பின்னல் கூட போட முடியாத மெல்லிய முடியை பெரிய கொண்டை போடும் அளவிற்கு தடிமனாக வளர்க்க தலைக்கு குளிக்கும் முன் இதை தேய்க்க மறக்காதீர்கள்.

- Advertisement -

முடி நல்ல நீளமாக வளர்க்க வேண்டும் என்று ஆசை ஒரு புறம் இருந்தாலும் ஒரு சிலருக்கு இருக்கும் முடியாவது நல்ல அடர்த்தியாக பார்க்க அழகாக இருந்தால் போதும் என்று நினைப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கும் நீளமான முடி வளரத் தான் செய்யும் ஆனால் அது அடர்த்தியாக இருக்காது. எலி வால் போல நீண்டிருக்கும் அல்லது முடி உதிர்ந்து கொண்டே இருக்கும். இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் போது சரி செய்து கொள்ளலாம். அந்த எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவு தெரிந்து கொள்வோம்.

முடி அடர்த்தியாக வளர ஹேர் ஆயில்
இந்த எண்ணெய் தயாரிப்பதற்கு நமக்கு பேபி ஆயில் தேவைப்படும். ஏனெனில் இதில் முடிக்கு தேவைப்படும் போஷாக்கு இருப்பதுடன் முடி அதிகமாக டேமேஜ் ஆகாமல் இருக்கும். இந்த ஆயிலை இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், இத்துடன் விளக்கெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், மூன்றையும் ஒரு பவுலில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து இத்துடன் இரண்டு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து விடுங்கள். மேலும் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு ஸ்பூன் ஆளி விதை இதையும் சேர்த்து கலந்து வைத்து விடுங்கள. இதை நாளை நீங்கள் தலைக்கு குளிக்கிறீர்கள் என்றால் இன்று இரவு தயார் செய்து வைத்து விடுங்கள். இரவு முழுவதும் இதில் இருக்கும் பொருட்கள் எல்லாம் இந்த எண்ணெயில் நன்றாக ஊற வேண்டும்.

மறுநாள் காலையில் தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த எண்ணையை உங்கள் தலை முடியின் வேர்க்கால்கள் முதல் நுனி முடி வரை நன்றாக தேய்த்து விடுங்கள். இது அப்படியே உங்கள் தலையில் ஊற வேண்டும். அதன் பிறகு எப்போதும் போல் மயில்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்தி தலைக்கு குளித்து விடுங்கள்.

- Advertisement -

இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்கள் தலையில் புதிதாக ரத்த ஓட்டம் அதிகரித்து புதிய முடிகள் அதிகமாக வளர்வதுடன் முடி அடர்த்தியாகவும் கருகருவென்று வளரும். இந்த எண்ணையை நீங்கள் அதிக அளவு தயாரித்துக் கொள்ள வேண்டும். இதில் கொடுத்துள்ள அளவுகளில் கொஞ்சம் கூடுதலாக சேர்த்து தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

தயாரித்த இந்த எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். மாலையில் எடுத்து உள்ளே வைத்து விடுங்கள். இதே போல வெயிலில் வைத்து வைத்து எடுத்தால் தான் எண்ணெய் கெட்டுப் போகாமல் இருக்கும். இதை தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. இதில் சேர்த்து இருக்கும் மற்ற பொருட்களில் கெட்டுப் போகும் தன்மை கிடையாது. எனினும் நாம் வெங்காயத்தை பச்சையாக சேர்த்து இருப்பதால் வெயிலில் வைக்காமல் வைத்தால் வாடை வர ஆரம்பித்து விடும்.

இதையும் படிக்கலாமே: 40 வயதை தாண்டினால் கூட உங்க முகத்தில் சுருக்கமே வராது. வெறும் பத்து ரோஜா பூவை வைத்து, பத்து வயதை குறைத்து காட்டலாம். அது எப்படின்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா. இந்த பியூட்டி டிப்ஸ் உங்களுக்காக.

அதுமட்டுமின்றி இப்படி வெயிலில் வைக்கும் போது நமக்கு விட்டமின் டி சத்தும் இதில் சேர்ந்து விடும். அதுவுமே முடி வளர்ச்சிக்கு நல்ல ஒரு பங்களிப்பை தரும். முடி வளர தேவையான அனைத்து சத்துக்கள் உள்ள பொருட்களையும் சேர்த்து தயாரிக்கும் இந்த எண்ணையை பயன்படுத்தி உங்கள் முடி வளர்ச்சியே அதிகரித்துக் கொள்ளலாம். இந்த ஆயில் தயாரிக்கும் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -