கடன், லோன், EMI தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கோவிலுக்கு இந்த 1 பொருளை தானம் செய்தால் போதுமாம் தெரியுமா?

loan-emi-vilakku
- Advertisement -

ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை தான். தான் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு பெரிய தொகையை கடனுக்காக எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இன்று பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர். அதிலும் லோன், இஎம்ஐ என்கிற பிரச்சினை எல்லாம் இல்லாத வீடுகளே கிடையாது. நாம் சாப்பிடுகிறோமோ, இல்லையோ வாடகை, லோன், EMI என்று நம் உழைப்பை தனியாக ஒதுக்கி விட வேண்டியது தான். இது போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட கோவிலுக்கு நாம் இந்த ஒரு பொருளை தானம் செய்வது சிறப்பான பரிகாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது என்ன பரிகாரம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

money

நாம் சம்பாதிக்கும் முழு தொகையையும் நம்மால் அனுபவிக்க முடியும் என்றால் அது தான் உண்மையான மகிழ்ச்சி. எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருந்து கொண்டே இருந்தால் அது உண்மையான மகிழ்ச்சி அல்ல. செய்யும் செலவுகள் நமக்கானதாக இருப்பது தான் முக்கியம். ஓடி ஓடி உழைத்து கலைத்த பலனை முழுமையாக நம்மால் அனுபவிக்க முடியாத இந்த நிலைக்கு நம் கர்ம வினையும் காரணமாகும்.

- Advertisement -

எவர் ஒருவரால் தான் சம்பாதித்த பணத்தை முழுவதுமாக தனக்காக செலவு செய்து கொள்ள முடிகிறதோ! தன் குடும்பத்திற்காக செலவு செய்து கொள்ள முடிகிறதோ! அவர்களுக்கு கர்ம வினை குறைந்து வருகிறது என்பது தான் அர்த்தம். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இது போல லோன், இஎம்ஐ என்று கட்டி கழித்த பின் இறுதி காலகட்டத்தில் தன்னுடைய ஓய்வூதியத்தை முழுவதுமாக அனுபவிக்கிறான் எனில், அவன் கர்ம வினையை முடித்த பின்பு இதனை அனுபவிப்பதால் இறுதியில் மோட்சம் அடைகிறான்.

pichai-thanam

ஆனால் ஒரு சிலர் இறுதி காலத்தில் கூட பிறர் கையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுடைய கர்மவினை முடியவில்லை என்பதை உணர்த்துகிறது. இன்னும் அவருடைய கர்ம பலன்களை அவர் அனுபவிக்க வேண்டியது இருக்கும். அடுத்த பிறவியிலும் அது தொடரக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. இப்படி நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்தே நம்முடைய கர்மவினை எந்த அளவிற்கு இருக்கிறது? என்பதை நம்மால் யூகிக்க கூறி விட முடியும்.

- Advertisement -

இப்படி சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தொடர்ந்து ஏதாவது ஒரு கடன் தொல்லையால் அவதிப்பட நேர்ந்தால் நீங்கள் கோவிலுக்கு இந்த பொருளை தானம் செய்யலாம். மாதா மாதம் ஒரு தொகையை கோவிலுக்கு இந்த தானம் செய்வதற்கு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது அருகில் இருக்கும் கோவிலுக்கு அல்லது உங்களுடைய இஷ்ட தெய்வ கோவிலுக்கு செல்லுங்கள்.

vilakku1

அங்குள்ள அர்ச்சகரிடம் கோவிலுக்கு விளக்கேற்ற தேவையான எண்ணெயை உங்களால் முடிந்த மட்டும் உங்கள் சக்திக்கு ஏற்ப ஒரு தொகையைக் கொடுத்து வாங்கிக் கொடுங்கள். நீங்கள் வாங்கிக் கொடுக்கும் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி மூலவருக்கு அந்த ஜோதியை பரவ செய்யும் பொழுது உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். படிப்படியாக கடன் பிரச்சினைகள் குறைந்து, மாதா மாதம் உங்களுக்கென நீங்கள், உங்களுக்கு தேவையானதை செலவு செய்து கொள்ளும் படியாக இறைவன் ஆசீர்வதிப்பார்.

- Advertisement -