காலையில் கதவை திறந்து வெளியில் சென்றதும் நீங்கள் பார்க்க வேண்டிய இந்த 3 விஷயங்களைப் பார்த்தால் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு யோகம் தானாம்!

cow-door
- Advertisement -

காலையில் எழுந்திருக்கும் பொழுதே முதல் பொருளாக நாம் எதைப் பார்க்கிறோமோ! அதை வைத்து தான் அன்றைய நாள் நமக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்கிறது ஜோதிடம். அதனால் தான் எழுந்தவுடன் கண்களைத் திறக்கும் முன்பு நம்முடைய உள்ளங்கையை பார்த்து விட்டு பிறகு தான் கண்களைத் திறக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த வகையில் கதவை திறந்து வெளியே சென்றதும் இந்த 3 விஷயங்களை பார்க்க நேர்ந்தால் நமக்கு அன்றைய நாளில் யோகம் அடிக்குமாம்! அப்படி என்ன அந்த 3 விஷயங்கள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

wakepu

காலையில் கண் திறந்ததும் மகா லட்சுமியின் திருவுருவம், நம்முடைய உள்ளங்கை, கண்ணாடியில் நம் முகம் பார்ப்பது, மழலையின் சிரிப்பு, வளையல் ஓசை, தெய்வத் திரு உருவங்கள், இயற்கை சார்ந்த விஷயங்கள், பசுமை நிறைந்த இலைகள், இசை வாத்தியங்கள், மங்கல பொருட்கள் ஆகியவற்றை பார்த்துவிட்டு எழ நேர்ந்தால் அன்றைய நாள் நமக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக நிச்சயம் இருக்கும். தொட்ட காரியம் எல்லாம் துலங்கி எதிலும் வெற்றிக் கனியை எட்டக் கூடிய வாய்ப்புகள் அமையும் என்பது சூட்சம ரகசியம்.

- Advertisement -

அது போல நாம் எழுந்து நிலை வாசற் கதவை திறந்து விட்டு வெளியில் முதல் முறையாக செல்லும் பொழுது நம் கண்களில் படும் இந்த விஷயங்கள் எல்லாம் நமக்கு யோகத்தை தரும். இதில் ஒரு சில விஷயங்கள் நமக்கு அதிர்ஷ்டத்தையும் தரும். இவையெல்லாம் யாவன? என்பதை பார்ப்போம். முதல் விஷயமாக பசுவையும், கன்றுடன் கூடிய பசுவையும் காண்பது என்பது அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும். ஒரு மனிதன் தாய்ப்பாலைக் குடித்து வளர்வதை விட பசும்பால் குடித்து வளர்வது தான் அதிகம். பசுவில் அத்தனை கடவுள்களும், தேவாதி தேவர்களும் அடங்கியுள்ளதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அதனால் தான் அதனை கோமாதா என்று பயபக்தியுடன் வணங்கி வரப்படுகிறது. இத்தகைய பசுவை காண்பது என்பது அன்றைய நாளை யோகமாக்கும்.

Crow

அண்டங்காக்கை எனப்படும் முழுவதுமாக கருப்பாக இருக்கும் காக்கையை காண்பது துரதிர்ஷ்டத்தை தரும். கதவைத் திறந்ததும் அண்டங்காக்கை பார்க்க நேர்ந்தால் அன்றைய நாளில் முக்கிய விஷயங்களை தள்ளிப் போடுவது நல்லது. பூனை குறுக்கே போனால் துரதிர்ஷ்டம் என்பது போல இந்த சில விஷயங்களும் நமக்கு வரக்கூடிய ஆபத்தை முன் கூட்டியே உணர்த்தக்கூடிய அற்புத வாய்ப்புகளை கொடுக்கும்.

- Advertisement -

சாதுக்கள், முனிவர்கள் போன்ற ஜடாமுடியுடன் தோற்றம் தரும் ஒருவரை காணும் பொழுது அன்றைய நாள் யோகம் தருமாம். நல்லவரோ, கெட்டவரோ, யார், எவரோ ஆனால் ஜடாமுடியுடன் ஒருவரை நீங்கள் கதவைத் திறந்தவுடன் முதல் பார்வையாக பார்க்க நேர்ந்தால் அன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்.

jadaamudi

வீட்டு வாசலை திறந்ததும் நிறை குடத்தை பார்க்க நேர்ந்தால் அன்றைய நாள் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் தரும் யோகமான நாளாக அமையும். தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் கையில் இருக்கும் நிறைகுடம், உங்கள் வீட்டு குடத்தில் நிறைந்து இருக்கும் தண்ணீர், கோவிலுக்கு அபிஷேகத்திற்கு கொண்டு செல்லப்படும் நிறை குட பால் இப்படி எந்த வகையில் ஆவது குடம் முழுவதும் பால் அல்லது தண்ணீர் நிறைந்து நிறை குடத்துடன் நீங்கள் பார்க்க நேர்ந்தால் அன்றைய நாள் உங்களுக்கு யோகம் தருமாம்.

- Advertisement -