் பாத்திரத்தில் சுத்தமான தேன் அல்லது குங்குமம் வைத்திருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்கிறது லால் கிதாப்.
விருச்சிக ராசிக்காரர்களாகிய நீங்கள், தினமும் காலையில் எழுந்து பல் துலக்கியதும் சிறிதளவு தேன் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பெறுவீர்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் அரச மரத்தை வெட்டக்கூடாது. அதேபோல் முட்செடிகளையும் அகற்றுவது கூடாது. இது உங்களுக்கு தோஷத்தை ஏற்படுத்தும்.
விருச்சிக ராசிக்காரர்கள் மற்ற கிழமைகளை விட செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருப்பது நல்ல பலன் தருமாம்.
விருச்சக ராசிக்காரர்கள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைய சிவப்பு நிற கைகுட்டையை பயன்படுத்துவதும், சிவப்பு நிறத்தில் டை அணிவதும் வெற்றியை நோக்கி செல்ல துணை புரியுமாம்.
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் அடுப்பில் பால் காய்ச்சி கொண்டிருக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சிய பாலை பொங்கி வடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது இந்த சிகப்பு புத்தகம்.
உங்களுக்கு தெரிந்த சன்னியாசிகள், முனிவர்கள் போன்ற மகான்களுக்கு இனிப்பு ரொட்டி தயார் செய்து கொண்டு போய்க் கொடுத்து வரலாம். இதனால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறுமாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் எந்த பொருட்களையும் எவரிடமும் காசு கொடுக்காமல் இலவசமாக பெற்றுக் கொள்ளக் கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பணத்திற்கு பதிலாக ஏதாவது ஒரு பொருளை அவர்களிடம் கொடுத்து விடவும்.
விருச்சிக ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டத்தை துரத்தியடிக்க செய்ய வேண்டிய பரிகாரமாக லால் கிதாப் என்ன கூறுகிறது தெரியுமா? தேன், குங்குமம், சிவப்பு ரோஜா இவைகளை செவ்வாய்க்கிழமை அன்று கடலிலோ அல்லது ஓடும் நீர் நிலைகளில் விட்டுவிட்டால் உங்களுக்கு இருக்கும் துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் அதிர்ஷ்டமாக மாறுமாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்வில் வளம் பெற, செவ்வாய்கிழமைகளில் உங்களுக்கு பிடித்தமான இஷ்ட தெய்வத்திற்கு சிகப்பு நிற பூந்தி தயார் செய்து படைத்து வழிபட்டு வருவதனால் யோகம் பெறலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் உடன்பிறந்தவர்களின் மனைவிகளுடன் மனஸ்தாபம் கொள்ளாமல் இருப்பதே நல்லதாம். சண்டை, சச்சரவுகள் இல்லாமல் சகோதரர்களுடன் இணக்கமாக இருப்பது நல்லது என்று இந்நூல் கூறுகிறது. அதிலும் குறிப்பாக உங்களின் மூத்த சகோதரரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வது நல்லதாம்.
விருச்சிக ராசிக்காரர்களின் கடன்கள், நோய்கள், வறுமை நீங்குவதற்காக கூறப்பட்டுள்ள பரிகாரம் என்னவென்றால், செவ்வாய்க்கிழமை தோறும் ஹனுமனுக்கு வஸ்திரம் சாற்றி, செந்தூரம் படைப்பது நல்ல வாழ்விற்கான வழியாக லால் கிதாப் கூறுகிறது.
இந்த பரிகாரங்கள் அனைத்தும் வட மாநில மக்கள் பின்பற்றி அனுபவத்தில் சிறப்பான பலன்களை கண்டுள்ளதாக கூறியுள்ளனர். இவற்றை பின்பற்றுவதால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை. நம்பிக்கையுடன் செய்து பார்க்கலாமே!! நன்மைகள் நடந்தால் நல்லது தான்.
இதையும் படிக்கலாமே
பகலில் பிறந்தவர்களை விட இரவில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகளா? எந்த நேரத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிஞ்சிக்கணுமா?
இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Lal kitab pariharam viruchigam in Tamil. Lal kitab remedies in Tamil Lal kitab Tamil. Lal kitab astrology in Tamil. Lal kitab tips.