அசைவத்தை மிஞ்சும் சுவையில் இந்த விதைகளில் கறி செய்து பாருங்கள் சப்பாத்தி, சூடான சாதத்துடன் தொட்டுக்க அருமையாக இருக்கும்! ரொம்பவே வித்தியாசமான டேஸ்டியான கறி சுலபமாக செய்வது எப்படி?

lotus-seeds-curry
- Advertisement -

சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையான கறி ‘தாமரை விதை கறி’ ஆகும். பன்னீர் பட்டர் மசாலா போலவே தாமரை விதை கறியும் ரொம்பவே சுவையாக இருக்கும். தாமரை விதைகளில் இருக்கக்கூடிய மெக்னீசியம் ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் பொட்டாசியம் மற்றும் சோடியமும் உள்ளன. இதனால் ரத்த அழுத்தம் சீராகி ஆரோக்கியம் காக்க உதவுகிறது. அற்புதமான தாமரை விதைகள் கறி எப்படி சுலபமாக செய்வது? என்பதை தொடர்ந்து காண்போம்.

தேவையான பொருட்கள்

தாமரை விதைகள் – 50 கிராம், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – இரண்டு, சீரகம் – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், முந்திரி பருப்பு – 10, பச்சை மிளகாய் – ரெண்டு, இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – ஐந்து பற்கள், ஏலக்காய் – 2, பட்டை – ஒன்று, கிராம்பு – 3, உப்பு – தேவையான அளவு, வெண்ணெய் – தேவையான அளவு, கரம் மசாலாத்தூள் – அரை தேக்கரண்டி, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு, பிரஷ் கிரீம் – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணெய் விட்டு கரைய விடுங்கள். வெண்ணெய் கரைந்ததும் அதில் 50 கிராம் அளவிற்கு தாமரை விதைகளை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மீண்டும் வெண்ணெய் விட்டு கரைந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அதனுடன் சீரகம் மற்றும் சோம்பு போட்டு வதக்குங்கள்.

இவை வறுபட்டதும் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து வதக்குங்கள். பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு குட்டி குட்டியாக பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்குங்கள். பின்னர் இவை வதங்கி வரும் பொழுது 10 முந்திரி பருப்புகளை முழுதாக அப்படியே சேர்த்து வதக்குங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து நன்கு மசிய வதக்கி விடுங்கள்.

- Advertisement -

இவை வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கொஞ்சம் போல உப்பு போட்டு பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஆறியதும் ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு வெண்ணெய் விட்டு கரைய விடுங்கள். வெண்ணெய் நன்கு கரைந்ததும் அதில் கால் டீஸ்பூன் அளவுக்கு கரம் மசாலா சேர்த்து லேசாக வதக்குங்கள்.

இதையும் படிக்கலாமே: கேரட் சாதம் செய்வது எப்படி

பின் மீதம் இருக்கும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள். இவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது நீங்கள் வறுத்து வைத்துள்ள தாமரை விதைகளை சேர்த்து பிரட்டி விடுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து பிரஷ் கிரீம் மேலே ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரியுங்கள். அவ்வளவுதாங்க, சூப்பரான இந்த தாமரை விதை கறி செய்வது சுலபம் தான், நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -