வெறும் 4 மா இலைகள் இருந்தால் போதும். 4 மாமரத்தையே உருவாக்கி விடலாம். அது எப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா?

- Advertisement -

நம் வாழ்க்கை முறையே இயற்கையோடு இணைந்து வாழ்வது தான். இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது நம்மைச் சுற்றி நல்ல சுற்றுச்சூழல், பசுமையான சுற்றுப்புறம், பருவ நிலைக்கேற்ற உணவு, உடை இப்படி என இயற்கையோடு இணைந்து வாழ்வது என்று, சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு உள்ளது. இப்போது அது எல்லாம் வெறும் புத்தகத்திலும் ஏதாவது ஒரு பக்கத்தில் செய்தியாக மட்டுமே படிக்கும் அளவு நம் சூழ்நிலைகள் மாறிவிட்டது.

இயற்கை என்ற உடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது மரம் செடி கொடிகள் தான். முன்பெல்லாம் ஒரு வீடு என்று இருந்தால் அதை சுற்றி கண்டிப்பாக ஏதாவது ஒரு மரமும், ஒரு சில பூச்செடிகளும் கட்டாயமாக இருக்கும். இப்போதெல்லாம் மனிதர்கள் வசிக்கவே இடமில்லாத அளவிற்கு தான் வீடுகள் உள்ளது. இதில் மரம் செடி கொடிகளை எங்கு வைப்பது. அந்த குறையை போக்கும் படி அதிக அளவில் மாடித்தோட்டம் போன்றவைகள் பெருகி வருகிறது.

- Advertisement -

இப்படி தோட்டம் வைத்து இருப்பவர்கள் எதாவது ஒரு கார்டன் சென்று செடி வாங்கி வந்து வளப்பார்கள். ஒரு செடி பதியம் போட்டு வளர்ப்பது என்றால் அது கொஞ்சம் கஷ்டம் தான். செடிகளுக்கே என்றால் மரம் கேட்கவே வேண்டாம். ஆனால் நான்கு மாவிலை இருந்தால் நான்கு மா மரத்தையே உருவாக்க முடியும் என்பது எவ்வளவு ஆச்சர்யம். அது எப்படின்னு இந்த பதிவை படிச்சு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

ஒரு மரத்திலிருந்து நல்ல பிரஷ் ஆன நாலு மாவிலைகளை எடுத்து வந்து தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு இரண்டு வாழைப்பழங்கள் தேவை. எந்த பழமாக இருந்தாலும் பரவாயில்லை. அதை எடுத்து இரண்டாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். இப்போது அலசி வைத்து இலையின் காம்பு பகுதியில் ஒரு சிறிய அளவு வெட்டி எடுத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு கற்றாழை எடுத்து அதை இரண்டாக நறுக்கி அதில் இந்த இலைகளை சொருகி வைத்து விடுங்கள். அதன் பிறகு 15 நிமிடம் கழித்து கற்றாழையில் இருந்து மாவிலையை எடுத்து நறுக்கி வைத்த வாழை பழத்தில் சொருகி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு மண் தொட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு செடி புதிதாக வைக்க நாம் எப்படி தொட்டியை தயார் செய்வோமோ அதே போல் செய்து கொள்ளுங்கள். மணல் மிகவும் இறுக்கமாகவும் அதே நேரத்தில் மிகவும் தளர்வாகவும் இருக்கக் கூடாது. அதில் நீங்கள் எந்த உரங்களை கலந்தாலும் சரி. அந்த மண்ணில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த நாலு வாழைப்பழத்தை சொருகி இலையுடன் தொட்டியில் ஒரு அங்குலம் இடைவெளி விட்டு விட்டு காம்பு பகுதி உள்ளேயேயும் மாவிலை வெளியே தெரியும் படி அப்படியே தொட்டியில் புதைத்து வைத்து விடுங்கள்.

நீங்கள் தினமும் தண்ணீர் தெளித்து வந்தாலே போதும். அதிகமாக தண்ணீர் தெளிக்க கூடாது. முழு வெயிலிலும் வைக்க கூடாது. நல்ல நிழலான இடத்தில் வைத்து தண்ணீர் தெளித்தால் மட்டும் போதும். அதன் பிறகு எழுவது நாள் கழித்து எடுத்துப் பாருங்கள். நீங்கள் நட்டு வைத்த வாழைப்பழம் மண்ணோடு மக்கி உரமாகி இருக்கும். அதில் சொருகி இருந்த இலையின் காம்பை சுற்றிலும் நன்றாக வேர் விட்டு அது ஒரு மரமாக வளர்வதற்கு தயாராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ராக்கெட் வேகத்தில் முடியை வளர செய்யும் வெந்தயம். தாறுமாறான முடி வளர்ச்சியை பார்த்து மிரண்டு போயிடுவீங்க.

இதன் பிறகு வேர் விட்ட ஒவ்வொரு இலையும் தனியாக எடுத்து மண் தொட்டியில் நட்டு வைத்தும் வளர்க்கலாம், அல்லது உங்கள் வீட்டை சுற்றி இடம் இருந்தால் அங்கேயும் நட்டு வளர்க்கலாம். அது உங்கள் விருப்பம். இந்த முறை சற்று வித்தியாசமானது தான் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -