ஒரே வாரத்தில் முடி வளர எண்ணெய் தயாரிக்கும் முறை

hair oil prepare
- Advertisement -

பெண்கள் என்றாலே அழகு தான். அதிலும் நீண்ட கரு கூந்தலை உடைய பெண்கள் அவர்கள் பேரழகிகள் என்றே சொல்லலாம். கூந்தல் ஒரு பெண்ணை அத்தனை அழகாக மாற்றிக் காட்டும் என்பது துளியும் சந்தேகமில்லை. இப்போதெல்லாம் யாரும் பெரும்பாலும் இது போன்ற முடி வளர்ச்சி விரும்புவதில்லை என்றாலும் இது போன்ற முடி இருப்பவர்களை பார்த்து ரசிக்க தவறுவதில்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

அப்படியானால் முடி வளர்ச்சி விரும்பாத பெண்கள் யாருமே கிடையாது. இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ப தங்களுடைய சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்ளுகிறார்கள். இன்னும் சிலருக்கு அதை பராமரிப்பதற்கான நேரமின்மையால் தவிர்த்து விடுகிறார்கள். இவை அனைத்தையும் சரி செய்யும் கூறி எளிமையான வழியை தான் இப்பொழுது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

எந்தவித சிரமமும் இல்லாமல் எளிமையாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அபாரமான முடி வளர்ச்சி பெறலாம். அதுவும் ஒரே வாரத்தில் கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! இந்த முறையும் அப்படித்தான் இருக்கும். அந்த எண்ணெயை எப்படி தயாரிப்பது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நீண்ட அடர்த்தியான கருமுகூந்தலை பெற தேங்காய் எண்ணெய்

இந்த தேங்காய் எண்ணெய் தயாரிப்பது மிக மிக சுலபம் இதற்கு வாங்கக் கூடிய தேங்காய் எண்ணெய் மட்டும் நல்ல செக்கில் ஆட்டிய சுத்தமான தரமான எண்ணையாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அது தான் முடி வளர்ச்சிக்கு நல்ல உதவியாக இருக்கும்.

- Advertisement -

அடுத்து ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்து நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதை வெயிலில் போட வேண்டாம் வீட்டு நிழலில் ஆர் வைத்தால் போதும். இப்போது மிக்ஸி ஜாரில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் கறிவேப்பிலையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் அளவு நீங்கள் எடுத்து இருக்கும் கருவேப்பிலை வெந்தயத்திற்கு ஏற்றார் போல் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் எண்ணெய் சூடானவுடன் அரைத்து வைத்து வெந்தியம், கருவேப்பிலை இதில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணெய் சிறிது நேரம் காய்ந்த உடனே வெந்தயம் கருவேப்பிலையும் சாறெல்லாம் இறங்கி எண்ணெயின் நிறம் மாறி விடும். அந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள் எண்ணையை மிதமான சூட்டிலே காய வையுங்கள் அதிகமாக கொதிக்க விட வேண்டாம். எண்ணெய் நன்றாக சூடாறியவுடன் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

இதை தலையில் வேர்க்காலில் இருந்து முடி வரை நன்றாக படும்படி தேய்த்து விடுங்கள். 10 நிமிடம் கழித்து நன்றாக மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு மீண்டும் அரை மணி நேரம் கழித்து மயில்தான ஷாம்பு அல்லது சேர்க்கை சேர்த்து தலைக்கு குளித்து விடுங்கள் போதும். இந்த எண்ணெய்யை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினாலே போதும் ஒரே வாரத்தில் புது முடிகள் வளர்வதற்கான அறிகுறிகள் தெரியும்.

இதையும் படிக்கலாமே: கருத்த முகம் வெள்ளையாக ஃபேஸ் பேக்

இதை தொடர்ந்து பயன்படுத்தும் போது நல்ல நீண்ட கரும்புகளை பெறுவதற்கு முடி உதிர்வு, முடி செம்பட்டையாதல், முடி வெடிப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் என்று சொல்லப்படுகிறது .இந்த எளிமையான எண்ணெய் தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பலன் பெறலாம்.

- Advertisement -