அதிர்ஷ்டம் வர தூங்கும் போது தலையணைக்கு அடியில் இதெல்லாம் வைக்கணுமா? யோகம் தரும் உலோகங்கள்!

sleep-lakshmi
- Advertisement -

சில பொருட்கள் திடீர் அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய அமைப்பு உண்டு. ஒவ்வொரு உலோகங்களும் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை உண்டு பண்ணுகின்றன. அந்த வகையில் இந்த சில உலோகங்களால் ஆன பொருட்களை நீங்கள் தூங்கும் பொழுது உங்களுடைய தலையணைக்கு அடியில் அல்லது கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கினால் யோகம் வரும் என்று கூறப்படுகிறது. அப்படியான பொருட்கள் என்னென்ன? அதன் பலன்கள் என்னென்ன? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

காப்பர் எனப்படும் செம்பினால் ஆன பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் தூங்க செல்லும் போது உங்களுடைய கட்டிலுக்கு பக்கத்தில் அல்லது அடியில் வைத்துக் கொண்டு தூங்கினால் இதனால் வரக்கூடிய அதிர்வலைகள் உங்களுடைய கோபத்தை குறைக்குமாம். எவ்வளவு கோபத்துடன் படுக்கைக்கு சென்றாலும், அதை அப்படியே குறைத்து நிம்மதியான உறக்கத்தை கொடுக்கும். இதே போல சிகப்பு சந்தன கட்டையும் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கினால் கோபம் குறையுமாம்.

- Advertisement -

நீங்கள் தினமும் ஏதாவது ஒரு வகையில் வெள்ளியை உங்களுடைய உடம்பில் அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை கொடுக்குமாம். இந்த நகைகளை அல்லது வெள்ளியால் ஆன ஏதாவது ஒரு பொருளை தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கினால், உங்களுடைய ஆற்றல் அதிகரிக்குமாம். வில் பவர் எனப்படும் இந்த ஆற்றல் அதிக அளவில் செயல்பட்டு உங்களை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளுமாம். ஏதாவது ஒரு வெள்ளி கிண்ணத்தில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பி மூடி வைத்து கட்டலுக்கு அடியிலும் வைத்துக் கொண்டு தூங்கலாம். நீங்கள் இரவு தண்ணீர் தாகம் எடுத்தால் இந்த தண்ணீரை எடுத்து குடித்துக் கொள்ளலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும்.

வெள்ளியைப் போலவே தங்கத்தையும் நீங்கள் தினமும் உடலில் ஏதாவது ஒரு சிறு நகையாக அணிந்து கொண்டால் உங்களை விட்டு துரதிருஷ்டம் சென்று ஓடி விடும். இந்த தங்கத்தை உங்களுடைய தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு, அதற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டு தூங்கினால் குண்டலினி சக்தி அதிகரித்து துணிச்சல் அதிகரிக்க செய்யுமாம். அதே போல பித்தளையால் ஆன ஏதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்தாலும் துணிச்சல் அதிகரிக்கும்.

- Advertisement -

திடீர் அதிர்ஷ்டம் வர ரெட்டை ஜோடியாக இருக்கும் வெள்ளி மீன்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதை நீங்கள் உங்களுடைய தலையணைக்கு அடியில் தூங்கும் போது வைத்துக் கொண்டு தூங்கினால் வெற்றியும், அதிர்ஷ்டங்களும் உங்களுக்கு குவியுமாம். அதே போல கெட்ட விஷயங்களை அகற்றி, துரதிருஷ்டங்களை துரத்தி அடிக்கக் கூடிய சக்தி இரும்பிற்கு உண்டு.

இதையும் படிக்கலாமே:
இந்த 1 விளக்கு ஏற்றினால் எலியும், பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவனும், மனைவியும் அன்னோன்யமாகி விடுவார்கள் தெரியுமா? தம்பதியர் ஒற்றுமைக்கு இதை செய்ய மறக்காதீங்க!

இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் படுக்கை அறையில் இருக்கக் கூடாது என்று கூறப்படுவது உண்டு, இருந்தாலும் ஒரு சிறு இரும்பு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் தலை பாகம் இருக்கும் பகுதிக்கு கீழே வைத்து தூங்கினால் துரதிர்ஷ்டங்கள் உங்களை விட்டு சென்று விடும். அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும் என்று நம்பப்படுகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் தொடர்ந்து 21 நாட்கள் செய்ய வேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது எனவே ஒருநாள் செய்துவிட்டு விடாமல், 21 நாட்கள் இப்படி தொடர்ந்து செய்து பாருங்கள், உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்க ஆரம்பிப்பதை நீங்களே பார்க்கலாம்.

- Advertisement -