உங்க வீட்டில் இந்த செடி இருக்கிறதா? வீட்டில் வளர்க்கும் சிகப்பு நிற பூ பூக்கும் செடிகளுக்கு பணத்தை இருக்கும் சக்தி இருக்கிறதா என்ன?

sembaruthi-leaf-lakshmi-cash
- Advertisement -

வீட்டில் வளர்க்க வேண்டிய சில செடிகள் ஆன்மீக ரீதியாகவும் நிறையவே பலன்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. சரியான திசையில் வைத்து வளர்க்கப்படும் செடிகளும், அதன் நிறங்களும் கூட நமக்கு பல்வேறு நன்மைகளை செய்யுமாம். அந்த வகையில் இந்த ஒரு பூச்செடி, இந்த நிறத்தில் பூத்தால் பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டதாக இருக்குமாம். அது என்ன பூச்செடி? அதை எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும்? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வாஸ்த்து ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் வீட்டிற்கு முன்பு செவ்வரளி, பொன்னரளி போன்ற செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டம் தரும் என்று கூறுவார்கள். இதில் செவ்வரளி செடி வீட்டில் தென்கிழக்கு பகுதியில் வைத்து வளர்த்தால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை வரும் என்று கூறப்படுவது உண்டு. வீட்டு வாசல் முன் இது போன்ற செடிகளை வளர்ப்பது வாஸ்து தோஷங்களை போக்க வல்லது.

- Advertisement -

சிகப்பு நிறம் கொண்ட பூக்கள் பணத்தை ஈர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. சிகப்பு நிற பூக்களை வீட்டில் வைத்து வளர்த்தால், அந்த வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்குமாம். மேலும் எதிர்பாராத நஷ்டங்கள் வராதாம். அந்த அளவிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய சிகப்பு நிற பூக்களில் ரொம்பவும் முக்கியமான ஒரு பூ செம்பருத்தி பூ ஆகும். அதிலும் ஒற்றைச் செம்பருத்தி பூ சிவப்பு நிறங்களில் வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் பணவரவு அதிகரிக்கும். எப்பொழுதும் கையில் பணம் புழங்கிக் கொண்டே இருக்கும், தடை இல்லாத வருமானம் ஏற்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

வீட்டில் பூக்க கூடிய ஒற்றை நிற செம்பருத்தி பூக்களை பூஜை அறையில் உங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு வைத்து மனதார வேண்டிக் கொண்டால் உங்களுடைய பணக்கஷ்டம் தீருமாம். குடும்பத்தில் பண வரத்து குறையும் பொழுது இது போல நீங்கள் சிகப்பு நிற ஒற்றை செம்பருத்தியை பூஜையில் வைத்து வழிபடலாம். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் விநாயகருக்கு ஒற்றை நிற செம்பருத்தியை வைத்து வழிபட்டு வந்தால் தடைகள் யாவும் தகர்த்து வெற்றியை எளிதாக அடைந்து விடலாமாம். இந்த சிகப்பு நிற ஒற்றை செம்பருத்தி செடியை மேற்கு அல்லது தெற்கு திசையில் வைப்பது மிகுந்த நன்மை தருமாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பிரச்சனைகள் உங்களை தொடர்ந்து கொண்டே இருந்தால், அதற்கு காரணம், நீங்கள் ஏற்றும் இந்த தீபமாக கூட இருக்கலாம். கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் பெருக இப்படித் தான் தீபம் ஏற்ற வேண்டும்.

வீட்டின் எல்லா திசைகளிலும் வைத்து வளர்க்கக்கூடிய அழகு செடிகளாக இருக்கக் கூடியவை பட்ரோஸ், 5 மணி பூ, கற்றாழை, ரோஜா போன்றவை வாடக்கூடாது. இந்த செடிகள் எல்லாம் வாடினால் குடும்பத்தில் எதிர்மறை ஆற்றல்கள் நிலவும். எனவே அழகுக்காக வைக்கப்படும் செடிகள், நீங்கள் ஆசையாக வளர்க்கப்படும் இந்த சில செடிகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதை நன்கு நிறைய பூக்கள் பூக்குமாறு செழித்து வளர செய்யுங்கள். தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்து நீங்கள் அதை எந்த அளவிற்கு கவனமாக பார்த்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்குமாம். காலையில் எழுந்தது முதல் வேலையாக நீங்கள் இந்த செடிகளை பார்த்து கண் விழித்தால் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு தோல்வி என்பதே இருக்காதாம். வெற்றி உங்களை தானாகவே தேடி வருமாம். பணமும் கையில் அதிகம் புழங்கும்.

- Advertisement -