கருத்த முகம் வெள்ளையாக ஃபேஸ் பேக்

ulunthu facce pack
- Advertisement -

பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்றால் அவர்களை தேவதைக்கு இணையாக ஒப்பிடுவார்கள். தேவதைகள் எந்த அளவுக்கு நிறமாகவும் எந்தவித மாசு மருக்களும் இல்லாமல் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு ஒரு பெண் இருக்க வேண்டும் என்பதால்தான் அழகாக இருக்கும் பெண்களை தேவதை என்று கூறுகிறோம். அப்படி தேவதையாக திகழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக பெண்கள் முகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்று பார்க்கும் பொழுது கரும்புள்ளிகள், கருந்துட்டுகள், வடுக்கள், தழும்புகள் சுருக்கங்கள் என்று நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் சரி செய்வதற்குரிய ஒரு எளிமையான இயற்கையிலேயே அனைவரின் இல்லங்களிலும் கிடைக்கக்கூடிய பொருளை நாம் பயன்படுத்தும் பொழுது அதனால் நமக்கு அதிகப்படியான செலவுகள் எதுவும் ஏற்படாது. அதேசமயம் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு பொருளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

அந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை நம்முடைய சமையலில் நாம் உபயோகப்படுத்தும் உளுந்துதான். உளுந்தில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. உளுந்தை நம்முடைய முகத்திற்கு நாம் பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற பலன்களை நம்மால் பெற முடியும். இரண்டு ஸ்பூன் அளவு உளுந்தை எடுத்து ஒரு பவுலில் போட்டு காலையிலேயே காய்ச்சாத பசும்பாலை ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். மாலை நேரத்தில் அந்த பாலுடன் சேர்த்து உளுந்தை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த உளுந்தை இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். முகத்தில் இந்த உளுந்து ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்த பிறகு சிறிது காய்ச்சாத பசும்பாலை எடுத்து முகத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடமாவது மசாஜ் செய்த பிறகு இந்த ஃபேஸ் பேக்கை கழுவி விட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்கும். வாயை சுற்றி இருக்கும் கருமைகள், கழுத்தில் இருக்கும் கருமைகள் என்று எந்த கருமையாக இருந்தாலும் அந்த கருமை நீங்கும். கரும்புள்ளிகள் வரவே வராது. மேலும் முகத்தில் எந்தவித சுருக்கமும் இன்றி இளமையான தோற்றத்தை பெற முடியும். சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

வெயில் காலத்தில் காய்ச்சாத பசும்பாலை வெளியில் வைத்தால் கெட்டுப் போய்விடும் என்று நினைப்பவர்கள் பாலை ஊற்றி ஊற வைத்துவிட்டு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விடலாம். படுக்கச் செல்வதற்கு முன் இதை எடுத்து அப்படியே மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவிக் கொள்ளலாம். ஒரு முறை உபயோகப்படுத்தினாலே நல்ல மாற்றத்தை காண முடியும்.

இதையும் படிக்கலாமே: கோடைகால அரிப்பு வேர்க்குரு தோல் கருமை நிறம் மாறுதல் தடுக்க எளிய குறிப்புகள்

அனைவரின் இல்ல சமையலறையிலும் இருக்கக்கூடிய இந்த உளுந்தை நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் தேவதை போல நம்மால் ஜொலிக்க முடியும்.

- Advertisement -