குப்பையில் தூக்கி போடும் டீத்தூளை இதற்கெல்லாம் கூட பயன்படுத்தலாமா? இனி உங்கள் கை, டீ தூளை குப்பையில் கொட்ட போகவே போகாது.

tea
- Advertisement -

குப்பையில் தூக்கி போடக்கூடிய டீ தூளில் இருக்கும் பலவகையான வீட்டு பயன்பாட்டு குறிப்புகளைப் பற்றி தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவை படித்த பின்பு உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்து இருந்தால், உங்களுடைய வீட்டிலும் டீ தூளை தூக்கி குப்பைத் தொட்டியில் போடாமல் இந்த முறைகளில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் உபயோகமானதாக இருக்கும். குப்பையில் தூக்கி போடும் டீத்தூளை வைத்து அப்படி என்ன பயன்பாடு இருக்கும். வாங்க அந்த இன்ட்ரஸ்டிங்கான டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம்.

முதலில் டீ போட்டு விட்டு வடிகட்டிய டீத்தூளை அப்படியே காய வைத்து நாம் ஸ்டோர் செய்தால் அது சீக்கிரமே கெட்டுப் போகும். நீங்கள் பயன்படுத்திய வடிகட்டியில் இருக்கக்கூடிய டீ தூளில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அந்த டீத்தூளை அலசி விட வேண்டும். அப்போது உங்களுக்கு, வடிகட்டியில் இருக்கும் தூளில் இருந்து பாலும் டீ தூளும் கலந்தது போல கொஞ்சம் தண்ணீர் கிடைக்கும். வட்டியில் இருக்கக்கூடிய டீ தூள் பால் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.

- Advertisement -

பால் இல்லாமல் சுத்தம் செய்த டீத்தூளை ஒரு தட்டில் பரப்பி போட்டு வெயிலில் காயவைத்து, ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த தண்ணீரை கூட வீணாக்க வேண்டாம். இந்த டீ தூள் சுத்தம் செய்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி கொள்ளலாம். இப்போது நமக்கு காய்ந்த இந்த டீ தூள் தயாராக உள்ளது. பார்ப்பதற்கு புது டீத்தூள் போலவே இருக்கும். இந்த டீதூளை தான் நாம் மீண்டும் பயன்படுத்த போகின்றோம்.

hand-wash

முதல் குறிப்பு. அசைவம் சுத்தம் செய்த பின்பு அல்லது அசைவ சாப்பாட்டை சாப்பிட்டதற்கு பின்பு உங்களுடைய கைகளில் வரக்கூடிய ஒரு கெட்ட வாடையை என்னதான் சோப்பு போட்டு கழுவினாலும் போகவே போகாது. சோப்பு போட்டு கழுவிய உங்களுடைய கைகளில் கொஞ்சமாக இந்த பழைய காய்ந்த டீ தூளை எடுத்து போட்டு கையை நன்றாக ஸ்கரப் செய்து, கழுவி பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

இரண்டாவது குறிப்பு. நாம் வெயிலில் வெளியே சென்று வந்தால் கட்டாயமாக சன் டேன் ஏற்படும். இந்த சன் டேன் சுலபமாக நீக்க என்ன செய்யலாம். ஒரு சிறிய பௌலில் 1 ஸ்பூன் இந்த டீ தூள், புளித்த தயிர் 1 ஸ்பூன் இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை சன் டேன் உள்ள இடத்தில் அப்ளை செய்து லேசாக ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, மீண்டும் ஒரு, ஐந்து நிமிடங்கள் அந்த இடத்திலேயே டீத்தூளை அப்படியே உலர விட்டு விடுங்கள். அதன் பின்பு தண்ணீரை போட்டு கழுவி பாருங்கள். சன் டேன் உடனடியாக நீங்கி இருக்கும்.

face11

மூன்றாவது குறிப்பு. நம் வீட்டு சமையல் அறையில் காரணமே இல்லாமல் சில இடங்களில் ஈ வந்து மொய்க்கும். குறிப்பாக அசைவம் சமைத்த இடம். ஏதாவது பழங்களை வெட்டி வைத்து இருந்தால், அந்த பழச்சாறு விழுந்த இடம், குறிப்பாக மாம்பழம் வெட்டினால் அந்த வாசம் உள்ள இடம் எல்லா இடத்திலும் ஈக்கள் வந்து மொய்க்கும். இப்படி எந்த இடத்தில் அதிகமாக ஈ இருக்கின்றதோ அந்த இடத்தில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த டீ தூளை, ஈ மொய்க் கூடிய அந்த இடங்களில் தூவி விடவேண்டும்.

நான்காவது குறிப்பு. இந்த டீ துளை நாம் ஒரு நல்ல ஸ்க்ரப்பராக முகத்திற்கு பயன்படுத்தலாம். மூக்கின்மேல் இருக்கக்கூடிய பிளாக் ஹெட்ஸ் நீக்குவதற்கு, கொஞ்சமாக இந்த டீத்தூளை உங்களுடைய ஆள்காட்டி விரலால் தொட்டு, மூக்கின் மேலே ஸ்கரப் செய்தால், மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும். அப்படியே முகம் முழுவதும் கூட ஒரு முறை இந்த ஸ்கிரப்பரை பயன்படுத்தி சுத்தம் செய்தால் முகம் பளிச்சென மாறும்.

ஐந்தாவது குறிப்பு. வீட்டில் பூச்செடிகள் காய்கறி செடிகள் இருந்தால் இந்த டீத்தூளை வாரம் ஒருமுறை அந்த மண்ணில் உரமாக சேர்க்கலாம். செடியை சுற்றி உள்ள மண்ணின் டீ தூளை தூவி விட்டு, நன்றாக மண்ணுடன் கலந்து விட்டு விடுங்கள். செடிகள் செழிப்பாக வளரும். இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால், உங்களுடைய வீட்டிலும் டீத்தூளை குப்பையில் தூக்கி போடாமல், இந்த குறிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -