இந்த 1 விளக்கு ஏற்றினால் எலியும், பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவனும், மனைவியும் அன்னோன்யமாகி விடுவார்கள் தெரியுமா? தம்பதியர் ஒற்றுமைக்கு இதை செய்ய மறக்காதீங்க!

mangalyam-vilakku
- Advertisement -

எப்பொழுதும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கணவனும், மனைவியும் தங்களுடைய வீட்டில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், அதை சில சமயங்களில் தங்களுடைய மனதிற்கு உள்ளையே போட்டு பூட்டி கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். தம்பதியர் ஒற்றுமைக்கு இந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்தால் மனம் ஒருமித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்களாம்! அத்தகைய எளிய பரிகாரத்தை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

கணவன் மனைவி உறவு என்பது எல்லா உறவுக்கும் அப்பாற்பட்ட ஒரு புனிதமான உறவாக இருந்து வருகிறது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை முதலில் கணவன், மனைவிக்கும் மனைவி, கணவனுக்கும் தான் தெரிவிக்க வேண்டும். இருவரும் இப்படி ஒருமித்த கருத்தோடு இருக்கும் பொழுது அங்கு பிரச்சனைக்கு இடம் இருக்காது. வெவ்வேறு கருத்துக்கள் ஏற்படும் பொழுது அந்த உறவில் விரிசல் விழுந்து விடுகிறது.

- Advertisement -

எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது எல்லாம் பெரிய விஷயம் அல்ல! ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொள்வது? ஒருவருக்கு ஒரு கஷ்டம் என்றால், இன்னொருவர் அதை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதை பொறுத்தே அவர்களுடைய உறவு வலுவாகிறது. கணவனுடைய கஷ்டத்தில் மனைவி பங்கேற்பதும், மனைவியுடைய கஷ்டத்தில் கணவன் பங்கேற்பதும் இந்த உறவிற்கு மிகவும் முக்கியமான ஆணிவேராக செயல்படும் ஒரு விஷயமாகும், எனவே இப்படி கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்காமல் இதையெல்லாம் தாண்டி உங்களுடைய உறவிற்கு இருக்கும் புனிதத்துவத்தை நீங்கள் பேணி பாதுகாக்க வேண்டும். இதனால் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களுடைய கஷ்டங்களில் பங்கு கொள்ளுங்கள், அவர்களாகவே உங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.

சரி, ஆன்மீக ரீதியாக தம்பதியர் ஒற்றுமைக்கு நாம் என்ன செய்யலாம்? ஆன்மீக ரீதியாக தம்பதியர் ஒற்றுமைக்கு நீங்கள் செய்ய வேண்டியது சுத்தமான பஞ்சு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மரத்திலிருந்து பஞ்சு காயில் கிடைக்கும் பஞ்சு எடுத்தால் நல்லது. இந்த பஞ்சினை நீங்கள் உங்களுடைய கைகளால் திரியாக திரிக்க வேண்டும். பூஜை அறையில் கடையிலிருந்து வாங்கி வரும் திரியை விட இப்படி பஞ்சை கொண்டு உங்களுடைய கைகளால் நீங்கள் திரி தயாரிக்கும் பொழுது அதில் தனி மகத்துவம் உண்டாகிறது.

- Advertisement -

பொதுவாக விளக்கில் இரட்டை திரி போட்டு ஏற்றுவது முறையானது என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். இரட்டை திரி கணவன் மனைவியின் ஒற்றுமையை நிர்ணயிக்கிறது. நீங்கள் கைகளால் பஞ்சை குச்சியை கொண்டு சுழற்றினால் அழகாக திரி போல திரிந்து வந்து விடும். அதன் பிறகு குச்சியை எடுத்துவிட்டு திரியை பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல கொஞ்சம் பஞ்சு நிறைய திதிகளை நீங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினை நீங்கி கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இந்தப் பிரச்சனை அடிக்கடி உங்க வீட்டில் வருமா? அப்படி என்றால் குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்க ஏதோ ஒரு இடையூறு இருக்கிறது என்று தான் அர்த்தம்.

அன்னோன்யமாக வாழ வேண்டும். சிறந்த தம்பதியராக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அந்த பஞ்சில் இருந்து இரண்டு பஞ்சினை எடுத்து ஒன்றாக பாம்பு பின்னி கொண்டிருப்பது போல திருகிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சுத்தமான மண் அகல் விளக்கில் இந்த திரியை போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி உங்களுடைய இஷ்ட தெய்வம், குலதெய்வம் யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் வேண்டிக் கொள்ளலாம். இப்படி செய்யும் பொழுது நிச்சயம் தம்பதியருக்குள் இருக்கும் விரிசல் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்!

- Advertisement -