எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற, வாழ்க்கை லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட, இந்த விநாயகரை வழிபாடு செய்தாலே போதும்.

thiyanam-vinayagar
- Advertisement -

அவரவர் வாழ்க்கையில் அவர் அவருக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த குழிக்குள் தான் அவர்களுடைய வாழ்க்கை லட்சியமாகவும் இருக்கும். அந்த லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்றால் விடா முயற்சியும் கடின உழைப்பும் அவசியம் இருக்க வேண்டும். உங்களுடைய விடாமுயற்சியில் தோல்விகள் தடைகள் இருந்தால் அந்த தடைகளை தகர்த்தெறிய விநாயகர் வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும். நீங்கள் நினைத்தது அத்தனையும் நிறைவேற்ற எந்த நாளில் எந்த விநாயகரை, எந்த மந்திரத்தைச் சொல்லி எப்படி வழிபடவேண்டும். தெரிந்து கொள்வோமா.

pillaiyar

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நீங்கள் கொஞ்சநாள் காத்திருக்கத்தான் வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று பூசம் நட்சத்திரம் வரவேண்டும். ஞாயிற்றுக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய அந்த நாள் விநாயகருக்கு மிகவும் உகந்த நாள். இந்த பூஜையை அந்த சிறப்பான நாளில் தொடங்கினால் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் வெற்றியடையும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமையும் பூசம் நட்சத்திரமும், என்று சேர்ந்து வருகின்றதோ அன்றைய நாளை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அன்று காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடவேண்டும். பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகர் படத்தை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருந்தால் அந்த விநாயகருக்கு முன்பு இந்த மந்திரத்தை சொல்வது மிகவும் நல்லது. வெள்ளெருக்கன் வினாயகர் சிலை வீட்டில் இல்லாதவர்கள் சாதாரணமாக விநாயகரின் படத்திற்கு முன்பும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

pillaiyar-manai

விநாயகரின் படத்திற்கு முன்பு ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விட்டு, நீங்களும் பூஜை அறையிலேயே ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு தினமும் 108 முறை என்ற கணக்கில் பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான இரண்டு வரி மந்திரம் இதோ.

- Advertisement -

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் மானச
சித்தீகரி ஹ்ரீம் நமஹ

manjal-pillaiyar

உங்களால் முடிந்தால் ஒரு நாளைக்கு 1008 முறை கூட இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். முழுமையாக இந்த மந்திரத்தை எப்போது நீங்கள் 1,00,000 முறை உச்சரித்து முடிக்கிறார்களோ அப்போது நீங்கள் எண்ணிய எண்ணங்கள் நிறைவேற தொடங்கும். லட்சியத்தில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கையில் உங்களுக்கு எவ்வளவு பெரிய குறிக்கோளாக இருக்கட்டும், அந்த குறிக்கோளில் நீங்கள் ஜெயிக்க உங்களுக்கு உறுதுணையாக இந்த மந்திரம் இருக்கும்.

vellerukku-pillaiyar

ஒருமுறை ஒரு லட்சியத்திற்காக, ஒரு லட்சம் முறை இந்த மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டீர்கள். உங்களுடைய லட்சியம் நிறைவேறிவிட்டது. மீண்டும் வேறொரு லட்சியத்திற்கு இதேபோல் இந்த பரிகாரத்தை மீண்டும் தொடங்கலாம். ஆனால் நீங்கள் இந்த பரிகாரத்தை தொடங்கக்கூடிய நாள், இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்க கூடிய அந்த நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் தொடங்கினால் மட்டுமே இந்த மந்திரத்திற்கான பலனை உங்களால் அனுபவிக்கமுடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -