அதிர்ஷ்டத்தை தரக்கூடிய இந்த பூச்செடிகளில் ஒன்று கூடவா உங்கள் வீட்டில் இல்லை? ஏதாவது ஒரு செடியை மட்டும் வச்சு பாருங்க! சந்தோஷத்திற்கு பஞ்சமே வராது.

lucky-flower-plant
- Advertisement -

சில பேருக்கு எதனால் அதிர்ஷ்டம் வந்தது என்றே தெரியாது. ஒரே ஒரு ரோஜா செடியை கடையிலிருந்து எதிர்பாராமல், எதிர்பாரா நேரத்தில் வாங்கி வைத்திருப்பார். அந்த ரோஜா செடியின் மூலம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும். நம்ப முடியவில்லையா? நிச்சயம் இது உண்மை. செடிகளின் மூலம் நமக்கு எதிர்பாரத அதிர்ஷ்டத்தை தேடித் தர முடியும் என்பது மறுக்க முடியாத ஒன்று. அந்த வகையில் நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய பல பூச்செடிகள் உள்ளன. இதில் எல்லாவற்றையும் வீட்டில் வைத்து வளர்க்க முடியாவிட்டாலும், உங்களால் எந்த செடியை வைத்து வளர்க்க முடியுமோ அதை வைத்து வளர்த்து பாருங்கள்! அதிர்ஷ்டம் கட்டாயம் உங்களைத் தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

முதலாவதாக இட்லி பூச்செடி. இந்த பூச்செடியை வெட்சி பூ என்றும் சொல்லுவார்கள். சொல்லப்போனால், இது வெற்றி பூச்செடி தான். அந்த காலங்களில் எல்லாம் போருக்கு செல்பவர்கள் இந்த பூவை சூடிக் கொண்டு செல்வார்களாம். இந்தப் பூவை வைத்து சென்றால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பி உள்ளார்கள். அவர்களுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்தப் பூவை வீட்டில் வைத்து வளர்ப்பவர்களுக்கு, வெற்றி தானாக தேடி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

அடுத்ததாக நறுமணத்தை இயற்கையாக வீசிக்கொண்டே இருக்கும் பன்னீர் ரோஜா. வீட்டில் பன்னீர் வாசம் இருந்தால், லட்சுமி கலாட்சம் தேடி வரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நிரந்தரமாக பன்னீர் வாசத்தை வீசும், இந்த பன்னீர் ரோஜாவை வீட்டின் முன்பு வைத்து வளர்த்தால் நம்முடைய வீட்டிற்கு நிச்சயம் அதிர்ஷ்டம்தான். இந்த வாசம் வந்தது நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த செடியானது உங்கள் வீட்டு வாசலில் இருந்தாலும், உங்கள் வீடு முழுவதும் பன்னீர் நறுமணம் நிறைந்திருக்கும்.

panner-rose

அடுத்ததாக சொல்லப்படுவது ஜாதிமல்லி. இந்த வாசத்திற்கு மயங்காதவர் யாருமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய வீட்டையே மணக்க மணக்க மாற்றக்கூடிய சக்தி இந்த ஜாதி மல்லிப் பூவிற்க்கு உள்ளது. இந்த வாசம் நம் மனதிற்கு நேர்மறை ஆற்றலை எப்போதும் தந்துகொண்டே இருக்கும் என்று சொன்னால் அது பொய்யாகாது.

- Advertisement -

அடுத்ததாக குண்டு மல்லிகை பூ. குண்டு மல்லிகை பூவை பற்றி பிறர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இந்த பூவை நம் வீட்டில் வைத்து வளர்த்து, அதில் பூக்கும் பூவைப் பறித்து தினம்தோறும் புதியதாக இறைவனுக்கு சூட்டி வழிபட்டால், பல நன்மைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லவே வேண்டாம். பெண்களுக்கு எல்லா பூவை காட்டிலும், மிகவும் பிடித்த பூ குண்டு மல்லிகை பூ. அந்தப் பூ நம்முடைய வீட்டிலே பூத்து குலுங்குவதை பார்க்கும்போது, அதைப் பறித்து தலையில் சூட்டிக் கொள்ளும் போது, எந்த மனம் தான் சந்தோஷம் அடையாது.

jasmine

அடுத்ததாக சொல்லப்படுவது முல்லைப் பூ. முல்லைப் பூ வானது குரு பகவானுக்கு உரிய பூ. ஒருவரது வீட்டில் முல்லைப்பூ இருந்தால் அந்த வீட்டிற்கு குருபகவானின் ஆசீர்வாதமே கிடைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

மேலும் சில பூக்களை எல்லாம் வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் வாஸ்து பிரச்சனை வராது என்று சொல்லப்படுகிறது. அது என்னென்ன என்பதையும் பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம்.

எப்போதுமே வாடாமல் இருக்கும் வாடாமல்லி பூச்செடியை உங்கள் வீட்டில் வைத்துப் பாருங்கள். எப்படிப்பட்ட வாஸ்து தோஷத்தையும் அது சரி செய்துவிடும். வாடாமல் இருக்கும் அந்தப் பூ, நம் வீட்டில் இருந்தால், நாம் சந்தோஷமும் என்றைக்கும் வாடாமல் இருக்கும் என்பது நம்பிக்கை.

vadamalli

அடுத்ததாக கோழிக்கொண்டை பூ செடி. இந்த பூவும் எளிதாக வாடக் கூடியது அல்ல. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த பூவை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்தால், அதிர்ஷ்டம் என்று சொல்லப்பட்டுள்ளது. சிகப்பு கலரில் கொத்துக் கொத்தாக பூத்து குலுங்கும் இந்த பூக்களை பார்க்கும்போது மனம் கட்டாயம் சந்தோஷம் அடையும்.

அடுத்ததாக வீட்டிற்கு நேர்மறையான ஆற்றலை தரக்கூடிய சங்குப்பூ. இதில் நீல நிற சங்கு பூவாக இருந்தாலும், வெள்ளைநிற சங்குப்பூ வாக இருந்தாலும் வீட்டில் வைத்து வளர்ப்பது நல்லது. இந்தப் பூவைப் பறித்து தினம்தோறும் விநாயகருக்கும், சிவபெருமானுக்கும் சூட்டி வந்தால் தீராத பிரச்சனைகளும் தீரும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

blue sangu poo

மேல் குறிப்பிட்டுள்ள எல்லா செடிகளையும் உங்கள் வீட்டில் வைத்து பராமரிக்க முடியாவிட்டாலும், ஒரு சிறிய தொட்டியில் உங்களுக்கு எந்த செடி பிடித்திருக்கிறதோ அதை வைத்து வளர்த்து பாருங்கள். உங்களையும் அறியாமல், ஒரு நேர்மறை எண்ணமும், மன அமைதியையும் உங்களால் உணரமுடியும். அதுவே, அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தானாக வீட்டிற்குள் அழைத்து வந்துவிடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு அந்தத் தோலை வெளியே வீசிடாதீங்க? உங்க வீட்ல இருக்க செடிகளுக்கு இப்படி உரமா மாத்திடுங்க!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Lucky flower plants for home. Flower plants for home.. Best flower plants for home. Poo chedi valarpu in Tamil. Lucky plant in house.

- Advertisement -